என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கோவை பெங்களூரு"
- 7 ஏ.சி., பெட்டி சேர்கேர் மற்றும் ஒரு எக்சியூட்டிங் சீட்டர் பெட்டி இணைக்கப்பட்டிருக்கும் என தகவல் கிடைத்துள்ளது.
- சேலம், தருமபுரி, ஓசூர் வழியாக, ‘வந்தே பாரத்’ ரெயில் இயக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளதால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தருமபுரி:
பெங்களூரு-கோவை இடையே இயக்கப்படும், 'வந்தே பாரத்' ரெயில், சேலம், தருமபுரி, ஓசூர் வழியாக செல்ல இருப்பதால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் பகுதியிலிருந்து, கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு குறைந்த நேரத்தில் சுமூகமான மற்றும் விரைவான பயணத்தை பயணிகள் மேற்கொள்ளும் வகையில், வருகிற 30-ந் தேதி முதல், 'வந்தே பாரத்' ரெயில் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோவையிலிருந்து அதிகாலை, 5.00 மணிக்கு புறப்படும், 'வந்தே பாரத்' ரெயில் திருப்பூர் நிலையத்துக்கு காலை 5.42 மணிக்கும், ஈரோட்டிற்கு காலை 6.27 மணிக்கும், சேலத்திற்கு, 7.20 மணிக்கும், தருமபுரிக்கு 8.32 மணிக்கும், ஓசூருக்கு 10.05 மணிக்கும் சென்றடையும். கடைசியில் பெங்களூரு கன்டோன்மென்ட் ரெயில்வே நிலையத்தை காலை 11.30 மணிக்கு அடையும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் மறுமார்க்கத்தில் பெங்களூரு கன்டோன்மென்ட் ரெயில்வே நிலையத்தில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் ஓசூருக்கு மதியம் 2.52 மணிக்கும், தருமபுரிக்கு மாலை 4.16 மணிக்கும், சேலத்திற்கு 5.53 மணிக்கும், ஈரோட்டிற்கு 6.45 மணிக்கும், திருப்பூருக்கு இரவு 7.25 மணிக்கும், கோவைக்கு, 8.00 மணிக்கும் சென்றடையும்.
இந்த ரெயிலில், 7 ஏ.சி., பெட்டி சேர்கேர் மற்றும் ஒரு எக்சியூட்டிங் சீட்டர் பெட்டி இணைக்கப்பட்டிருக்கும் என தகவல் கிடைத்துள்ளது.
கோவை-பெங்களூரு, 'வந்தே பாரத்' ரெயிலுக்கான கட்டண விபரமும் வெளியிடப்பட்டுள்ளது. சேலம், தருமபுரி, ஓசூர் வழியாக, 'வந்தே பாரத்' ரெயில் இயக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளதால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து இன்று வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்ட தருமபுரி ரெயில் நிலையத்தில் இன்று நடைபெற்றது. இந்த ரெயில் இன்று கோவையில் இருந்து சேலம் வழியாக 8.15 மணிக்கு வந்தது. பின்னர் 8.19 மணிக்கு புறப்பட்டது. வந்தே பாரத் ரெயில் தருமபுரி ரெயில் நிலையத்தை அடைந்ததும், பயணிகள் உற்சாகம் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்