search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றவாளிகள் கணக்கெடுப்பு"

    • பதிவேட்டில் இடம் பெற்றவர்களின் விவரங்கள் சேகரிப்பு
    • நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி நடவடிக்கை

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 18 போலீஸ் நிலையங்கள் உள்ளது. இதில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணித்து கணக்கிட வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி உத்தரவிட்டார்.

    இதையடுத்து அனைத்து போலீஸ் நிலையங்களிலும் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கணக்கெடுப்பு பணி தீவிரம் அடைந்துள்ளது.

    மேலும் அவர்களை தொடர்ந்து கண்காணிக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் பல்வேறு குற்றம் செய்தவர்கள் குறிப்பாக சந்தேக நபர்கள், ரவுடிகள் போன்ற வர்களுக்கான சரித்த பதிவேட்டில் தற்போது 56 குற்றவாளிகளின் பெயர் இடம் பெற்றுள்ளது.

    அதேபோல் அரக்கோணம் டவுன் போலீஸ் நிலைய குற்றவாளிகள் பதிவேட்டில் 88 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த குற்றவாளிகள் எங்கு இருக்கிறார்கள், அவர்களுடைய நடவடிக்கை என்ன, என்பது உள்ளிட்டவற்றை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை யொட்டி குற்றவாளிகள் கணக்கெடுக்கும் பணி தீவிரமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    ×