search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வன்முறை குறித்து விழிப்புணர்வு"

    • பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது
    • தடுக்கும் முறைகள் குறித்து விளக்கினர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பி.டி.ஓ அலுவலகத்தில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் வடிவேலு தலைமை தாங்கினார்.

    துணை தலைவர் தீனதயாளன், பி.டி.ஓக்கள் பிரபாகரன், ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சமூக பாதுகாப்பு துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பணியாளர் பார்த்திபன் கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், குழந்தை திருமணம், குழந்தை கடத்தல், குழந்தைகள் மீதான வன்முறை, குழந்தை தொழிலாளர் போன்றவற்றை தடுக்கும் முறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் வட்டார ஒருங்கினைப்பாளர்கள், கோமதி, சுகந்தி, ஒருங்கினைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தேன்மொழி, வருவாய் ஆய்வாளர் சுரேஷ், நெமிலி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×