search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொட்டகையிலோ கட்டி பாதுகாப்பாக வைக்க வேண்டும்"

    • கண்காணிப்பு கேமராக்களை அமைக்க வேண்டும் என ஆலோசனை
    • 100 என்ற எண்ணுக்கு உடனடியாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இரவு நேரத்தில் மாடுகள் திருடு போகிறது.

    இதை தடுக்க திமிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி உத்தரவின் பேரில் திமிரி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் பொதுமக்களுக்கு போலீசார் மூலமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள் தாங்கள் வைத்திருக்கும் பசு மாடுகளை தனியாக கட்டாமல் தட்டியிலே அல்லது கொட்டகையிலோ கட்டி பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

    இரவில் யாரேனும் சந்தேகம் படும்படியாக நபர்களை கண்டால் 100 என்ற எண்ணுக்கு உடனடியாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். மாடுகள் திருடு போவதை தடுக்க பொதுமக்கள் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கிராமங்களில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களை அமைக்க வேண்டும் உட்பட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

    இதில் திமிரி போலீசார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×