search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டு"

    • கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 415 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
    • காயம் அடையும் வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    பொங்கலை பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அலங்காநல்லூர், அவனியாபுரம் உள்ளிட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் தயாராகி வருகின்றனர். இதற்கிடையே இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை தச்சன்குறிச்சியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. தச்சங்குறிச்சி விண்ணேற்பு அன்னை ஆலய ஆண்டுத்திருவிழா, புத்தாண்டையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்.

    இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில் இன்று காலை ஜல்லிக்கட்டு தொடங்கியது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிசாவலில் இருந்து சீறிப் பாய்ந்த வண்ணம் உள்ளன.

    280-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களத்தில் மாடுகளை பிடிக்க களம் இறங்கியுள்ளனர். மாடு பிடி வீரர்களுக்கு சைக்கிள், பீரோ, கட்டில், இருசக்கர வாகனம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன.

    ஆட்சியர் ஐ.எஸ். மெர்சி ரம்யா தலைமையில் நடைபெறும் ஜல்லிக்கட்டை, மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இந்த ஜல்லிக்கட்டுக்காக தச்சங்குறிச்சியில் வாடிவாசல், பார்வையாளர்கள் அரங்கு அமைத்தல் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு பணிகளும் புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது.

    ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளை பரிசோதிப்பதற்காக கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர்(பொ) ராமச்சந்திரன் தலைமையில் மருத்துவர்கள் குழு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    காயம் அடையும் காளைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரத்யேக ஆம்புலன்ஸ் வசதி, காயம் அடையும் வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் வசதி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    இந்த ஜல்லிக்கட்டையொட்டி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 415 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டை கண்காணிக்க பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

    ×