search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக வெற்றிக் கழகம்"

    • படிக்கும் போதே மாணவர்கள் மறைமுகமாக அரசியலில் ஈடுபட முடியும்.
    • தவறான பழக்கவழக்கத்தில் மட்டும் ஈடுபட வேண்டாம்.. ஈடுபட கூடாது என்றார்.

    கடந்த 22-ந் தேதி 50-வது பிறந்தநாளை கொண்டாடிய விஜய்க்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், நடிகை த்ரிஷா ஒரு புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தது சர்ச்சையானது. அதற்கு சமூக ஊடங்களில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டன. விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், அப்போது சமூக வலைத்தள விமர்சனங்களுக்கு இருவருமே பதிலளிக்கவில்லை.

    இந்நிலையில், மாணவர்களை கவுரவிக்கும் விழாவில் சமூக ஊடகங்கள் குறித்து விஜய் பேசினார். த்ரிஷாவின் புகைப்படம் குறித்து சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக விஜய் பேசினார் என்றே பார்க்கப்படுகிறது.

    விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் கூறியதாவது,

    படிக்கும் போதே மாணவர்கள் மறைமுகமாக அரசியலில் ஈடுபட முடியும். தினமும் செய்திதாளை படிங்கள். ஒரே செய்திய ஒரு செய்தி பத்திரிகை ஒரு மாதிரியும், மற்றொரு செய்தி பத்திரிகை வேறு மாதிரியும் எழுதுவாங்க. இங்க செய்தி வேற கருத்து வேற என்பது உங்களுக்கு தெரியவரும். சமூக ஊடங்களில் இப்போ எல்லாம் நல்லதை கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் காட்டுகிறது. இதை எல்லாம் பார்த்து எது உண்மை, எது பொய் என்பதை மட்டும் பார்க்க கற்றுக்கொள்ளுங்கள். அப்போதான் உண்மையிலேயே நாட்டில் என்ன பிரச்சனை, நாட்டு மக்களுக்கு என்ன பிரச்சனை, சமூக தீமைகள் பற்றி தெரியவரும். அது தெரிந்தாலே ஒரு சில அரசியல் கட்சிகள் செய்கிற பொய்யான பிரச்சாரங்களை நம்பாமல், எது சரி, எது பொய் என்று ஆராய்ந்து பார்த்து நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கக் கூடிய விசாலமான உலக பார்வை உங்களால் வளர்த்துக்கொள்ள முடியும். பெற்றோருக்கு அடுத்தபடியாக நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்.. தவறான பழக்கவழக்கத்தில் மட்டும் ஈடுபட வேண்டாம்.. ஈடுபட கூடாது என்றார்.

    • தமிழ்நாட்டில் போதைப்பொருள் பழக்கத்திற்கு இளைஞர்கள் அடிமையாக இருப்பது கவலையளிப்பதாகக் கூறினார்.
    • மதிப்பெண் குறைந்த மாணவர்களுக்கும் விஜய் ஆறுதல் கூறினார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. போதைப்பொருள் புழக்கம் இளைஞர்கள் மத்தியில் அதகிம் காணப்படுவதும், பரவலாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதும் இதற்கு சாட்சியாக காட்டப்படுகிறது.

    இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 10 மற்றும் பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கும் விழாவில் பேசிய அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய், தமிழ்நாட்டில் போதைப்பொருள் பழக்கத்திற்கு இளைஞர்கள் அடிமையாக இருப்பது கவலையளிப்பதாகக் கூறினார். போதைப்பழக்கத்திற்கு எதிராக Say No To Temporary Pleasures, Say No To Drugs என்று கூறி மாணவர்களை உறுதி மொழியும் ஏற்க வைத்தார் விஜய்.

    மதிப்பெண் குறைந்த மாணவர்களுக்கும் விஜய் ஆறுதல் கூறினார். வெற்றியும், தோல்வியும் இருசேர கலந்தது தான் வாழ்க்கை என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறிய விஜய், Success is never Ending, Failure is never Final என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.





    • 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர்.
    • மாணவர்களின் மத்தியில் அமர்ந்த விஜய் அவர்களுடன் கலந்துரையாடி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

    தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 தொகுதிகளிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கும் விழா இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இன்று மற்றும் வருகிற 3-ந்தேதி என இரண்டு கட்டங்களாக விழா நடைபெறுகிறது.

    விழாவில் பங்கேற்கும் மாணவர்கள் செல்போன், பேப்பர், பேனா, இதர பொருட்கள் எடுத்து வர அனுமதி இல்லை. நுழைவு கூப்பனில் உள்ள நபர்கள் மட்டுமே அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

    முதற்கட்டமாக, இன்று 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர்.

    போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும், நிகழ்ச்சியை விரைந்து முடிப்பதற்காகவும் விஜய் அதிகாலையிலேயே விழா நடைபெறும் அரங்கிற்கு வந்தார். இதனையடுத்து விழாவிற்கு வந்திருந்த மாணவர்கள் மற்றும் அவர்களுடன் வந்த பெற்றோருக்கு காலை உணவு வழங்கப்பட்டது. பின்பு அவர்களுக்கான இருக்கையில் அமர வைக்கப்பட்டனர்.

    இதன்பின்னர் சுமார் 10 மணியளவில் த.வெ.க. தலைவர் விஜய் அரங்கிற்குள் வந்தார். அப்போது அங்கு இருந்த மாணவர்கள் கரகோஷம் எழுப்பி உற்சாகம் அடைந்தனர். இதன்பின் மாணவர்களின் மத்தியில் அமர்ந்த விஜய் அவர்களுடன் கலந்துரையாடி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.


    இதை தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு மேடையில் தனித்தனியாக சான்றிதழ் வழங்கினார். சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பொன்னாடை போர்த்தி சான்றிதழ் வழங்கி குடும்பத்துடன் எடுத்துக்கொண்டார். அப்போது, விழாவிற்கு வந்திருந்த மாணவர்கள் நன்றி தெரிவித்து பேசினர்.


    • போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும், நிகழ்ச்சியை விரைந்து முடிப்பதற்காகவும் விஜய் அரங்கிற்கு முன்கூட்டியே வந்துள்ளதாக கூறப்படுகிறது.
    • மாணவர்களுடன் வருகை தந்துள்ள 3500 பார்வையாளர்களையும் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 தொகுதிகளிலும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கும் விழா இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்குகிறது.

    இதனால் விழா நடைபெறும் திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடத்தப்படும் ஊக்கப்பரிசு வழங்கும் விழா நடைபெறும் இடத்திற்கு விஜய் அதிகாலையிலேயே வந்தடைந்தார். மாணவர்களுடன் வருகை தந்துள்ள 3500 பார்வையாளர்களையும் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும், நிகழ்ச்சியை விரைந்து முடிப்பதற்காகவும் விஜய் அரங்கிற்கு முன்கூட்டியே வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய த.வெ.க. கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், மாணவர்கள் பாராட்டு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. த.வெ.க. தலைவர் விஜய் பேசிய பின்னர் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கௌரவிக்கப்படுகிறார்கள்.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் வந்துள்ளார்கள். மாணவர்களுக்கு மதிய விருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடத்தப்படும் ஊக்கப்பரிசு வழங்கும் விழாவில் மாணவர்களுடன் வருகை தந்துள்ள 3500 பார்வையாளர்களையும் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • விழாவில் பங்கேற்கும் மாணவர்கள் செல்போன், பேப்பர், பேனா, இதர பொருட்கள் எடுத்து வர அனுமதி இல்லை.
    • நுழைவு கூப்பனில் உள்ள நபர்கள் மட்டுமே அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 தொகுதிகளிலும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கும் விழா நாளை மற்றும் ஜூலை 3-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடக்கிறது.

    மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப்பரிசை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் வழங்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனிடையே விழாவில் பங்கேற்கும் மாணவர்கள் செல்போன், பேப்பர், பேனா, இதர பொருட்கள் எடுத்து வர அனுமதி இல்லை. நுழைவு கூப்பனில் உள்ள நபர்கள் மட்டுமே அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நாளை நடைபெற உள்ள ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் விஜய் 10 நிமிடங்கள் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கட்சி தொடங்கிய பின் முதல் முறையாக ஊக்கத்தொகை வழங்கி, விஜய் பேச உள்ளதால் அரசியல் கருத்துகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

    கடந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் அம்பேத்கர், பெரியார், காமராஜர் பற்றி படியுங்கள். பணம் வாங்காமல் வாக்களியுங்கள் என பெற்றோருக்கு வலியுறுத்த மாணவர்களிடம் விஜய் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நாம் தமிழர் கட்சிக்கு மிகவும் முக்கியமான தேர்தலாகும்.
    • கொள்கைகளோடு ஒத்துப்போகும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும் நாம் தமிழர் கட்சி தயாராக உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான பரபரப்பு இப்போதே ஏற்பட தொடங்கி இருக்கிறது.

    அந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும், நேருக்கு நேர் மோதுவதற்கு தயாராகி வரும் நிலையில் பாரதிய ஜனதா தலைமையிலான அணியும் களம் காண உள்ளது.

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் களமிறங்கப் போவதாக அறிவித்துள்ளார். அவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் கைகோர்க்க இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது.

    இது தொடர்பாக ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் கூட்டணி தொடர்பான இறுதி அறிவிப்புகள் வெளியாக இருப்பதாகவும் கூறப்பட்டது.

    இந்த நிலையில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் முதல் தேர்தல் என்பதால் விஜய் தனித்தே களமிறங்க முடிவு செய்து இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. தேர்தலில் தனித்து போட்டியிட்டு தனது பலம் என்ன? என்பதை பார்த்து விட்டு அதன் பிறகு கூட்டணி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தலாம் என்றே விஜய் முடிவு செய்திருப்பதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுடன் நல்ல நட்பில் இருக்கும் விஜய், கூட்டணி அமைக்கும் விஷயத்தில் போதிய ஆர்வம் காட்டாமல் நழுவி சென்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறும்போது, 8 சதவீத வாக்குகளை பெற்றுள்ள நாம் தமிழர் கட்சி 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எத்தனை சதவீத ஓட்டுகளை பெறப்போகிறது? என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

    தற்போதைய நிலையில் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நாம் தமிழர் கட்சிக்கு மிகவும் முக்கியமான தேர்தலாகும்.

    எங்களோடு கூட்டணி அமைப்பதற்கு பல கட்சிகள் இப்போதே ஆர்வம் காட்டி உள்ளன. எங்கள் கொள்கைகளோடு ஒத்துப்போகும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும் நாம் தமிழர் கட்சி தயாராக உள்ளது.

    அதே நேரத்தில் கூட்டணிக்கு யாரும் வராவிட்டாலும் எப்போதும் போல தனித்து களம் காணவும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்றார்.

    விஜயுடனான கூட்டணி பற்றி அவர் மேலும் கூறும்போது, தி.மு.க. அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளையும் வீழ்த்துவதற்கு புதிதாக ஒரு அணி உருவானால் அதனுடன் விஜயும் கைகோர்த்தால் நன்றாக இருக்கும் என்பதே அனைவரது எண்ணமாகவும் உள்ளது. அதையே நாங்களும் விரும்புகிறோம் என்றும் தெரிவித்தார். இருப்பினும் விஜய் எங்களோடு சேரப் போகிறாரா? இல்லையா? என்பது அவர் எடுக்க வேண்டிய முடிவு என்றும் கூறினார்.

    2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தனது ரசிகர் பட்டாளங்கள் மற்றும் புதிய வாக்காளர்களின் ஆதரவோடு களம் காண்பது உறுதியாகி இருப்பதால் தேர்தல் களம் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    விஜயின் அரசியல் பயணம் தமிழக அரசியலில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது? என்பது அனைவரது மத்தியிலும் பேசு பொருளாகவும் மாறி உள்ளது.

    விஜய் தனித்து களம் காணும் பட்சத்தில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் பல முனை போட்டி நிலவி வாக்குகள் சிதறும் சூழல் உருவாகி உள்ளது. இது யாருக்கு சாதகமாக அமையப் போகிறது? என்பதும் மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்து உள்ளது. முதல் தேர்தலிலேயே விஜய் முத்திரை பதிப்பாரா? என்பதும் புதிய வாக்காளர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சென்னையில் வரும் 28ம் மற்றும் ஜூலை 3ம் தேதி நடைபெற உள்ளது.
    • பாராட்டு விழாவில் செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.

    சென்னையில் வரும் 28ம் மற்றும் ஜூலை 3ம் தேதி நடைபெற உள்ளது.

    பாராட்டு விழாவில் நடிகர் விஜய் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டும் நிலையில் விழாவுக்கான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, பாராட்டு விழாவில் செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பேப்பர்,பேனா கொண்டு வரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    விழாவில் மாணவர்களுடன் பெற்றோர், உடன் பிறந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அந்தந்த மாவட்டங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகள் பெற்றோர்களுடன் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
    • நிர்வாகிகளுக்கு தலைமைக் கழகம் சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 தொகுதிகளிலும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கும் விழா வருகிற 28-ந்தேதி மற்றும் ஜூலை 3-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் திருவான்மியூர் ராமசந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடக்கிறது.

    மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப்பரிசை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. விஜய் ஆலோசனைக்கிணங்க பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தமிழகத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளையும் தொடர்பு கொண்டு யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து எவ்வளவு பேர் வருகிறார்கள் என்ற விவரங்களை தினம் தினம் திரட்டி வருகிறார்.

    இதையொட்டி அந்தந்த மாவட்டங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகள் பெற்றோர்களுடன் கலந்து கொள்ள இருக்கின்றனர். அவர்களை அழைத்து வரும் நிர்வாகிகளுக்கு தலைமைக் கழகம் சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    2024-ம் ஆண்டிற்கான தளபதி கல்வி விருது வழங்கும் விழாவிற்கு வருகை தரும் அரியலூர், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்ட நிர்வாகிகள், ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் மேல்மருவத்தூர் வண்டலூர் வழியாக கேளம்பாக்கம் வந்து ஓ.எம்.ஆர்.சாலையில் சோழிங்கநல்லூர் அக்கரை வழியாக நீலாங்கரையை அடுத்து விழா நடைபெறும் ராமசந்திரா கன்வென்சன் ஹாலுக்கு வர வேண்டும்.

    இடம் பற்றி மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்ட நுழைவு கூப்பனில் உள்ள 'பார்கோடை' ஸ்கேன் செய்து மண்டபத்தின் முகவரியை தெரிந்து கொள்ளலாம்.

    நுழைவு கூப்பனில் உள்ள நபர்கள் மட்டுமே அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். செல்போன், பேப்பர், பேனா, இதர பொருட்கள் எடுத்து வர அனுமதி இல்லை. வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்வதற்காக 2 திருமண மண்டபங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

    முகுந்தன் மகால், 159/1ஏ/என்.எச்.45 உத்தரமேரூர் ரோடு, மேலவளம் பேட்டை கருங்குழி (அருகில்) மதுராந்தகம், செங்கல்பட்டு மாவட்டம். (தொடர்புக்கு ராஜேஷ்-8778128655, சபரி-9042773271, அனிதா மகால், ஜி.எஸ்.டி.ரோடு, சோத்துப்பாக்கம் (தொடர்புக்கு செந்தில் 9842098916, துரை-9841805777, ஆகாஷ்-9500272585 ஆகிய இரண்டு மண்டபங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    நிர்வாகிகள் காலை 7.15 மணிக்கு விழா அரங்கிற்குள் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    • ராகுல் காந்திக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
    • மக்களவையில் அவரது குரல் தொடர்ந்து வலிமையாக ஒலிக்கட்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார்.

    சென்னை:

    மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    அந்தவகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில், புதிய பதவிக்கு தேர்வாகியுள்ள எனது சகோதரர் ராகுல் காந்தியை இந்தியா வரவேற்கிறது. மக்களவையில் அவரது குரல் தொடர்ந்து வலிமையாக ஒலிக்கட்டும் என்று வாழ்த்தினார்.

    இந்தநிலையில், நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய், ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்துகள் ராகுல் காந்தி. நமது நாட்டு மக்களுக்கு சேவை செய்ய எனது மனமார்ந்த வாழ்த்துகள் என கூறியுள்ளார்.

    • உற்சாகம் அறிவுப்பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருக்கனும்.
    • இந்த வைப்-தான் பலபேரை பயமுறுத்தும்

    நடிகர் விஜய் நேற்று (ஜூன் 22) தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    இந்த நிலையில், சென்னையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுகமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சவுந்தரராஜா விஜய்யின் அரசியல் பயணம் பற்றி பேசினார். 

     


    அப்போது பேசிய அவர், விஜய் அண்ணா நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களா இருந்து, இன்று தொண்டராக மாறி இருக்கீங்க. நீங்க மட்டுமல்ல அடுத்தடுத்து, லாரி லாரி, டிரெயின், டிரெயின், ஃபிளைட் பிளைட்னு 2026-க்கு வந்துட்டே இருக்காங்க. நான் மிகைப்படுத்தி பேசல, இந்த உற்சாகம்தான் பலருக்கு பயத்தை உண்டாக்கும். அந்த உற்சாகம் அறிவுப்பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருக்கனும்.

    ஒரு விஷயம் நண்பா. நாம சின்ன விஷயம் பண்ணாலும், அதை ஃபோக்கஸ் பண்ண கேமரா இருக்கு. நாம வளரக்கூடாதுனு பண்ணுவாங்க. இந்த வைப்-தான் பலபேரை பயமுறுத்தும், பலபேரை சிந்திக்க வைக்கும். நம்ம அண்ணன் தளபதிக்கு பலமா நிற்கும்.

    நம்ம அண்ணன் தளபதி விஜய், இன்னைக்கு ரூ. 200 கோடி சம்பளம் வாங்கும் ஒருத்தர் சினிமா வேண்டாம்னு, நான் சம்பாதிச்ச பணம், வெற்றி, புகழ், வாழும் வாழ்க்கைக்கு இந்த மக்கள் தான் காரணம். அந்த மக்கள், இந்த மண்ணிற்காக வருகிறார் விஜய். அவர் அரசியலுக்கு வர பேராசை தான் காரணம். அந்த பேராசை, ஒவ்வொருத்தர் குடும்ப ரேஷன் கார்டில் உறுப்பினர் ஆவதுதான்.

    விஜய் அரசியலில் தாக்குப்பிடிப்பாரா, அவருக்கு பேசவை தெரியாதுனு நிறைய பேர் என்கிட்ட சொன்னாங்க. நான் அவங்களுக்கு பதில் கொடுக்கவே இல்லை. இப்போ சொல்றேன், மௌனத்திற்கு இருக்கும் சக்தி மிகவும் பெரியது. விஜய் மிகவும் சைலண்ட் ஆன நபர். அந்த சைலன்ஸ்-க்குள்ள மிகப்பெரிய வைலன்ஸ் இருக்கு. அது வைலன்ஸ்-க்கு எதிராக மட்டும் தான் வெளியே வரும்.

    விஜய் மிகப்பெரிய பேச்சாளர், விரைவில் அதை பார்ப்பீங்க. பேச்சாளர் பக்கம்பக்கமா பேசனும்னு அவசியம் இல்லை. ஒரு வார்த்தை பேசினா போதும். தமிழக அரசியலை படிங்க. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ஏன் ரூ. 10 லட்சம் கொடுக்கனும். நீங்கள் ரசிகரா இல்லாமல் தொண்டரா மாறுங்க. அரசியல் படிச்சு கேள்வி கேட்கனும். நீங்க கேள்வி கேட்டால் தான் பதில் கிடைக்கனும்.

    நாம வாழ்ந்து, நம்மால் முடிந்தவரை இயலாதவர்களுக்கு நல்லது செய்வோம். விஜய் அண்ணா வழியில் மக்களுக்கும், மண்ணுக்கும் நல்லது செய்வோம், என்று தெரிவித்தார்.

    • மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் தனது வாழ்த்து செய்தியை எக்ஸ் தல பதிவில் தெரிவித்துள்ளார்.
    • இதையடுத்து ரசிகர்களும், பிரபலங்களும் தங்கள் வாழ்த்து செய்தியை பகிர்ந்த வருகின்றனர்.

    தமிழக வெற்றிக் கழக தலைவருவம், நடிகருமான விஜயின் 50-வது பிறந்த இன்று அவரது ரசிகர்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் விஜய் உத்தரவிட்டிருந்தார்.

    இதையடுத்து ரசிகர்களும், பிரபலங்களும் தங்கள் வாழ்த்து செய்தியை பகிர்ந்த வருகின்றனர்.

    மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் தனது வாழ்த்து செய்தியை எக்ஸ் தல பதிவில் தெரிவித்துள்ளார்.

    அன்புத் தம்பியும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் விஜய் கேட்டறிந்தார்.
    • விஜய் மருத்துவமனைக்கு வருவதை அறிந்து அவரது ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்ததால் அப்பகுதியில் பெரும் நெரிசல் ஏற்பட்டது.

    சென்னை:

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தார்களை நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் விஜய் கேட்டறிந்தார். விஜய் மருத்துவமனைக்கு வருவதை அறிந்து அவரது ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்ததால் அப்பகுதியில் பெரும் நெரிசல் ஏற்பட்டது.

    விஜய் அரசியல் கட்சி தொடங்கி அறிக்கை மற்றும் வாழ்த்து செய்தி மட்டும் வெளியிட்டு வந்த நிலையில் நேற்று நேரிடையாக பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்றது அவர் அரசியல் பணியில் முழு வீச்சில் உள்ளார் என்பதையே காட்டுகிறது.


    இந்நிலையில், நாளை 50-வது பிறந்தநாளை கொண்டாடும் விஜய், தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்குமாறு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மேலும், தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார்.


    ×