search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்"

    • நவீன வசதிகளுடன் ரெயில் நிலையம் கட்டப்பட்டுள்ளது.
    • அயோத்தி நகரத்தை சீரமைக்க வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன.

    அயோத்தி நகரத்தை கட்டமைக்க ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. அதில் தற்போது மட்டும் ரூ.66 ஆயிரம் கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அடுத்த 3 ஆண்டுகளில் இன்னும் ரூ.34 ஆயிரம் கோடிக்கு பணிகள் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

    நகரில் அத்தியாவசிய பணிகளான குடிநீர், பாதாள சாக்கடை, தெரு விளக்கு மற்றும் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. கோவில் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் சுமார் ரூ.1,000 கோடி அளவுக்கு அழகுப்படுத்தும் பணிகள் நடக்கின்றன. அயோத்தி நகரை கட்டமைக்க மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டு கொண்டு திட்டங்களை நிறைவேற்றி வருகின்றன.

    தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் ரூ.37 ஆயிரம் கோடி செலவில் அயோத்தி நகரை இணைக்கும் அனைத்து சாலைகளும் நான்கு வழிச்சாலைகளாக மாற்றப்பட்டு உள்ளன. இதுதவிர மாநில அரசின் நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.4 ஆயிரத்து 500 கோடிக்கு அயோத்தியில் சாலைகள், மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    நகரில் உள்ள சரயு நதிக்கரை அழகுப்படுத்தப்பட்டு உள்ளது. அங்குள்ள ராமர் படித்துறை சீரமைக்கப்பட்டு, இரவு நேரங்களில் மின்விளக்கு அலங்கார காட்சி நடத்தப்படுகிறது. சரயு நதி மூலம் 14 லட்சம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும் வகையில் ரூ.9 ஆயிரம் கோடியில் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    மேலும் சுமார் ரூ.350 கோடி செலவில், மரியதா புருஷோத்தம் ஸ்ரீ ராம் சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டு உள்ளது. அதே போல் அயோத்தி ரெயில் நிலையம் ரூ.430 கோடியில் சீரமைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு விமான நிலையங்களை விட நவீன வசதிகளுடன் இந்த ரெயில் நிலையம் கட்டப்பட்டு உள்ளது.

    * அயோத்தியில் உள்ள ஆராய்ச்சிக் கழகத்துக்கு சர்வதேச அந்தஸ்து பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

    * அயோத்தியில் அமைச்சரவை கட்டிடத்தை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நடத்தி அந்த நகருக்கு சிறப்பு சேர்த்துள்ளார்.

    * அயோத்தியை இணைக்கும் சாலைகள் தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டுள்ளன.

    * அயோத்தியில் 1407 ஏக்கரில் பசுமை நகரம் உருவாக்க ரூ.2182 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    * அயோத்தியில் ரூ.1,463 கோடி செலவில் அதி நவீன வசதிகளுடன் மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது.

    * அயோத்தியில் சக கஞ்ச் பகுதியில் இருந்து நயாகாட் சாலை வரை 1.94 கி.மீ. தூரத்துக்கு ரூ.845 கேடி செலவில் ராமர் பாதை உருவாக்கப்பட்டுள்ளது.

    * அயோத்தியில் ரூ.246 கோடி செலவில் ராஜரிஷி தசரதர் பெயரில் தன்னாட்சி அந்தஸ்து கொண்ட மருத்துவக் கல்லூரி உருவாக்கப்பட்டுள்ளது.

    * அயோத்தி ரெயில் நிலையம் ரூ.241 கோடி செலவில் சீரமைத்து புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    * அயோத்தியில் உள்ள அனைத்து மின் கம்பிகளும் ரூ.167 கோடி செலவில் பூமிக்குள் புதைக்கப்பட்டுள்ளன.

    * அயோத்திக்குள் ரெயில் பாதைகள் மீது ரூ.74 கோடியில் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

    * அயோத்தி முழுக்க ரூ.72 கோடி செலவில் பாரம்பரிய அலங்கார கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன.

    * மகரிஷி அருந்ததி பெயரில் ரூ.68 கோடி செலவில் வாகனம் நிறுத்தும் இடங்கள் கட்டப்பட்டுள்ளன.

    * பக்தி பாதையில் இருந்து ராமஜென்ம பூமி வரை 29 கி.மீ. தொலைவுக்கு ரூ.68 கோடி செலவில் பாதை கட்டப்பட்டுள்ளது.

    * ரூ.65 கோடி செலவில் அயோத்தி முழுவதும் சாலைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளன.

    * கலெக்டர் அலுவலகம் அருகே ரூ.37 கோடி செலவில் பிரமாண்டமான கார் நிறுத்தம் கட்டப்பட்டுள்ளது.

    * தீப உற்சவம் காட்டும் போது பக்தர்கள் வசதியாக உட்கார்ந்து பார்ப்பதற்காக ரூ.23 கோடியில் காலரிகள் கட்டப்பட்டுள்ளன.

    * ரூ.18 கோடியில் கழவுநீர் அகற்ற நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    * அயோத்திக்குள் வரும் 4 திசை சாலைகளிலும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் அழகுபடுத்தப்பட்டுள்ளன.

    * அயோத்தி முழுக்க முக்கிய இடங்களில் 410 பகுதிகளில் ரூ.12 கோடி செலவில் சூரிய சக்தி மின்சாரம் மூலம் விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

    * அயோத்தியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 264 விதமான திட்டப்பணிகளை மத்திய- மாநில அரசுகளின் பல்வேறு துறைகள் மேற்கொண்டுள்ளன.

    * அயோத்தியை 2031-ம் ஆண்டுக்குள் பூலோக சொர்க்கமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 34 நிறுவனங்களிடம் 250 திட்டப்பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை ரூ.80 ஆயிரம் கோடி செலவில் செய்து முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    * எதிர்காலத்தில் லக்னோவில் இருந்து அயோத்திக்கு காரில் சுமார் 2 மணி நேரத்துக்குள் செல்லும் வகையில் சாலைகள் மேம்படுத்தப்பட உள்ளன.

    * அயோத்தியில் செய்யப்படும் வசதிகள் மற்றும் பக்தர்கள் வருகை காரணமாக அந்த ஊர் மக்களின் வாழ்வாதாரம் கணிசமாக உயர உள்ளது.

    • அயோத்தியில் ராமருக்காக ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது.
    • கும்பாபிஷேக நேரத்தில் சொல்ல வேண்டிய மந்திரம்.

    உத்திரப்பிரதேச மாநிலத்தில் அயோத்தியில் ராமர் பிறந்த அந்த பூமியில், ராமருக்காக ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது. அந்த கோவில் கும்பாபிஷேகமானது இன்று நடைபெறுகிறது. இது நம்மில் பல பேருக்கு தெரிந்த விஷயம் தான். இருந்தபோதிலும் நாம் எல்லோரும் அயோத்திக்கு சென்று அந்த கும்பாபிஷேகத்தை பார்க்க கூடிய பாக்கியத்தை பெற முடியாது. நிறைய தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பாகும்.

    வாய்ப்பு கிடைப்பவர்கள் பார்த்து அந்த ராமபிரானின் ஆசிர்வாதத்தை பெறலாம். இதோட மட்டுமல்லாமல் ராமருக்கு கும்பாபிஷேகம் நடக்கக்கூடிய அன்றைய தினம், ராமபிரானின் ஆசீர்வாதத்தை முழுமையாக பெற, கும்பாபிஷேகத்தை நேரடியாக பார்த்த பலனை பெற, சொல்ல வேண்டிய ஒரு வரி மந்திரத்தை பற்றியும், நம் வீட்டில் செய்ய வேண்டிய சின்ன ஆன்மீகம் சார்ந்த வழிபாடு பற்றியும், இந்த பதிவை மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நேரத்தில் சொல்ல வேண்டிய மந்திரம்

    காலையில் வீட்டில் இருக்கும் பெண்கள் குளித்துவிட்டு உங்கள் வீட்டில் பெருமாளின் படம், ராமரின் பட்டாபிஷேகப்படம், அல்லது அனுமனின் திருவுருவப்படம் எது இருந்தாலும் சரி, அதை சுத்தபத்தமாக துடைத்து அதற்கு துளசி இலைகளை சூட்டிவிடுங்கள். பிறகு ஒரு சின்ன மண் அகல் விளக்கில் முதலில் நெய் ஊற்றி பஞ்சி திரி போட்டு தீபம் ஏற்றி `ஜெய் ஸ்ரீ ராம்' என்ற மந்திரத்தை சொல்லலாம். அப்படி இல்லை என்றால் `ஸ்ரீ ராம ஜெயம்' என்ற மந்திரத்தை சொல்லலாம்.

    இந்த இரண்டில் எந்த மந்திரத்தைச் சொன்னாலும் தவறு இல்லை. இரண்டு மந்திரத்தையும் மாற்றி மாற்றி சொன்னாலும் தவறு இல்லை. 27 முறை இந்த மந்திரத்தை சொல்லுங்கள். பிறகு அந்த தீபம் உங்களுடைய வீட்டில் திங்கட்கிழமை முழுவதும் இரவு 7 மணி வரை அணையா தீபமாக ஏற்றுவது ரொம்ப ரொம்ப சிறப்பு. முடியாதவர்கள் 1 மணி நேரம் தீபத்தை ஏற்றி வைத்து, குளிர வைக்கலாம் தவறு கிடையாது.

    முதல் 1 மணி நேரம் நெய்யில் தீபம் ஏற்றுபவர்கள், அடுத்தடுத்து நெய் ஊற்றி நாள் முழுவதும் விளக்கு எரிய வைக்க முடியாது என்ற சூழ்நிலையில் இருப்பவர்கள், நல்லெண்ணெய் ஊற்றி அந்த தீபத்தை நாள் முழுவதும் ஏற்றி வைக்கலாம். கும்பாபிஷேகம் நடக்கும் சமயத்தில் உங்களுடைய வீட்டில் இந்த தீப ஒளி சுடர் பிரகாசமாக இருந்தால் அந்த ஸ்ரீராமரை இந்த தீபச்சுடரின் மூலம் நீங்கள் தரிசனம் செய்யலாம்.

    சரியாக கும்பாபிஷேகம் நடக்கப் போகும் சமயத்தில் `ஸ்ரீ ராம ஜெயம்' மந்திரத்தை நம் மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருந்தால், அயோத்திக்கு சென்று ராமரை தரிசனம் செய்யவில்லை என்றாலும் சரி, அந்த ராமபிரானின் பரிபூரண ஆசியை நம்மால் பெற முடியும்.

    பூஜை அறையில் ஏற்ற வேண்டிய விளக்கை, சரியாக ராமபிரானுக்கு கும்பாபிஷேகம் நடைபெறக்கூடிய அந்த நேரத்திலும் ஏற்றுக்கொள்ளலாம் தவறு கிடையாது. காலையில் இருந்து நம் வீட்டில் தீபம் ஏற்றி, ராம மந்திரத்தை மனதிற்குள் உச்சரிப்பது, ராமபிரானை நினைப்பது நமக்கு கோடி புண்ணியத்தை தரும்.

    ×