என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புதுவை காங்கிரஸ்"
- பாராளுமன்ற தேர்தல் நெருக்கத்தில் காங்கிரஸ், தி.மு.க. இடையிலான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தி.மு.க.வின் கண்டனத்திற்கு பதில் தெரிவிக்காமல், வாய்மூடி மவுனமாக உள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் சார்பில் நடந்த நல்லிணக்க பொங்கல் விழாவில் தி.மு.க.வை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற சுயேட்சை எம்.எல்.ஏ.வை அழைத்து பாராட்டியதற்கு தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் அந்த விழாவில், 2026 சட்டமன்ற தேர்தலில் சுயேட்சை எம்.எல்.ஏ.வுக்கு சீட் கிடைக்காவிட்டால், கூட்டணியை மறுபரிசீலனை செய்வோம் என காங்கிரஸ் தலைவர்கள் பேசியுள்ளனர். கூட்டணியை முடிவு செய்ய புதுவை மாநில தலைவர்களுக்கு அதிகாரம் அளித்தது யார்? என தி.மு.க.வினர் கேள்வி எழுப்பியுள்ளனர். தி.மு.க. மாநில அமைப்பாளரும், எதிர்கட்சித்தலைவருமான சிவா, தி.மு.க. தனது உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் நெருக்கத்தில் காங்கிரஸ், தி.மு.க. இடையிலான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. புதுவை மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில், தி.மு.க.வை பொது வெளியிலோ, கூட்டங்களிலோ விமர்சிக்கக்கூடாது என்றும், தி.மு.க.வுக்கு எதிர்ப்பான கருத்துக்களை சமூகவலை தளங்களில் பதிவு செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தி.மு.க.வின் கண்டனத்திற்கு பதில் தெரிவிக்காமல், வாய்மூடி மவுனமாக உள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் புதுவையில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இதனால் கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசல், அதிருப்தி வெற்றியை பாதிக்கும் என காங்கிரசார் அஞ்சுகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்