search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துப்புரவு பணியாளர் மர்மச்சாவு"

    • 10ம் வகுப்பு வரை படித்து விட்டு தனியார் மஹாலில் கடந்த 4 ஆண்டுகளாக துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தார்.
    • சம்பவத்தன்று வேலைக்கு சென்ற முத்துப்பாண்டி இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

    தேனி:

    பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த நாகராஜ் மகன் முத்துப்பாண்டி (வயது 28). இவர் 10ம் வகுப்பு வரை படித்து விட்டு தனியார் மஹாலில் கடந்த 4 ஆண்டுகளாக துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

    சம்பவத்தன்று வேலைக்கு சென்ற முத்துப்பாண்டி இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரது உடல் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    தனது மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக நாகராஜ் அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×