search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்"

    • மேகமலை அருவிக்கு விடுமுறை தினத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் மேகமலை அருவியில் குவிந்தனர்.
    • வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் கோம்பைத்தொழு அருகே மேகமலை அருவி அமைந்துள்ளது. இப்பகுதியில் கடந்த 1 வாரத்துக்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக தற்போது அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    இதனால் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினந்்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிக்கு வந்து குளித்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் வெள்ளப்பெருக்கு காரணமாக கம்பம் அருகே சுருளி அருவி மற்றும் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி உள்ளிட்டவற்றுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் மேகமலை அருவிக்கு எந்த வித தடையும் விதிக்கப்படாத காரணத்தால் விடுமுறை தினத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் மேகமலை அருவியில் குவிந்தனர்.

    வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து அருவியில் குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் காணப்பட்டதால் மேகமலை வனத்துறையினர் மற்றும் மயிலாடும்பாறை போலீசார் அருவியில் தொடர்ந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    ×