என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பீங்கான் பாத்திரங்களுன் பயன்பாடு"
- பிங்கான் பாத்திரங்கள் பலரது விருப்பமாக இருக்கின்றன.
- பிங்கான் பாத்திரங்கள் வெப்பத்தை அதிகமாக உட்கிரகிக்காது.
பார்ப்பதற்கு பளபளப்பாகவும், கண்ணைக் கவரும் டிசைன் மற்றும் வடிவமைப்புகளிலும் கிடைக்கும் 'செராமிக்' எனப்படும் 'பிங்கான்" பாத்திரங்கள் பலரது விருப்பத் தேர்வாக இருக்கின்றன. சீனாவில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட பிங்கான், தற்போது உலகம் முழுவதும் பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சமைப்பதைவிட சமையலுக்கு உபபோகித்த பாத்திரங்களை சுத்தம் செய்வது பலருக்கும் கடினமான வேலையாக இருக்கிறது. அந்த வகையில், பாத்திரம் கழுவும் நேரத்தையும் செராமிக் பாத்திரங்கள் குறைக்கின்றன. காரணம், இவற்றில் எண்ணெய், உணவுத் துகள்கள் ஆகியவை அதிகமாக ஒட்டுவது இல்லை. இதனால் செராமிக் பாத்திரங்களை விரைவாக சுத்தப்படுத்த முடியும்.
சில பாத்திரங்களின் மேற்பகுதியில் பூசப்பட்டுள்ள பூச்சுகள் அதிக வெப்பத்தை உட்கிரகிக்கும். இதன் விளைவாக, அதில் உள்ள ரசாயனங்கள் சமைக்கப்படும் உணவிலும் கலந்து சாப்பிடுபவர்சுளுக்கு தீங்கு விளைவிக்கும். பிங்கான் பாத்திரங்கள் வெப்பத்தை அதிகமாக உட்கிரகிக்காது. இதன் மூலம் உணவில் எவ்விதமான ரசாயனமும் கலக்காது. பிங்கான் பூச்சு பூசப்பட்ட பாத்திரங்களை 500 டிகிரி பாரன்ஹீட் வரை சூடுபடுத்தினாலும் அது எவ்விதமான ரசாயன புகையையும் வெளியிடாது. தரமான பீங்கான் பாத்திரங்களை வாங்கி பயன்படுத்துவது முக்கியமானது.
பிங்கான் பூச்சு பூசப்பட்ட உலோகப் பாத்திரங்களை பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும். இவற்றில் ஏதேனும் விரிசலோ, கீறலோ ஏற்பட்டால் அடிப்பகுதியில் உள்ள உலோகத்தின் நன்மை சமைக்கும் உணவுடன் கலக்க நேரிடும். கீறல் விழுந்த பிங்கான் பாத்திரங்களை சுத்தப்படுத்துவது கடினமாக இருக்கும்.
ஒழுங்கற்ற வடிவம் கொண்ட, சேதம் அடைந்த, தரம் குறைந்த பிங்கான் பாத்திரங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். மேலும் ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள் வண்ணங்கள் அதிகமாக பூசப்பட்ட பீங்கான் பாத்திரங்களை வாங்குவதையும் தவிர்க்கவும். ஏனெனில் இந்த வண்ணங்களை அடர்த்தியாக காட்டுவதற்காக அவற்றுடன் ஈயம் அதிகமாக கலக்கப்படுகிறது.
பிங்கான் பூச்சு பூசப்பட்ட பாத்திரங்கள் பராமரிப்பு:
செராமிக் பூச்சு பூசப்பட்ட பாத்திரங்களை மென்மையான திரவம் கொண்டே சுத்தப்படுத்தவேண்டும். கரடு முரடான ஸ்கிரப்பர்களை பயன்படுத்தாமல் ஸ்பாஞ்சு கொண்டு இவற்றை சுத்தப்படுத்துவது நல்லது. செராமிக் பாத்திரங்களில் சமைக்கும்போது குறைவான அல்லது மிதமான தீயை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிக குடாக இருக்கும் செராமிக் பாத்திரங்களை உடனடியாக குளிர்ச்சியான வெப்பநிலைக்கு உட்படுத்தகூடாது.
செராமிக் பாத்திரங்களை டிஷ்வாஷர் சுத்தப்படுத்துவதைவிட கைகளால் சுத்தப்படுத்துவதே சிறந்தது. செராமிக் பாத்திரங்களில் சமைப்பதற்கு பிளாஸ்டிக் அல்லது மரத்தால் ஆன கரண்டிகளையே பயன்படுத்த வேண்டும். உலோகக் கரண்டிகள் செராமிக் பூச்சுகளில் கீறலை உண்டாக்கும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்