என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சீதாகல்யாணராமர்"
- ஞாயிறு திருத்தலம் சென்னையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
- சென்னையில் உள்ள நவக்கிரக தலங்களில் இந்த தலம் சூர்ய தலம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.
ஞாயிறு கோவில் பற்றிய 25 பயனுள்ள தகவல்கள்
1.ஞாயிறு திருத்தலம் சென்னையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
செங்குன்றத்தில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் இருக்கிறது.
2. சோழ மன்னர் கட்டிய இந்த கோவிலில் பல்லவ மன்னர்கள், சேர அரசர்கள், விஜயநகர மன்னர்கள் திருப்பணி செய்து வழிபட்டுள்ளனர்.
3. இத்தலத்து ஈசன் தாமரைப்பூவில் இருந்து தோன்றியவர் என்பதால் புஷ்பரதேஸ்வரர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
4. இத்தலத்தில் 14 செப்பு திருமேனிகள் உள்ளன.
அவை அனைத்தும் சோழர் கால படைப்புகளாகும்.
ஆலயத்தில் தனி அறையில் இந்த செப்பு சிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
5. சென்னையில் உள்ள நவக்கிரக தலங்களில் இந்த தலம் சூர்ய தலம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.
6. இங்குள்ள சூரிய பகவானுக்கு கோதுமை பொங்கல் அல்லது கோதுமை பாயாசம் படைத்து வழிபட்டால்
கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் ஊடல்கள் தீரும்.
பிரிந்து போன தம்பதிகளை மீண்டும் ஒன்று சேர்க்கும் ஆற்றலும் இத்தலத்துக்கு உண்டு.
7. வேண்டுதல் நிறைவேறிய பிறகு இத்தலத்துக்கு வந்து சூரிய பகவானுக்கு வஸ்திரம் சார்த்தி வழிபாடு செய்கிறார்கள்.
8. இத்தலத்தின் தலமரமாக நாகலிங்க மரம் உள்ளது. தல புஷ்பமாக செந்தாமரை மலர் போற்றப்படுகிறது.
9. இத்தலத்துக்கு செல்லும் போது, பஞ்சேஷ்டி, ஆண்டார் குப்பம், சிறுவாபுரி ஆகிய இடங்களுக்கும் சென்று வரும்
வகையில் பயணத்தை அமைத்துக் கொண்டால், அன்றைய தினம் மிகச்சிறந்த ஆன்மிக பயண தினமாக அமையும்.
10. ஞாயிறு கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகள் ஒரு காலத்தில் செல்வ வளம் பெற்று திகழ்ந்தன.
இதனால் அந்த பகுதி, 'ஞாயிறு நாடு' என்று பெயர் பெற்றிருந்தது.
11. மூர்ததி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புகளும் ஒருங்கிணைந்த தலமாக ஞாயிறு தலம் உள்ளது.
12. கருவறையில் மூலவர் புஷ்பரதேஸ்வர் பஞ்சாசனத்தில் அமர்ந்துள்ளார்.
இவர் சுயம்புவாக தோன்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
13. சித்திரை மாதம் 1ந்தேதி முதல் 5ந்தேதி வரை ஈசன் மீதும் அம்பிகை மீதும் சூரிய ஒளிவிழும்.
தமிழ்ப்புத்தாண்டை சூரிய பகவான் இத்தலத்து ஈசன் காலடியில் பட்டு ஆசி வாங்கி தொடங்குவதாக ஐதீகம்.
சூரியனின் இந்த வழிப்பாட்டை அந்த 5 நாட்களும் காலை 6.10 மணி முதல் 6.30 மணி வரை பக்தர்கள் காணலாம்.
14. இத்தலம், கண்நோய், சூரியப்புத்தி தோஷம், பித்ரு சாபம் ஆகிய மூன்றையும் தீர்ப்பதில் புகழ் பெற்றது.
15. சங்கிலி நாச்சியாருக்கு இத்தலத்தில் தனி சன்னதி உள்ளது.
அமாவாசை தினத்தன்று இந்த சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
16. இத்தலத்துக்கு விருட்சமான நாகலிங்க மரம் சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கணிக்கப்பட்டுள்ளது.
குழந்தை வரம் வேண்டுபவர்கள் இந்த நாகலிங்க மரத்தில் தொட்டில் கட்டி தொங்க விடுவதுண்டு.
17. தல விருட்சமான நாகலிங்க மரம் அருகே மூன்று நாகர்சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
திருமண தடையால் தவிக்கும் இளம் பெண்கள், அந்த நாகர் சிலைகளை சுற்றி மஞ்சள் கிழங்கு சேர்த்து, மஞ்சள் கயிற்றை சுற்றி கட்டினால் உடனடியாக பலன் கிடைக்கிறது.
18. ஞாயிறு தலத்தில் தினமும் சிவாகம முறைப்படி பூஜைகள் நடத்தப்படுகிறது.
19. ஆவணி மாதம் சூரிய பகவானுக்கு இத்தலத்தில் 108 சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது.
20. கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை புஷ்பரமேஸ்வரருக்கு ருத்ர ஹோமம், ஏசதின லட்சார்ச்சனை நடத்தப்படுகிறது.
21. புராதன பழமை சிறப்பு மிக்க இந்த ஆலயத்தில் பிரம்மோற்சவம் நடத்தப்படாமல் உள்ளது.
இது உண்மையிலேயே மிகப்பெரும் குறையாகும்.
பக்தர்கள் முன் வந்து ஒத்துழைப்புக் கொடுத்தால் ஆண்டுதோறும் ஜாம்... ஜாம்... என்று பிரம்மோற்சவம் நடத்தலாம்.
22. ஞாயிறு ஆலயத்தில் வாகனங்கள் ஒன்று கூட இல்லாதது பெரும் குறையாகும்.
வசதி வாய்ப்புள்ள பக்தர்கள் தங்களால் இயன்ற வாகனங்களை செய்து ஆலயத்துக்கு அன்பளிப்பாக கொடுத்தால் பெரும் புண்ணியம் வந்து சேரும்.
23. ஞாயிறு ஆலய கருவறை விமானம் 'அஷ்டாங்க விமானம்' என்ற முறைப்படி கட்டப்பட்டுள்ளது.
மிக, மிக பழமையான ஆலயங்களில் மட்டுமே இத்தகைய அஷ்டாங்க விமான அமைப்பை காண முடியும்.
24. தினமும் இந்த தலத்தில் 2 கால பூஜை நடத்தப்படுகிறது.
காலை 8 மணிக்கு ஒரு தடவையும், மாலை 6 மணிக்கு மற்றொரு தடவையும் அபிஷேகம் நடத்தப்படுகிறது.
25. ஞாயிறு கோவில் தினமும் காலை 7.30 மணி முதல் மதியம் 11.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் திறந்து இருக்கும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனத்துக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்படுகிறது.
- சீதாசமேத சொர்ண கல்யாணராமருக்கு அடிக்கடி அபிஷேக அலங்காரப் பூஜைகள் நடக்கும்.
- அபிஷகேத்திற்கு சந்தனம் வழங்கினால், சொர்க்க வாழ்வு கிடைக்கும்.
சீதாசமேத சொர்ண கல்யாணராமருக்கு அடிக்கடி அபிஷேக அலங்காரப் பூஜைகள் நடக்கும்.
இந்த அபிஷேகத்துக்கான பொருள்களாக எந்தெந்த பொருட்களை வழங்குவதன் மூலம் என்னென்ன பலன்கள் பெறலாம் என்ற விபரம் வருமாறு:-
பஞ்சாமிர்தம் - வெற்றி
பால் - நீண்ட ஆயுள்
தேன் - இசை ஞானம்
நெய் - சுகமான வாழ்வு
பன்னீர் - புகழ்
சந்தனம் - சொர்க்க வாழ்வு
பூக்கள் - மகிழ்ச்சி
குங்குமம் - மங்களம்
தண்ணீர் அபிஷேகம்- மனசாந்தி
நல்லெண்ணை - பக்தி
வாசனை திரவியம் - ஆயுள் வலிமை
மஞ்சள்பொடி - ராஜவசியம்
வாழைப்பழம் - பயிர் விருத்தி
மாம்பழம் - சகல வசியம்
பலாப்பழம் - உலக வசியம்
திராட்சைபழம் - பயம் நீங்குதல்
மாதுளைப்பழம் - பகை நீங்குதல்
தேங்காய்த்துருவல் - அரசுரிமை
தயிர் - சந்தான (மக்கள்) விருத்தி
இளநீர் - நல்ல புத்திரபேரு
கருப்பஞ்சாறு - சாஸ்திரத் தேர்ச்சி
பஞ்சகவ்யம் - ஆத்மசுத்தி பால நிவர்த்தி
எலுமிச்சைப்பழம் - யம பயம் நீக்கும்
நெல்லி முள்ளிப்பொடி- நோய் நீக்கம்
வஸ்திரம் - ராஜயோகம்
புஷ்பம் - மகிழ்ச்சி
சந்தனம் - செல்வம் சுவர்க்கயோகம்
கஸ்தூரி - வெற்றி உண்டாகுதல்
கும்பம் (ஸ்நாயணம்)- அசுவமேத யாகப்பலன்
- அப்போது சீதா சமேத சொர்ண கல்யாணராமர், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர் சிலைகள் கிடைத்தன.
- முழுவதும் பச்சை நிற மரகத கல்லால் அந்த சிலை வடிவமைக்கப்பட்டு இருந்தது.
ஞாயிறு புஷ்பரதேஸ்வரர் ஆலயத்தின் நுழைவாயில் இடது பக்கம் சீதா சமேத சொர்ண கல்யாணராமர் ஆலயம் உள்ளது.
இது சமீபத்தில் உருவான ஆலயம்தான்.
ஆனால் இந்த ஆலயத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் இறை மூர்த்தங்கள் அனைத்தும் பல நூற்றாண்டுகள் முற்பட்டவை.
கடந்த 2002-ம் ஆண்டு ஞாயிறு கிராமத்தில் பள்ளிக்கூடத்தை சீரமைக்க பள்ளம் தோண்டினார்கள்.
அப்போது சீதா சமேத சொர்ண கல்யாணராமர், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர் சிலைகள் கிடைத்தன.
அந்த சிலைகளை தொல்பொருள் துறையினர் ஆய்வு செய்தபோது பல ஆச்சரியமான தகவல்கள் தெரியவந்தன.
குறிப்பாக சக்கரத்தாழ்வார் சிலை சுமார் 800 ஆண்டுகள் பழமையானது என்று தெரியவந்தது.
முழுவதும் பச்சை நிற மரகத கல்லால் அந்த சிலை வடிவமைக்கப்பட்டு இருந்தது.
பல்லவ மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இந்த சிலை உருவாக்கப்பட்டிருப்பதும் தெரிந்தது.
இந்த சக்கரத்தாழ்வார் சிலையின் ஒரு பக்கத்தில் சுதர்சனரும், பின்பக்கத்தில் யோக நரசிம்மரும் வீற்றுள்ளனர்.
இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையும், கடைசி ஞாயிற்றுக்கிழமையும் "இத்தலத்தில் சுதர்சன ஹோமம்" நடத்தப்படுகிறது.
காலை 9 மணி முதல் 12 மணி வரை இந்த சுதர்சன ஹோமம் நடைபெறும்.
பக்தர்களும் இந்த ஹோமத்தில் பங்கேற்கலாம்.
வசதி உள்ளவர்கள் சுதர்சன ஹோமத்திற்கு நெய், பால், தயிர், தேன் போன்றவற்றை வாங்கிக் கொடுக்கலாம்.
சுதர்சன ஹோமம் செய்தாலோ அல்லது பங்கேற்றாலோ ராகு-கேது தோஷம் உடனே விலகி விடும்.
இத்தலத்து ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.
ஞாயிறு புஷ்பரதேஸ்வரர் ஆலயத்தில் சிவபெருமான், சூரியனை வழிபட்ட பிறகு மறக்காமல் அருகில் உள்ள சீதா சமேத கல்யாணராமரையும் வழிபடவும்.
மனதுக்கு அமைதி கிடைக்கும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்