search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொள்ளாச்சி வாரச்சந்தை"

    • கேரளா மாநிலத்தில் இருந்து நீண்ட காதுகளை உடைய ஜமுனா பாரி ரக ஆடுகள் அதிகம் விற்பனைக்கு வந்திருந்தன.
    • ஆடுகளை வாங்குவதற்காக அதிகாலை 4 மணி முதலே நூற்றுக்கணக்கான வியாபாரிகள் குவிந்தனர்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் வாரந்தோறும் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம்.

    அதிகாலையில் தொடங்கும் விற்பனையில் பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கி செல்வது வழக்கம். புரட்டாசி மாதம் என்பதால் கடந்த சில வாரங்களாக ஆடுகள் விற்பனை மந்தமாக இருந்தது. இந்தநிலையில் நாளை மறுநாள் (12-ந் தேதி) தீபாவளி பண்டிகை என்பதால் பொள்ளாச்சி வாரச்சந்தைகளில் நேற்று ஆடுகள் விற்பனை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

    தமிழகத்தில் நாட்டு ஆடுகள் குறைவாக விற்பனைக்கு வந்திருந்தன. கேரளா மாநிலத்தில் இருந்து நீண்ட காதுகளை உடைய ஜமுனா பாரி ரக ஆடுகள் அதிகம் விற்பனைக்கு வந்திருந்தன. ஆடுகளை வாங்குவதற்காக அதிகாலை 4 மணி முதலே நூற்றுக்கணக்கான வியாபாரிகள் குவிந்தனர். 5 கிலோ எடையுள்ள ஆடு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனை ஆனது. 20 கிலோ எடையுள்ள ஆடு ரூ.17 ஆயிரம் முதல் ரூ.1 ஆயிரம் வரை விற்பனையானது. பொள்ளாச்சியில் சுமார் ரூ.2.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆகி உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×