என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அதியமான் கோட்டை காலபைரவர்"
- இவரை வணங்கினால் நவக்கிரக தோஷங்கள் விலகும்.
- அஷ்டமி திதியில் பைரவரை வணங்கினால் ஜஸ்வரியம், சுகம், பொன், பொருளையும் தருவார்.
அதியமான் கோட்டை கால பைரவர் கோவிலில் உள்ள உன்மந்திர பைரவரின் திருமேனியில் 27 நட்சத்திரமும், 12 ராசியும் அடக்கம்.
எனவே இவரை வணங்கினால் நவக்கிரக தோஷங்கள் விலகும்.
மேலும் ஜாதகத்தில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்.
தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் வழிபாடு
அஷ்டமி திதியில் பைரவரை வணங்கினால் ஜஸ்வரியம், சுகம், பொன், பொருளையும் தருவார்.
அஷ்டமி திதியில் அஷ்டலட்சுமிகளும் பைரவரை வணங்கி பைரவரின் அருளால் தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அருள்புரிவதால் நாமும் அஷ்டமி திதியில் உள்ளம் உருகி பைரவரை நினைத்து காலையில் விரதம் இருந்து பைரவருக்கு பூஜைகள் செய்தால் நினைத்தது எல்லாம் நடக்கும்.
தேய்பிறை அஷ்டமி திதியில் பஞ்சதீபம் எண்ணையால் தீபமேற்றி வழிபட்டால் காலத்தால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கி நல்ல அருள் கிடைக்கும்.
- தருமபுரியை ஆட்சி செய்த மன்னர் அதியமான், போரில் வெல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
- அப்போது காவல் தெய்வமான கால பைரவரை வணங்க வேண்டும் என்றனர்.
தொட்டில் பூஜை
நீண்ட நாளாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெற அதியமான் கோட்டை
ஸ்ரீதட்சிணகாசி கால பைரவருக்கு ருத்ரா அபிஷேகம் செய்து கால பைரவர் (உற்சவமூர்த்தி) தொட்டிலில் இட்டு
வடுக பைரவ சகஸ்ரநாமம் அர்ச்சனை செய்து தொட்டில் ஆட்டினால் இல்லத்தில்
குழந்தை பாக்கியம் பெற்று வீட்டில் தொட்டில் ஆட்டலாம்.
காசியில் இருந்து பல்லக்கு மூலம் தருமபுரிக்கு வந்த கால பைரவர் சிலை
9ம் நூற்றாண்டில் எதிரிகளால் அதிக இந்து கோவில்கள் இடிக்கப்பட்டன.
அப்போது தருமபுரியை ஆட்சி செய்த மன்னர் அதியமான், போரில் வெல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் ஜோதிடர்களை அழைத்து ஆலோசனை கேட்டார்.
அப்போது காவல் தெய்வமான கால பைரவரை வணங்க வேண்டும் என்றனர்.
ஆஸ்தான ஜோதிடர்களின் ஆலோசனைப்படி மன்னர் அதியமான் காசியில் இருந்து சிலைகளை அதியமான் கோட்டைக்கு கொண்டு வந்து கால பைரவர் கோவிலை கட்டினார்.
அந்த சமயத்தில் கால பைரவர் சிலையை காசியில் இருந்து தருமபுரிக்கு பல்லக்கு மூலம் தூக்கி கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்