என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வராக நதி"
- பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
- போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ஆற்றுப்பகுதிக்கு வருபவர்களை திருப்பி அனுப்புகின்றனர்.
தேனி:
பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சோத்துப்பாறை அணை முழுகொள்ளளவை எட்டியதால் உபரிநீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. மேலும் கல்லாறு, கும்பக்கரை, செலும்பாறு நீரும் அதிகரித்து உள்ளதால் வராக நதியில் இருகரைகளையும் ஒட்டியபடி தண்ணீர் செல்கிறது. இதனால் ஆற்றங்கரை பகுதிகளான பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், குள்ளப்புரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆற்றில் இறங்க வேண்டாம் என பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதேபோல் போடி கொட்டக்குடி, போடி மெட்டு, முந்தல், குரங்கனி ஆகிய பகுதிகளில் பெய்த கனமழையால் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. போலீசாரும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ஆற்றுப்பகுதிக்கு வருபவர்களை திருப்பி அனுப்புகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்