search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்நாக் ரெசிப்பி"

    • சூறோஸ் ஸ்பெயின் நாட்டில் மிகவும் பிரபலமான ஸ்நாக்.
    • குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

    சூறோஸ் ஸ்பெயின் நாட்டில் மிகவும் பிரபலமான ஸ்நாக். இதை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் ஸ்பெயினில் உள்ள ஆடு மேய்பவர்களே. `சூறா' இன ஆடுகளின் கொம்புகளின் வடிவத்தில் இருப்பதால், இந்த இனிப்பிற்கு `சூறோஸ்' என்று பெயர் வந்தது என்று கூறப்படுகிறது.

    தேவையான பொருட்கள்.

    நெய்- 2 தேக்கரண்டி.

    சக்கரை- 2 தேக்கரண்டி.

    உப்பு- கால் தேக்கரண்டி.

    மைதா மாவு- 125 கிராம்

    சக்கரை- கால் கப்.

    ஏலக்காய் தூள்- கால் தேக்கரண்டி.

    செய்முறை:

    முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு 250 கிராம் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் 2 தேக்கரண்டி நெய், 2 தேக்கரண்டி சக்கரை, கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து தண்ணீரை 2 நிமிடம் கொதிக்க வைக்கவும். இப்போது தண்ணீரை இறக்கி விட்டு அதில் ஒரு கப் மைதா மாவு சேர்க்க வேண்டும். மாவை சேர்த்தவுடன் கட்டி இல்லாமல் நன்றாக கலந்து விட வேண்டும்.

    இப்போது மாவை ஒரு பவுலில் மாற்றி விட்டு அதை கைகளால் நன்றாக பிசைய வேண்டும். இப்போது மாவு தயார்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெயை ஊற்றி சூடாக்கி தயாராக வைத்திருக்கும் மாவை பைப்பிங் பேக்கில் போட்டு சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு நன்றாக பொரித்து எடுக்க வேண்டும். நன்றாக கோல்டன் பிரவுன் கலர் வந்ததும் அதனை எடுத்து விட வேண்டும்.

    சக்கரையை மிக்சியில் போட்டு கொர கொரப்பாக பவுடர் செய்துகொள்ள வேண்டும். இப்போது ஒரு பவுலில் கால் கப் சக்கரை, அத்துடன் கால் தேக்கரண்டி ஏலக்காய்த்தூள் சேர்த்துவிட்டு இரண்டையும் நன்றாக கலந்துவிட்டு பொரித்து வைத்திருக்கும் சூறோசை அதில் போட்டு பிரட்டி எடுக்க வேண்டும். இப்போது சுவையான சூறோஸ் தயார். இதை நியூட்ரெல்லா அல்லது கட்டியான சாக்லேட் சாசுடன் பரிமாறலாம் மிகவும் சுவையாக இருக்கும். இனி சூறோஸை வீட்டிலேயே செய்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுங்க, விரும்பி சாப்பிடுவார்கள்.

    • குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக் மிகவும் பிடிக்கும்.
    • சோராஃபளியின் மீது மசாலா பொடி தூவி, சட்னியுடன் பரிமாறவும்.

    தேவையான பொருட்கள்:

    கடலைமாவு - 1 கப்

    உளுந்தமாவு- அரை கப்

    பேக்கிங் பவுடர் - கால் டேபிள் ஸ்பூன்

    எண்ணெய் - பொரிப்பதற்கு

    காஷ்மீரி மிளகாய்த்தூள் - கால் டேபிள் ஸ்பூன்

    கொத்தமல்லித்தழை- 2 டேபிள் ஸ்பூன்

    புதினா இலை - 2 டேபிள் ஸ்பூன்

    இஞ்சி - 1 அங்குலத் துண்டு

    பச்சை மிளகாய்- 5

    மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்

    சிட்ரிக் அமிலம் - அரை சிட்டிகை

    உப்பு - தேவைக்கு

    ஐஸ்கட்டிகள் - தேவைக்கு

    பிளாக் சால்ட் - தேவைக்கு

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் உப்பு மற்றும் பேக்கிங் சோடாவை கலந்து அடுப்பில் வைத்து குறைவான தீயில் 3 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். அகலமான பாத்திரத்தில் கடலைமாவு ஒரு கப் மற்றும் உளுந்தமாவை கொட்டி சலித்து எடுக்கவும். பின்பு அந்த மாவில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்றாகக் கலக்கவும்.

    அதன்பிறகு தயாரித்து வைத்திருக்கும் பேக்கிங் சோடா கரைசலை சிறிது சிறிதாக ஊற்றி மாவை கெட்டியான பதத்துக்கு பிசையவும். பின்னர் அதை மூடி அப்படியே வைக்கவும். 25 நிமிடங்களுக்கு பிறகு அந்த மாவை எடுத்து மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி மென்மையாகும் வரை நன்றாகப் பிசையவும். பின்னர் அந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

    ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க உருண்டைகளை எண்ணெய்யில் தோய்த்து எடுத்து வைக்கவும். பின்பு ஒவ்வொரு உருண்டையையும் மெல்லிய சப்பாத்திகளாக தேய்க்கவும். பின்னர் அந்த சப்பாத்திகளை மெல்லிய ரிப்பன்களாக நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

    அகன்ற வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவு ரிப்பன்களை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

     மசாலா பொடி:

    ஒரு சிறிய கிண்ணத்தில் காஷ்மீரி மிளகாய்த்தூளுடன் கால் டேபிள் ஸ்பூன் பிளாக் சால்ட் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    சட்னி:

    ஒரு மிக்சி ஜாரில் கொத்தமல்லித்தழை, புதினா இலை, இஞ்சி, பச்சை மிளகாய், மிளகுத்தூள், பிளாக் சால்ட், உப்பு, ஐஸ்கட்டிகள் ஆகியவற்றை சேர்த்து கெட்டியாக அரைக்கவும். ஐஸ்கட்டிகள் சேர்த்து அரைப்பதால் சட்னி நீண்டநேரம் நிறம் மாறாமல் இருக்கும். அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி கடலை மாவு, எலுமிச்சை சாறு, உப்பு ஆகியவற்றை சேர்த்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடுபடுத்தவும். இந்த கலவை கெட்டியாக மாறும்போது அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைக்கவும். பின்னர் அதில் ஐஸ்கட்டிகள் மற்றும் தயாரித்து வைத்திருக்கும் சட்னியை சேர்த்து கலக்கவும்.

     பரிமாறும் முறை:

    மொறுமொறுப்பான சோராஃபளியின் மீது மசாலா பொடியை பரவலாகத் தூவி, சட்னியுடன் சேர்த்து பரிமாறவும்.

    • வீட்ல இருக்கிற பிரெட்டை வைத்து ரொம்ப ரொம்ப ஈஸியா செய்யலாம்.
    • எல்லாருக்கும் சாப்பிடறதுக்கு ரொம்ப பிடிக்கும்.

    ரொம்பவே சுலபமா நம்ம வீட்ல இருக்கிற பிரெட்டை வைத்து ஈஸியா செய்யலாம் சீஸ் சிக்கன் பிரெட் ரோல். இந்த சுவையான பிரெட் ரோல் ரொம்ப ரொம்ப சிம்பிளா சட்டுன்னு செய்து முடிச்சிடலாம். அதுலயும் இந்த மாதிரி வித்தியாசமா பிரெட்ல ரோல் பண்ணி கொடுக்கும் போது டேஸ்ட்டும் சூப்பரா இருக்கும். எல்லாருக்கும் சாப்பிடறதுக்கு ரொம்ப பிடிக்கும். நீங்க செய்து கொடுத்தது டக்குனு காலி ஆகிடும். சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு கூட இந்த பிரட் ரோல் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. சரி வாங்க சுவையான சீஸ் சிக்கன் பிரெட் ரோல் எப்படி செய்யறது அப்படின்னு பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    பிரெட்- 6

    வெங்காயம்- 1

    தக்காளி-1

    சிக்கன் - கால் கிலோ

    மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்

    மிளகாய்தூள்- கால் டீஸ்பூன்

    மல்லி தூள்- கால் டீஸ்பூன்

    கரம் மசாலா தூள்- கால் டீஸ்பூன்

    இஞ்சிபூண்டு விழுது- கால் டீஸ்பூன்

    மொசரல்லா சீஸ்- 100 கிராம்

    செய்முறை:

    முதலில் பிரெட் துண்டுகளை இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேக வைக்க வேண்டும். பின்னர் சிக்கனை சமைக்க ஆரம்பிக்கலாம். சிக்கனை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், இஞ்சிபூண்டு விடுது போட்டு வதக்க வேண்டும். பின்னர் தக்காளி மற்றும் சிக்கனை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் கொடுக்கப்பட்டுள்ள மசாலா தூள்களை வரிசையாக சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளரி 10 நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்ததும் சிக்கன் மசாலா தயார்.

    இப்போது வேகவைத்துள்ள பிரெட் துண்டுகளை எடுத்து அதன் ஓரங்களை வெட்டி எடுத்து விட்டு அதனை சப்பாத்தி கட்டையை வைத்து தேய்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதன் நடுவே வேகவைத்த சிக்கன் மசாலாவை வைத்து அதனுடன் சீஸ்சை துருவி மசாலாவுடன் வைத்து பிரெட்டை ரோல் செய்து மூடிக்கொள்ள வேண்டும். அதன் ஓரங்களை தண்ணீர் தொட்டு ஒட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இப்போது வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரெட் ரோல்களை எடுத்து ஒவ்வொன்றாக பொறித்து எடுத்தால் சுவையான சீஸ் சிக்கன் பிரெட் ரோல் தயார்.

    • வித்தியாசமாக இன்றைக்கு பீட்ரூட்டை வைத்து மோதகம்.
    • மோதகம் மிகவும் ருசியானது மட்டும் இல்லாமல், ஆரோக்கியமானது.

    விநாயகர் சதுர்த்தி என்றால் நமக்கெல்லாம் ஞாபகம் வருது மோதகம் தான் அதாவது கொழுக்கட்டை. இந்த கொழுக்கட்டையை நம்ம நிறைய வெரைட்டீஸ் செய்து சாப்பிட்டு இருப்போம். பூரணங்களை உள்ளே வைக்கும் வித்தியாச வித்தியாசமாக செய்து சாப்பிட்டு இருப்போம். மேல் இருக்கிற கொழுக்கட்டைக்கு வைக்கிற மாவில் கூட வித்தியாசமாக செய்து சாப்பிடுவோம்.

    என்றைக்காவது ஒரு நாள் காய்கறியோடு சேர்த்து இந்த மோதகத்தை செய்து சாப்பிட்டு இருப்போமா? இல்ல கொழுக்கட்டைகள் தான் செய்து இருக்கோமா? அந்த மாதிரி வித்தியாசமாக இன்றைக்கு பீட்ரூட்டை வச்சு எப்படி மோதகம் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

    இந்த மோதகம் மிகவும் ருசியானது மட்டும் இல்லாமல், ஆரோக்கியமான ஒரு மாலை நேர சிற்றுண்டியாவும் இருக்கும். இந்த மோதகம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்குமே மிகவும் பிடித்த ஒரு மோதகம்.

    தேவையான பொருட்கள்

    பச்சரிசி மாவு- 2 கப்

    பீட்ரூட்- 1

    வெல்லம்- கால் கிலோ

    கடலைப்பருப்பு- ஒரு கப்

    தேங்காய் துருவல்- 1 கப்

    ஏலக்காய்- ஒரு ஸ்பூன்

    செய்முறை:

    முதலில் பீட்ருட்டை தோலை நீக்கி விட்டு கழுவி ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்து வைத்துள்ள பீட்ருட் விழுதை வடிகட்டி எடுக்க வேண்டும். வடிகட்டிய பீட்ருட் சாறை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு அடுப்பில் ஒரு குக்கரை வைத்து கடலைப்பருப்பை கழுவி விட்டு குக்கரில் போட்டு வேக வைக்க வேண்டும். கடலைப்பருப்பு வேகும் நேரத்திற்குள் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து வடிகட்டி எடுத்து வைத்துள்ள பீட்ருட் சாரை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

    பீட்ருட் சாறு கொதித்து வரும் பொழுது அதில் எடுத்து வைத்துள்ள பச்சரிசி மாவை சேர்த்து நன்றாக கைவிடாமல் கலந்து விட வேண்டும். மாவு நன்றாக கெட்டி பதத்திற்கு வந்த பிறகு அதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும். அதன்பிறகு அடுப்பில்

    வேறொரு பாத்திரத்தை வைத்து அதில் வெல்லம், சிறிதளவு தண்ணீர் சேர்த்து தெளித்து நன்றாக கிளறி விட வேண்டும். வெல்லம் பாகு பதத்திற்கு வந்த பிறகு அதில் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.பின்னர் அதில் பொடித்து வைத்துள்ள ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும். குக்கரில் வேகவைத்த கடலைப்பருப்பு நன்றாக மசியும் படி வெந்த பிறகு அதை தேங்காய் துருவல் கலந்த பாகில் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

    பூரணம் நன்றாக கெட்டியாக வந்த பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும். பிறகு மோதக அச்சில் பீட்ருட் கலந்த மாவை சேர்த்து நன்றாக மோதகம் போல் செய்து அதற்குள் இந்த கடலைப்பருப்பு தேங்காய் பூரணத்தை வைத்து மூட வேண்டும். அனைத்து மோதகமும் செய்தபிறகு இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேக வைத்து எடுத்தால் சுவையான ஆரோக்கியமான பீட்ருட் மோதகம் தயார்.

    ×