search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெங்கு கொசு உற்பத்தியை தடுப்பது குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது"

    • சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்
    • செலவினங்களை மதிப்பீடு செய்வது குறித்தும் தீர்மானம் இயற்றப்பட்டது

    காவேரிப்பாக்கம்:

    பனப்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி மன்றக் கூட்டம் நடைபெற்றது.

    பேரூராட்சித் தலைவர் கவிதா சீனிவாசன் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் தெருக்களில் கழிவுநீர் தேங்காமல் இருப்பதற்காக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.

    மேலும் அரக்கோணம்-ஒச்சேரி செல்லும் சாலை 4 வழிச்சா லையாக விரிவாக்கம் செய்ய உள்ளதால் பனப்பாக்கம் பேரூராட்சி வழியே செல்லும் குடிநீர் குழாய்களை இடம் மாற்றியமைக்க ஆகும் செலவினங்களை மதிப்பீடு செய்வதுகுறித்தும் தீர்மானம் இயற்றப்பட்டது.

    மழைக்காலம் என்பதால் அனைத்து வார்டுகளிலும் டெங்கு கொசு உற்பத்தியை தடுப்பது குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. இதில் இளநிலை உதவி யாளர் மோகனகிருஷ்ணன், பேரூராட்சி மன்ற உறுப்பி னர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    ×