என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மூட்டு மாற்று அறுவை சிகிச்சை"
- டாக்டர். ஐசக் சுந்தர்சென் தகவல்
- நோயாளிகள் வந்து மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர்
குழித்துறை :
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் டாக்டர் ஐசக் விபத்து மற்றும் எலும்பு முறிவு மருத்துவமனையில் கடந்த 20 ஆண்டுகளாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது. தற்போது இங்கு அதி நவீன சிகிச்சை மூலம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முறை புதிதாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவமனை நிர்வாக இயக்குனரும் தலை மை மருத்துவ நிபுணருமான டாக்டர். ஐசக் சுந்தர்சென் தெரிவித்ததா வது:-
டாக்டர் ஐசக் மருத்துவமனையில் இடுப்பு மூட்டு, முழங்கால் மூட்டு, தோள்பட்டை மூட்டு மற்றும் கை முழங்கை மூட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்கள் மற்றும் துபாய், ஓமன், மாலத்தீவு போன்ற நாடுகளில் இருந்தும் நோயாளிகள் வந்து மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். இதற்கான அல்ட்ரா மாட்யூல் கிருமி தொற்றினை தடுக்கும் முறையில் அமைந் துள்ள லேமினார் பிலோ அறுவை சிகிச்சை அரங்கு களுடன் மருத்துவ குழுவின ரும் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள், அறுவை சிகிச்சைக்குப் பின் நோயா ளிக்கு வலி இல்லாமல் இருக்க நெர்வ் பிளாக் முறை கையாளப்பட்டு வரு கிறது. நோயாளிகள் அறுவை சிகிச்சை முடிந்த மறுநாளே வலிகள் எதுவும் இல்லாமல் எழுந்து நடக்கக் கூடிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் நவீன முறையான பயோ பாண்ட்சிவ பினிஸ் தி நோ அலர்ஜினீ அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதற்கான நவீன கருவி வரவழைக்கப் பட்டு இந்த சிகிச்சை முறை செய்யப்பட்டு வருகிறது. இந்த நவீன சிகிச்சை மூலம் நோயாளிக்கு ஒவ்வாமை ஏற்படாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்