search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட கும்பல்"

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • 2 பேரின் செல்போன்களை பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை, சிப்காட் அடுத்த கொண்ட குப்பம் கிராமம்,சிலோன் காலனி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த வர்கள் ரவிகுமார் (42), மணிகண்டன்(40).

    இவர்கள் 2 பேரும் கடந்த மாதம் 23-ந் தேதி இரவு பள்ளேரி- வசூர் சாலையில் பொன்னை ஆற்று பாசன கால்வாய் பாலத்தில் அமர்ந்து மது குடித்தாக தெரிகிறது.

    அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட கும்பல் ரவிக்குமார் மற்றும் மணிகண்டனை தாக்கிவிட்டு ரவிக்குமார் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் பணம், மற்றும் 2 பேரின் செல்போன்களை பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர்.

    இதில் ரவிக்குமார் காயம் அடைந்தார். பூட்டுதாக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இச்சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    ×