என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்த கூடாது"
- மத்திய அரசு மின் துறையில் தனியார் நிறுவனங்களை ஈடுபடு்த்த கூடாது என்று ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
- ஸ்மார்ட் மீட்டர் பொறுத்த கேரளா மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு மின் துறையில் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்த கூடாது என மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
இது குறித்து தருமபுரி மாவட்டம், அரூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
மின்சார துறையில் மின் உற்பத்தி, மின்சார விநியோகம், மின்சார பயன்பாடுகளின் கணக்கெடுப்பு உள்ளிட்ட பணிகளுக்கு தனியார் நிறுவனங்களை பயன்ப டுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. முதல்கட்டமாக அனைத்து மாநிலங்களிலும் ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்தும் பணிகள் தொடங்கப்படவுள்ளது.
இந்த ஸ்மார்ட் மீட்டர் மூலம் கணக்கெடுப்பு மற்றும் கட்டண நிர்ணயம் செய்யும் பணிகளை தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ளும். இதனால் ஏழை, எளிய மக்கள், சிறு, குறு தொழில் செய்பவர்கள், கைத்தறி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப் படுவார்கள். கேரளா மாநிலத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொறுத்த அந்த மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதேபோல், தமிழக அரசும் மின்சார துறையில் ஸ்மார்ட் மீட்டர் பொறுத்துவதை தடுக்க வேண்டும்.மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இம் மாதம் 15ந் தேதி முதல் பிரசார இயக்கம் நடத்தப்படவுள்ளது. சென்னிமலையில் இம்மாதம் 9 ந்தேதி, மத நல்லிணக்கம் மற்றும் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ.கட்சி சார்பில் 11 கட்சிகள் இணைந்து பொதுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.
தருமபுரி மாவட்டம், வாச்சாத்தியில் வன்கொ டுமையால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்க ளுக்கு தேவையான வேலைவாய்ப்பு, வீடுகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தமிழக அரசு மேம்படுத்த வேண்டும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்