search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் நல்வாழ்வுத்துறை"

    • தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
    • மூன்று ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அரசு மருத்துவமனைகளில் பணிபுரியம் கடைநிலை ஊழியர்களுக்கு இதுவரை 2 ஷிப்ட் என்ற முறைகள் பணிநேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் இயங்கும் அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலியர் உதவியாளர்கள் ( தரம் 2) மற்றும் கடைநிலை ஊழியர்களான மருத்துவ பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மூன்று ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்து மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் அரசாணை பிறப்பித்துள்ளார்.

    காலை 6 மணி முதல் மணி 1 மணி வரை, மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி, இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை என்று மூன்று ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மொத்த பணியாளர்களில் 50 சதவீத பேர் முதல் ஷிப்டிலும், 25 சதவீத ஊழியர்கள் 2 வது ஷிப்டிலும், 25 சதவீத ஊழியர்கள் 3-வது ஷிப்டிலும் பணியில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நெறிமுறைகளை பின்பற்றுமாறு மாவட்ட துணை சுகாதார இயக்குநர்களுக்கு உத்தரவு.
    • மருத்துவமனைகளில் போதுமான மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.

    கோடை வெப்பத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது.

    தேசிய சுகாதாரத்துறை வழங்கிய நெறிமுறைகளை பின்பற்றுமாறு மாவட்ட துணை சுகாதார இயக்குநர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அதீத வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதம், இறப்பு போன்றவற்றை தினசரி பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

    வெப்பத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 

    மின் வாரியத்துடன் ஆலோசனை நடத்தி மருத்துவமனைகளுக்கு தடையில்லா மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டம்.

    குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள் முடிந்தவரை வீடுகளுக்குள்ளே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பொது மக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 3 வரை வெளியில் வர வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வெயிலில் பணிபுரிவோர் தினசரி 5 லிட்டருக்கும் அதிகமான தண்ணீரை குடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதிகமாக வெயிலில் இருந்தால் ஹீட் ஸ்ட்ரோக், உடலில் நீர்சத்து குறைந்தால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

    மருத்துவமனைகளில் போதுமான மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.

    ×