என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாசுரம்-11"
- செல்வ குடும்பத்தில் பிறந்தவளே எழுந்து வா!
- சிவந்த மேனியில் வெண்மையான திருநீற்றை பூசிய சிவபெருமானே!
திருப்பாவை
பாடல்
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து,
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்,
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
இளம் கன்றுகளுடைய பசுக்களிடம் இருந்து பால் கறக்கும் ஆயர் குலத்தினர், வலிய வரும் பகைவர்களை எதிர்த்து அவர்கள் வீரத்தை அழியும்படி செய்வர். அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த பொற்கொடியைப் போன்ற பெண்ணே! மயில் போன்றவளே! புற்றில் வாழும் நாகத்தின் படம் போன்ற பீடம் உடையவளே! செல்வ குடும்பத்தில் பிறந்தவளே எழுந்து வா! நாங்கள் அனைவரும் உனது வீட்டு முற்றத்தில் நின்று கார்மேக வண்ணன் கண்ணனின் பெயர் சொல்லிப் பாடுகிறோம். ஆனால் நீ எழாமலும், பேசாமலும் உறங்கிக் கொண்டே இருக்கிறாய். அதன் பொருள் என்ன? எழுந்து வா! இறைவன் புகழ் பாடுவோம்.
திருவெம்பாவை
பாடல்
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்
செய்யாவெண் ணீறாடீ செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம்
உய்ந்தொழிந்தோம் எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.
விளக்கம்
நெருப்பை போன்ற சிவந்த மேனியில் வெண்மையான திருநீற்றை பூசிய சிவபெருமானே! சிறிய இடுப்பையும், மை தீட்டப்பட்ட பெரிய கண்களையும் கொண்ட பராசக்தியின் கணவனே! எல்லா செல்வங்களையும் உடையவனே நீ எங்களை ஆட்கொள்வது உனக்கு ஒரு விளையாட்டு! உன் விளையாட்டினால் அடியார்கள் என்ன அருளைப் பெறுவார்களோ, அவற்றையெல்லாம் நாங்களும் பெற்றோம். வண்டுகள் நிறைந்துள்ள குளத்தில் அவை ஒலி எழுப்பி பறந்து செல்லும்படி நீரில்மூழ்கி எழுந்து உன்னை வாழ்த்திப்பாடினோம்! உன்னை நாடிவந்தோம்! இனியும் நாங்கள் வருந்தாமல் இருக்க எங்களை கைவிடாமல் காத்தருள வேண்டும்!
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்