search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடுகள் பலி"

    • நேற்று மாலை ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றார்.
    • கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே பாலசமுத்திரம்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட கத்தாங்கன்னி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 50). விவசாயியான இவர் தோட்டத்தில் ஆட்டுப்பட்டி அமைத்து சுமார் 50 செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார்.

    நேற்று மாலை ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றார். இன்று காலை சென்று பார்த்தபோது பட்டிக்குள் 35 ஆடுகள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு இறந்து கிடந்தது. மேலும் சில ஆடுகள் காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தது.

    இரவு நேரத்தில் வெறிநாய்கள் பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறியது தெரியவந்தது. இதையடுத்து கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை குழுவினர் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இறந்து போன ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ. 2.50 லட்சத்திற்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. காங்கயம் பகுதிகளில் கால்நடைகளை தாக்கி வரும் வெறிநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×