என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கேரளா சுவீட் ரெசிப்பி"
- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
- தேரலி இலைகள் அல்லது வாழை இலைகளில் வேகவைக்கப்படுகிறது.
பலாப்பழ அப்பம் என்பது பழுத்த பலாப்பழம், வெல்லம், தேங்காய் மற்றும் வீட்டில் வறுத்த அரிசி மாவுடன் தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய தேநீர் நேர சிற்றுண்டாகும். தயாரிக்கப்பட்ட மாவை தேரலி இலைகள் அல்லது வாழை இலைகளில் வேகவைக்கப்படுகிறது.
கேரளாவிலும், தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் பிரபலமானது. இது சக்கா அப்பம், எலாய் அடாய் கும்பலியப்பம் சக்கா அடா இலா அடா எலாய் கொசுகட்டாய் சக்கா கோலுகாட்டா போன்ற பல பெயர்களில் அறியப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
வறுத்த அரிசி மாவு - 1.5 கப்
பலாப்பழம் - 1.5 கப் நசுக்கியது
வெல்லம் - 3/4 கப்
அரைத்த தேங்காய் - 1/4 கப்
வாழை இலை -8 துண்டுகள்
நெய் - 1 ஸ்பூன்
ஏலக்காய் - 4
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை
அனைத்து பலாப்பழ துண்டுகளிலும் விதைகளை அகற்றிவிட்டு மிக்சி ஜாரில் கரகரப்பாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி வெல்லம் சேர்த்து அது முழுமையாக உருகும் வரை சூடாக்க வேண்டும். பின்னர் வெல்லம் கரைந்த பிறகு அதை வடிகட்ட வேண்டும்.
ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கி அதில் நெய் ஊற்றி காய்ந்த பிறகு நசுக்கிய பலாப்பழத்தை சேர்த்து 3 முதல் 5 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்து வதக்க வேண்டும்.
பின்னர் உருகிய வெல்லத்தை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பலாப்பழம் மென்மையாகி, கலவை கெட்டியாகும் வரை கிளற வேண்டும். இதில் அரைத்த தேங்காய், ஏலக்காய் தூள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
இப்போது வறுத்து வைத்துள்ள அரிசி மாவை சேர்க்க வேண்டும். எல்லாம் நன்கு ஒன்றாக சேரும்' வரை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் அடுப்பை அனைத்து விட்டுசில நிமிடங்கள் மூடி வைக்க வேண்டும்.
இதற்கிடையில், வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த இலையில் சிறிது நெய் தடவி சிறிய பங்கு மாவை நடுவில் வைத்து வட்டமாக தட்டி விரல்களால் அதைப் பரப்பவும். வாழை இலையை பாதியாக மடித்து ஒரு பொட்டலமாக அமைக்கலாம். மீதமுள்ள மாவையும் அதைப் போலவே செய்யுங்கள்.
இதனை ஒரு இட்லி பாத்திரத்தில் வைத்து 20 நிமிடங்கள் வரை சமைக்க வேண்டும். சூடு ஆறியதும் பொட்டலத்தை அகற்றி சூடான தேநீருடன் பலாப்பழ அப்பத்தை சுவைக்கலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்