search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 அடி உயரம்"

    • பிரபலங்களுடன் நட்பாக பழகி அவர்களுடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது.
    • மிராவுக்கு இதய வடிவிலான வைர மோதிரத்தை நிச்சயதார்த்தின் போது அணிவித்துள்ளார்.

    தஜிகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் அபுரோசிக். 20 வயதாகும் இவர் 3 அடி உயரம் கொண்டவர். சமூக வலைதளங்களில் பிரபலமான இவர் பாடகராகவும் திகழ்கிறார். இந்தியில் சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற இவர் சல்மான்கான், ஏ.ஆர்.ரஹ்மான், டோனி என பிரபலங்களுடன் நட்பாக பழகி அவர்களுடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது. தடைகளை எல்லாம் தகர்த்து எப்போதும் சிரித்த முகத்துடனும், தன்னம்பிக்கையுடனும் வலம் வரும் இவர் தற்போது தஜிகிஸ்தான் நாட்டை சேர்ந்த பாடகி அமிரா என்பவரை திருமணம் செய்ய உள்ளார்.

    சமீபத்தில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் ஜூலை 7-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளதாக கூறியுள்ளார். அவர் அமிராவுக்கு இதய வடிவிலான வைர மோதிரத்தை நிச்சயதார்த்தின் போது அணிவித்துள்ளார். அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 3 அடி உயர கணேஷ் பரையா டாக்டர் ஆகவேண்டும் என்ற கனவை நனவாக்க முயற்சிகள் எடுத்து வந்தார்.
    • கணேஷ் தற்போது படிப்பை முடித்து பயிற்சி டாக்டராக பவ் நகர் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் பவ் நகரைச் சேர்ந்தவர் கணேஷ் பரையா (23). இவரது உயரம் 3 அடி. ஆனாலும், டாக்டர் ஆகவேண்டும் என்ற கனவை நனவாக்க முயற்சிகள் எடுத்து வந்தார்.

    பிளஸ் 2 முடித்ததும் மருத்துவப் படிப்புக்கு கணேஷ் விண்ணப்பித்தார். அவரது உயரத்தை காரணம் காட்டி இந்திய மருத்துவ கவுன்சில் அவரது விண்ணப்பத்தை நிராகரித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் சோர்ந்து போகாத அவர், கல்லூரி முதல்வர் உதவியுடன் குஜராத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    குஜராத் நீதிமன்றம் அவருக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது. ஆனாலும் மனதை தளரவிடாத அவர், 2018ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றார்.

    அதன்படி 2019ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்த கணேஷ், தற்போது படிப்பை முடித்து பயிற்சி டாக்டராக பவ் நகர் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

    தனது இந்த பயணத்தைப் பற்றி பகிர்ந்துகொண்ட கணேஷ் பாரையா,

    மருத்துவக் கல்விக்கு விண்ணப்பிக்கும்போது, எனது உயரத்தை காரணம் காட்டி மருத்துவ கவுன்சில் நிராகரித்துவிட்டது. இதனால் பள்ளி முதல்வர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வித்துறை அமைச்சரின் வழிகாட்டுதலின் பெயரில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றேன். டாக்டராகப் போகிறேன் என பெற்றோரிடம் கூறுகையில் அவர்களே சந்தேகத்துடன் பார்த்தனர். போகப் போக என்னைப் புரிந்து கொண்டனர் என தெரிவித்தார்.

    குள்ளமான இளைஞர் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு டாக்டர் பணிக்கு சேர்ந்த சம்பவம் குஜராத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ×