search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விக்கிரவாண்டி இடைத்தேர்தல்"

    • ஆளும் கட்சியாக இருந்த அ.தி.மு.க. பல தொகுதிகளில் டெபாசிட்டை இழந்துள்ளது.
    • புதுப்புது காரணங்களை கண்டுபிடித்து சொல்லும் எடப்பாடி தமிழக மக்களுக்கு ஒரு பொறுப்பான எதிர்க்கட்சி தலைவராக இல்லை.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியில் பா.ம.க. வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:-

    * பீகார், கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்போது தமிழக அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாதது ஏன்?

    * பீகாரில் அனுமதி உள்ளபோது தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனுமதியில்லையா?

    * தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தி.மு.க. அரசு தயாராக இல்லை.

    * சிலரின் சுயலாபம் மற்றும் அதிகாரத்திற்காக அ.தி.மு.க.வை அழித்து கொண்டிருக்கிறார்கள்.

    * கரையான் போல் சிலர் அதிமுகவை அரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    * எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. 2019 முதல் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

    * நம்பிக்கை துரோகி என்ற பட்டம் எடப்பாடி பழனிசாமிக்குதான் சரியாக பொருந்தும்.

    * ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என பேச சொன்னார் எடப்பாடி பழனிசாமி.

    * ஆளும் கட்சியாக இருந்த அ.தி.மு.க. பல தொகுதிகளில் டெபாசிட்டை இழந்துள்ளது.

    * தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டிருப்பதால் 2026 சட்டமன்ற தேர்தலையும் எடப்பாடி பழனிசாமி புறக்கணிப்பாரா?

    * 2026 சட்டமன்ற தேர்தலின் போது தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீராகி விடுமா?

    * சட்டம் ஒழுங்கு கெட்டுப்போனதால் விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணிக்கிறேன் என கூறிய எடப்பாடி இன்று வேறு காரணம் கூறுகிறார்.

    * புதுப்புது காரணங்களை கண்டுபிடித்து சொல்லும் எடப்பாடி தமிழக மக்களுக்கு ஒரு பொறுப்பான எதிர்க்கட்சி தலைவராக இல்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    முன்னதாக, கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, மக்களவை தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் 6000 வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்று 2-வது இடத்தில் அ.தி.மு.க. உள்ளது. கோவையில் 1.18 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணாமலை தோல்வி அடைந்தார். மிகப்பெரிய அரசியல் ஞானிபோல் அண்ணாமலை பேசுகிறார். அண்ணாமலை வந்த பிறகு தான் தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ந்துள்ளது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார் என அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார்.

    • விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்.
    • தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காமல் ஏமாற்றுவது யார்?

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

    அதையே நானும் சொல்கிறேன்.... விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்.

    சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்கள் யார்? என்பதை என்பதை மக்கள் புரிந்து கொள்ள சில உண்மைகள்:

    1. தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்த பிறகும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் சமூகநீதிக்கு துரோகம் இழைப்பது யார்?

    2. தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டின் மீது கத்தி தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இட ஒதுக்கீடே போனாலும் பரவாயில்லை என்று சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாடோம் என முரண்டு பிடிப்பது யார்?

    3. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது, அந்த இட ஒதுக்கீட்டை நீக்காமல் ஓய மாட்டோம் என்று கூட்டம் நடத்தி முழக்கமிட்டது எந்த சமூகம்? அந்தக் கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மருத்துவர் ஜெய ராஜ மூர்த்தி யாருடைய மைத்துனர்?

    4. தமிழ்நாட்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பிசி/எம்.பி.சி வகுப்பினருக்கான இடங்களை பட்டியலினத்தவருக்கு ஒதுக்கலாம், ஆனால், பட்டியலினத்தவருக்கும், பழங்குடியினருக்குமான இடங்களை அவர்களில் யாரும் இல்லாத சூழலிலும் யாருக்கும் ஒதுக்கக் கூடாது என்று ஆணையிட்டிருப்பது எந்த அரசு?

    5. தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காமல் ஏமாற்றுவது யார்?

    6. 2019-ஆம் ஆண்டில் விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெற்ற போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு வழங்குவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த பிறகு அதை நிறைவேற்றாமல் ஏமாற்றுவது யார்?

    7.தமிழ்நாட்டில் பட்டியலின மக்களின் மக்கள்தொகை கிட்டத்தட்ட 22% ஆக அதிகரித்துள்ள நிலையில், அதற்கு இணையாக அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்காதது எந்த அரசு?

    8. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே பேராசிரியர் தனலட்சுமிக்கு துறைத்தலைவர் பதவி மறுக்கப்பட்டதை கண்டுகொள்ளாமல் வேடிக்கைப் பார்ப்பது யார்?

    9. தமிழ்நாட்டில் பட்டியலின மக்களின் நலன்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை அவர்களின் நலன்களுக்காக பயன்படுத்தாமல் வேறு திட்டங்களுக்கு திருப்பி விட்டது எந்தக் கட்சி அரசு?

    10. கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் நச்சுசாராயம் குடித்து உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையினர் பட்டியலின மக்கள். நச்சுசாராய உயிரிழப்புகள் குறித்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்காக சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட முடியாது என்று கூறி குற்றவாளிகளை பாதுகாப்பது எந்தக் கட்சி அரசு?

    மேற்கண்ட அனைத்து வினாக்களுக்கும் விடை திமுக., மு.க.ஸ்டாலின் என்பது தான்.

    ஆகவே, விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களே... சிந்திப்பீர், செயல்படுவீர், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்.!

    • 2014ல் பெற்றதை விட 2024ல் பா.ஜ.க. கூட்டணி குறைவாகவே வாக்குகளை பெற்றுள்ளது.
    • அண்ணாமலை போன்ற தலைவர்களால் தான் மத்தியில் பா.ஜ.க. பெரும்பான்மையை இழந்தது.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்ததற்கான காரணத்தை ஏற்கனவே தெரிவித்து விட்டோம்.

    * அ.தி.மு.க. போட்டியிட்டால் 3-வது, 4-வது இடத்திற்கு வந்திருக்கும் என அண்ணாமலை கூறியிருக்கிறார். மிகப்பெரிய அரசியல் ஞானிபோல் அண்ணாமலை பேசுகிறார்.

    * அண்ணாமலை வந்த பிறகு தான் தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ந்துள்ளது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார்.

    * மக்களவை தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் 6000 வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்று 2-வது இடத்தில் அ.தி.மு.க. உள்ளது. கோவையில் 1.18 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணாமலை தோல்வி அடைந்தார்.

    * 2014 தேர்தலில் 18.80 சதவீத வாக்குகளை பா.ஜ.க. கூட்டணி பெற்றது. 2014ல் பெற்றதை விட 2024ல் பா.ஜ.க. கூட்டணி குறைவாகவே வாக்குகளை பெற்றுள்ளது.

    * தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் ஈரோடு தொகுதி தேர்தலில் பரிசுகள், பணம் தந்துதான் வெற்றி பெற்றது. இதனை நன்கு அறிந்த அண்ணாமலை வேண்டுமென்றே திட்டமிட்டு அ.தி.மு.க.வை பற்றி விமர்சிப்பது கண்டித்தக்கது.

    * வாயில் வடை சுடுவது, பொய் செய்திகளை பரப்புவது தான் அண்ணாமலையின் வழக்கம்.

    * 100 அறிவிப்புகளை 500 நாட்களில் வெளியிடுவோம் என கோவையில் அண்ணாமலை வாக்குறுதி அளித்தார்.

    * பா.ஜ.க. ஆட்சி அமைந்துள்ள நிலையில் கோவைக்கு கொடுத்த வாக்குறுதியை அண்ணாமலை நிறைவேற்றுவாரா?

    * அண்ணாமலை போன்ற தலைவர்களால் தான் மத்தியில் பா.ஜ.க. பெரும்பான்மையை இழந்தது.

    * தமிழக பா.ஜ.க. தலைவரான பின்னர் என்ன திட்டத்தை மத்திய அரசிடம் கேட்டு தமிழகத்திற்காக பெற்றுத்தந்தார் அண்ணாமலை?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க.வுக்கு பா.ம.க. கடும் போட்டியை ஏற்படுத்தி இருப்பதாகவே பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
    • நாம் தமிழர் கட்சியும் அ.தி.மு.க. வினரின் ஓட்டுகளை பெறுவதில் தீவிரம் காட்டி வருகிறது.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வருகிற 10 -ந்தேதி நடைபெறுவதையொட்டி அங்கு பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

    தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளராக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா ஆகியோர் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ள நிலையில் அ.தி.மு.க. தேர்தலை புறக்கணித்துள்ளது.

    இதைதொடர்ந்து அ.தி.மு.க.வினரின் ஓட்டு யாருக்கு? என்கிற எதிர் பார்ப்பு தேர்தல் களத்தில் அதிகரித்துள்ளது.

    விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க.வினர் வாக்களிக்காமல் தேர்தல் புறக்கணிப்பிலேயே ஈடுபடுவார்கள், இரட்டை இலையை தவிர வேறு எந்த சின்னத்துக்கும் வாக்களிக்க மாட்டார்கள் என்று அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் உள்ளூர் அ.தி.மு.க.வினர் இடைத்தேர்தலில் ஓட்டு போடுவதற்கு தயாராகி வருவதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாகவே அவர்கள் யாருக்கு ஓட்டு போடப்போகிறார்கள்? என்கிற எதிர்பார்ப்பு தொகுதி முழுவதும் மட்டுமின்றி அரசியல் களத்திலும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

    விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தி 93,730 வாக்குகளும் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 84,157 ஓட்டுகளும் பெற்றிருந்தனர். 9,573 வாக்குகள் வித்தியாசத்திலேயே அ.தி.மு.க. தோல்வியை தழுவி இருந்தது.


    முன்னதாக 2019-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 1 லட்சத்து 13,766 ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது. அப்போது தி.மு.க.வுக்கு 62,842 ஓட்டுகள் மட்டுமே கிடைத்துள்ளன. 2016-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்ற நிலையில் அ.தி.மு.க. 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்துள்ளது. இப்படி விக்கிரவாண்டி தொகுதியில் இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களிலும் தி.மு.க.வுக்கு அ.தி.மு.க கடும் போட்டியை ஏற்படுத்தி வென்றும் காட்டியுள்ளது.

    இதனால் அ.தி.மு.க. வினரின் ஓட்டுகள் பா.ம.க. வுக்கு கிடைத்தால் நிச்சயம் வெற்றி பெற்று விடலாம் என்பதே அக்கட்சியின் கணக்காக உள்ளது.

    இதை தொடர்ந்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அ.தி.மு.க.வினர் பா.ம.க.வுக்கு ஓட்டு போட வேண்டும் என்று வெளிப்படையாகவே கேட்டுக் கொண்டார். பிரசார பேனர்களிலும் ஜெயலலிதாவின் படத்தை போட்டு பா.ம.க. வினர் ஓட்டு கேட்டு வருகிறார்கள்.

    அக்கட்சி வேட்பாளரான சி.அன்புமணி மாநில வன்னியர் சங்க துணை தலைவராக இருந்து வருகிறார். விக்கிரவாண்டி தொகுதியில் 2016-ம் ஆண்டு பா.ம.க. தனித்து போட்டியிட்ட போது இவர் 41,428 ஓட்டுகளை பெற்றிருக்கிறார். வன்னியர் சமூகத்தினர் அதிக அளவில் உள்ள இந்த தொகுதி பா.ம.க.வுக்கு சாதகமான தொகுதியாகவே பார்க்கப்படும் நிலையில் அ.தி.மு.க.வில் உள்ள வன்னியர்களும் பா.ம.க. வேட்பாளருக்கே ஓட்டு போட தயாராகி வருவதாகவே அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.


    பா.ம.க. வேட்பாளரான சி.அன்புமணி வன்னியர் சங்கத்தில் செயல்பட்டு வருவதால் கட்சி பேதங்களை தாண்டி அவருக்கு அ.தி.மு.க.வினர் நிச்சயம் ஓட்டு போடுவார்கள் என்றே கூறப்படுகிறது. இதன் மூலம் விக்கிரவாண்டியில் தி.மு.க.வுக்கு பா.ம.க. கடும் போட்டியை ஏற்படுத்தி இருப்பதாகவே பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. ஏற்கனவே இடம் பெற்று தேர்தலை சந்தித்திருப்பதால் அந்த பாசத்தில் அ.தி.மு.க.வில் உள்ள 4 பேரில் 2 பேர் நிச்சயம் பா.ம.க.வுக்கு ஓட்டு போடுவார்கள் என்றே கணிக்கப்பட்டுள்ளது. இப்படி போட்டி கடுமையாகி இருப்பதாலேயே விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெறும் முனைப்புடன் தி.மு.க. அமைச்சர்கள் அங்கு பம்பரமாக சுழன்று பணியாற்றி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இப்படி அ.தி.மு.க.வினரின் ஓட்டை பெறுவதற்கு பா.ம.க. முழு அளவில் காய் நகர்த்தி உள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியும் அ.தி.மு.க. வினரின் ஓட்டுகளை பெறுவதில் தீவிரம் காட்டி வருகிறது.

    சென்னையில் நடந்த அ.தி.மு.க. உண்ணா விரத போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் நிர்வாகி ஒருவர் நேரில் சென்று ஆதரவு அளித்தார். இதற்கு எடப்பாடி பழனிசாமி நன்றியும் தெரிவித்துக் கொண்டார். இதனால் அ.தி.மு.க.வினரில் சிலர் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போட வாய்ப்பு இருப்பதாகவும் பேச்சு எழுந்துள்ளது.

    எப்போதுமே இடைத்தேர்தல் களத்தில் ஆளும் கட்சிக்கு வெற்றி என்கிற நிலையே காணப்படும். இதனால் மற்ற எந்த விஷயங்களும் அங்கு பேசு பொருளாக இருக்காது. ஆனால் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதற்கு மாறாக அ.தி.மு.க. வினரின் ஓட்டு யாருக்கு? என்பதே பிரதான பேச்சாக மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • உங்கள் மண்ணின் மைந்தர் அவர். மக்களோடு மக்களாக, மக்கள் பணி யாற்றும் மக்கள் தொண்டர் தான் அன்னியூர் சிவா.
    • கடந்த மூன்றாண்டு காலத்தில் செய்து தரப்பட்டிருக்கும் நலத்திட்டங்களை விவரித்து சொல்ல வேண்டும் என்றால் நேரம் போதாது!

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலையொட்டி தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து தனது பேச்சை வீடியோவில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் பேசி இருப்பதாவது:-

    விக்கிரவாண்டி மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.

    வரும் ஜூலை 10-ந் தேதி நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க. ஆற்றல் மிக்க வேட்பாளர் அன்னியூர் சிவா என்கிற சிவசண்முகத்துக்கு, உங்கள் உள்ளம் கவர்ந்த உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

    இந்தியா கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடும் அன்னியூர் சிவா என்கிற சிவசண்முகத்தை உங்களுக்கு தனியாக அறிமுகம் செய்ய வேண்டியதில்லை. உங்கள் மண்ணின் மைந்தர் அவர். மக்களோடு மக்களாக, மக்கள் பணி யாற்றும் மக்கள் தொண்டர் தான் அன்னியூர் சிவா.

    1986-ம் ஆண்டு முதல், அன்னியூர் சிவாவை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தடம் மாறாத-நிறம் மாறாத கலைஞரின் உடன் பிறப்புகளில் அவரும் ஒருவர். தலைவர் கலைஞரின் பாணியில் சொல்ல வேண்டும் என்றால், "தன்னால் கழகத்துக்கு என்ன லாபம் என்பதை மட்டுமே சிந்திக்கும் ரத்த நாளங்களில் ஒருவர்".

    * விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளராக-

    * ஒன்றுபட்ட மாவட்டத் தலைமைப் பொதுக்குழு உறுப்பினராக-

    * அன்னியூர் கூட்டுறவு விவசாய வங்கித் தலைவராக-

    * மாநில விவசாய அணி துணைச் செயலாளராக என்று பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், தற்போது விவசாயத் தொழிலாளர் அணியின் மாநிலச் செயலாளராக பொறுப்பு வகித்துக் கொண்டிருக்கிறார்.

    இப்படிப்பட்ட அன்னியூர் சிவாவை, விக்கிரவாண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்து அனுப்பி வையுங்கள் என்று அன்போடு நான் கேட்டுக் கொள்கிறேன். அன்போடு மட்டுமல்ல; உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன்.

    நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், கடந்த மூன்றாண்டு காலத்தில் செய்து தரப்பட்டிருக்கும் நலத்திட்டங்களை விவரித்து சொல்ல வேண்டும் என்றால் நேரம் போதாது!

    * 1 கோடியே 16 லட்சம் மகளிர் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை பெறுகிறார்கள். இந்த மாதத்தில் இருந்து புதிதாக 1 லட்சத்து 48 ஆயிரம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை தரப் போகிறோம்!

    * மகளிருக்குக் கட்டணமில்லா பஸ் வசதி செய்து தரப்பட்டிருக்கிறது.

    * 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலமாக, இளைஞர்கள் அனைத்து வேலைகளையும் பெற தகுதி உள்ளவர்களாக உயர்த்தப்பட்டு வருகிறார்கள்.

    * 'புதுமைப்பெண் திட்டம்' மூலமாக, அரசுப் பள்ளியில் படித்து கல்லூரிக் கல்விக்கு வரும் மாணவியருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தரப்படுகிறது.

    * இதே மாதிரி, மாணவர்களுக்கும் 'தமிழ்ப்புதல்வன்' திட்டம் மூலமாக தரப் போகிறோம்.

    இப்படி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஏதாவது ஒரு நேரடி பலன் கிடைக்கும் வகையில், நம்முடைய அரசு செயல்பட்டு வருகிறது.

    திராவிட முன்னேற்றக் கழக அரசு என்றாலே, சமூகநீதி அரசு! இது உங்கள் எல்லோருக்கும் நன்றாக தெரியும்!

    * பிற்படுத்தப்பட்டோருக்கு தனித்துறையை உருவாக்கியதே தலைவர் கலைஞர் தான்.

    * வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 20 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கிய ஆட்சி, தி.மு.க. ஆட்சி!

    * பட்டியலின சமூகங்களின் இடஒதுக்கீட்டை அதிகரித்த ஆட்சி, தி.மு.க. ஆட்சி.

    * அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை, 'சமத்துவ நாளாக' அறிவித்திருக்கிறோம்!

    * கழகம் வளர்த்த கொள்கைக் குன்றான ஏ.கோவிந்தசாமிக்கு மணி மண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது.

    * 1987-ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில், துப்பாக்கிச்சூட்டில் பலியான சமூகநீதிப் போராளிகளுக்கான நினைவகம் கட்டிக் கொண்டிருக்கிறோம்.

    இது இரண்டையும் சீக்கிரமே விழுப்புரத்தில் நான் திறந்து வைக்க இருக்கிறேன்.

    * கழகத் துணைப் பொதுச்செயலாளரும் உயர் கல்வித்துறை அமைச்சருமான பொன்முடியும், மறைந்த சட்டமன்ற உறுப்பினரான புகழேந்தியும் இந்த மாவட்டத்துக்கும், தொகுதிக்கும் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்கள்.

    எல்லா மக்களுக்கும் பொதுவான மக்கள் நலத்திட்டங்கள் தொடர, உங்களின் ஆதரவை வேண்டி நிற்கிறோம்.

    சமூகநீதிக்கு எதிரான பா.ஜ.க. கூட்டணியை தோற்கடிப்பது மூலமாக, சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    கழகத்தின் உண்மைத் தொண்டரான அன்னியூர் சிவா என்ற சிவசண்முகம், விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கும் உண்மையான சட்டமன்ற உறுப்பினராக இருப்பார்!

    மறவாதீர், உங்கள் சின்னம் உதயசூரியன்! வாக்களிப்பீர் உதயசூரியன்!

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


    • பிரசார பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.
    • அத்துமீறல்களை முறியடித்து பாமக வெற்று பெறும் என்றார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பிரசார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.

    இந்த பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், ஜான் பாண்டியன், ஜி.கே.வாசன், பாரிவேந்தர், தேவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    இந்த பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.

    பிரசார பொதுக்கூட்டத்தில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி பேசினார்.

    அதிமுகவினர் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டுமென அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். பெண் வாக்காளர்களை குறிவைத்து சவுமியா அன்புமணி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    10.5 சதவீத இட ஒதுக்கீடு நிறைவேற பாமகவுக்கு வாக்களிக்குமாறு அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மேலும், அத்துமீறல்களை முறியடித்து பாமக வெற்று பெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    விக்கிரவாண்டியில் பாமக வெற்றிபெறும். ஆட்சி எப்படி இருக்க கூடாது என்பதற்கு திமுக ஆட்சி உதாரணம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    பாமக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் மாற்றம் ஏற்பட இது முக்கியமான தேர்தல் என ஜான் பாண்டியன் கூறியுள்ளார்.

    பாமக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். பல தேர்தலை சந்தித்துள்ளோம், மாற வேண்டியது நாம்தான் என ரவி பச்சைமுத்து தெரிவித்துள்ளார்.

    • திமுக சார்ந்த அரசியலை விஜய் முன்னெடுத்தால் பாஜகவின் அரசியல் தனித்துவமாக இருக்கும்.
    • உருது பள்ளிகளை அதிகம் திறப்பது உருது திணிப்பு இல்லையா?

    திருச்சி:

    திருச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * திமுக சார்ந்த அரசியலை விஜய் கையிலெடுத்தாலும் பாஜகவுக்கு சந்தோஷம் தான்.

    * மத்திய அரசை திமுக பாணியில் ஒன்றிய அரசு என நடிகர் விஜய் கூறுகிறார். திமுக சார்ந்த அரசியலை நடிகர் விஜய் முன்னெடுப்பது போல் உள்ளது.

    * 2021க்கு முன்பு வரை மத்திய அரசு என்று தானே அனைவரும் கூறி வந்தனர்.

    * திமுக சார்ந்த அரசியலை விஜய் முன்னெடுத்தால் பாஜகவின் அரசியல் தனித்துவமாக இருக்கும்.

    * விஜய் திமுக ஆதரவு அரசியலை முன்னெடுப்பது பாஜகவின் வளர்ச்சிக்கு உதவும்.

    * தமிழகத்தில் உருது பள்ளிகளை அதிகம் கொண்டு வர வேண்டும் என்பது மாநிலக்கல்விக்கொள்கை. உருது பள்ளிகளை அதிகம் திறப்பது உருது திணிப்பு இல்லையா?

    * கடலோர பள்ளிகளில் மாணவர்களுக்கு மீனவர்கள் சார்ந்து பாடம் கற்பிப்பது குலக்கல்வி இல்லையா?

    * தமிழக அரசு கற்பிப்பது குலக்கல்வி இல்லை, மத்திய அரசு கொண்டு வந்தால் குலக்கல்வியா? என்று கேள்வி எழுப்பினார்.

    • திமுகவிற்கு உதவும் வகையில் விக்கிரவாண்டியில் அதிமுக போட்டியிடவில்லை.
    • நீட் விவகாரத்தில் விஜய் கருத்தை கூறுவதற்கு அவருக்கு கருத்துரிமை உள்ளது.

    திருச்சி:

    திருச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * ஆளுங்கட்சியின் அத்துமீறல்களையும் மீறி விக்கிரவாண்டி தேர்தலில் பாமக வெல்லும்.

    * விக்கிரவாண்டியில் போட்டியிடும் துணிச்சல் அதிமுகவிற்கு இல்லை.

    * 3வது, 4வது இடத்திற்கு செல்ல நேரிடும் என்பதால்தான் அதிமுக போட்டியிடவில்லை.

    * திமுகவிற்கு உதவும் வகையில் விக்கிரவாண்டியில் அதிமுக போட்டியிடவில்லை.

    * பாமகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என அதிமுக கூறி உள்ளது திமுகவிற்கு உதவும்.

    * விக்கிரவாண்டியில் திமுகவை வெற்றி பெற வைக்க அதிமுக மறைமுக உதவி செய்துள்ளது.

    * நீட் தேர்வு தொடர்பாக திமுக அரசு ஏன் வெள்ளை அறிக்கை வழங்க தயங்குகிறது? நீட் தேர்வுக்கு முன் - பின் மருத்துவ சேர்க்கை எப்படி நடைபெற்றது என வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    * நீட் விவகாரத்தில் விஜய் கருத்தை கூறுவதற்கு அவருக்கு கருத்துரிமை உள்ளது.

    * நீட் தேர்வு வந்த பிறகு அதிக அரசுப்பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.

    * பாஜக எதிர்ப்பு அரசியல் என்கிற ஒன்றுக்காக நீட் தேர்வை தற்போது எதிர்க்கிறார்கள் என்று கூறினார்.

    • சிறப்பு பார்வையாளர்களை அதிக எண்ணிக்கையில் அமர்த்த வேண்டும்.
    • மத்திய துணை இராணுவப் படையினரை அதிக எண்ணிக்கையில் நிறுத்த வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதி ஆசாரங்குப்பம் கிராமத்தில், திமுக கிளை செயலாளரும், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான ஏ.சி. இராமலிங்கம் என்பவரின் வீட்டில் வைத்து, கிருஷ்ணகிரி மாவட்ட திமுக நிர்வாகிகளால் வாக்காளர்களுக்கு கையூட்டாக வழங்கப்பட்டு வந்த வேட்டி, சட்டை, சேலை உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் முன்னிலையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் கைப்பற்றி அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். தேர்தல் விதிகளை மீறிய திமுகவினரின் இந்த சட்டவிரோத செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    தேர்தல் விதிகளை சற்றும் மதிக்காமல் திமுகவினர் பொதுமக்களுக்கு பரிசுப் பொருட்களை கையூட்டாக வழங்கியதைக் கண்டித்து, பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேர்தல் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறையினர் உள்ளிட்டோருக்கு புகார் கொடுத்து வரவழைத்தனர். ராமலிங்கத்தின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மீதமுள்ள பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால், தேர்தல் அதிகாரிகளும், காவல் அதிகாரிகளும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக வீட்டுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வேட்டி - சேலைகளை திமுகவினர் கொல்லைப்புறம் வழியாக எடுத்துச் செல்ல உதவி செய்துள்ளனர்.

    திமுகவின் மக்கள்விரோத செயல்பாடுகளுக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் கொந்தளித்துள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியில் மக்களின் கோபத்தை நன்றாக பார்க்க முடிகிறது. இதனால் விக்கிரவாண்டி தொகுதியில் தோல்வியடைந்து விடுவோம் என்று அஞ்சி நடுங்கும் திமுக, அரசு எந்திரத்தின் உதவியுடன் வாக்காளர்களை விலை கொடுத்து வாங்கவும், தேர்தல் நடைமுறையை சீர்குலைக்கவும் முயல்கிறது. இதற்கு தமிழக அரசு அதிகாரிகள் துணை போவது கண்டிக்கத்தக்கது.

    விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விரும்பினால், தேர்தல் அதிகாரியாக வெளிமாநிலத்தைச் சேர்ந்த இ.ஆ.ப அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும். சிறப்பு பார்வையாளர்களை அதிக எண்ணிக்கையில் அமர்த்த வேண்டும். மத்திய துணை இராணுவப் படையினரை அதிக எண்ணிக்கையில் நிறுத்த வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக வாக்காளர்களுக்கு கையூட்டு கொடுத்ததற்காக திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    • பிள்ளைகள், பேரன், பேத்திகள், படித்து கலெக்டராக டாக்டராக வேண்டும் என நானும், அன்புமணியும் கூறுகிறோம்.
    • தமிழ்நாட்டில் இன்று பிள்ளைகளுக்கு சாராயத்துடன் கஞ்சாவை கொடுத்து கெடுத்து விடுகிறார்கள்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி தொகுதியில் சிந்தாமணி, உலகலாம் பூண்டி ஆகிய இடங்களில், பா.ம.க., வேட்பாளர் சி.அன்புமணிக்கு ஆதரவாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த 45 ஆண்டு காலமாக இட ஒதுக்கீடு கேட்டு போராடி வந்து கொண்டிருக்கிறேன். 10 முறை சிறைச்சாலைகளுக்கு சென்று வந்துள்ளேன்.

    பிள்ளைகள், பேரன், பேத்திகள், படித்து கலெக்டராக டாக்டராக வேண்டும் என நானும், அன்புமணியும் கூறுகிறோம். நாங்கள் படியுங்கள் என்று கூறினால் ஆட்சியாளர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு குடியுங்கள் என்று கூறுகிறார்கள்.

    சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க கூறினால் மத்திய அரசு தான் செய்யனும் என்கிறார்கள் திமுகவினர். பெண்கள் விழிப்பாக உள்ளனர். நீங்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். அரசாங்கத்தை மாற்ற முடியும். கொள்ளையர்களை விரட்ட முடியும்.

    தமிழ்நாட்டில் இன்று பிள்ளைகளுக்கு சாராயத்துடன் கஞ்சாவை கொடுத்து கெடுத்து விடுகிறார்கள். சாதி வாரி கணக்கெடுப்பதால் வன்னியர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என தெரிந்துவிடும் நான் வன்னியர்களுக்காக மட்டும் கேட்கவில்லை. அனைத்து சமுதாயத்திற்கும் தான் நான் இட ஒதுக்கீடு கேட்டு போராடி சிறை சென்று வந்துள்ளேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அமைச்சர்கள் பலர் அங்கு முகாமிட்டு தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்து வருகிறார்.

    சென்னை:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த நா.புகழேந்தி, கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவர் மறைவுக்கு முன்பாக பாராளுமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டு விட்டதால், அந்த தேர்தலுடன் சேர்ந்து விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை நடத்த முடியாமல் போனது.

    இந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதிக்கு வருகிற 10-ம்தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும், அக்கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள தே.மு.தி.க.வும் புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டன.

    எனவே, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், தி.மு.க., பா.ஜனதா கூட்டணியில் உள்ள பா.ம.க., நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் மட்டுமே போட்டியிடுவதால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளராக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக டாக்டர் அபிநயா ஆகியோர் களத்தில் உள்ளனர்.

    ஆனால், இடையில் கடந்த மாதம் 20-ம்தேதி முதல் 29-ம்தேதி வரை தமிழக சட்டசபையும் கூடியதால், விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரம் சூடுபிடிக்காமல் இருந்து வந்தது. தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே இருக்கும் நிலையில், தற்போது அங்கு பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

    அமைச்சர்கள் பலர் அங்கு முகாமிட்டு தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அவரது மனைவி சவுமியா ஆகியோர் பா.ம.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகின்றனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்து வருகிறார்.

    இந்த நிலையில், தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு க ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபடுவது சந்தேகம் என்றும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மட்டும் வரும் 6, 7, 8 ஆகிய தேதிகளில், விக்கிரவாண்டி தொகுதியில் வேன் மூலம் வீதி வீதியாக சென்று பிரசாரத்தில் ஈடுபட இருப்பதாகவும் தி.மு.க. வட்டாரங்கள் தெரிவித்தன.

    • அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி இந்த தேர்தலில் போட்டியிடாததால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
    • இடது ஆள் காட்டி விரலில் மக்களவை தேர்தலின்போது வாக்களித்த மை இருந்தால் வலது கை விரலில் மை வைக்கப்படும்.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 10-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.

    இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியில் டாக்டர் அபிநயா உள்பட 29 பேர் போட்டியிடுகின்றனர்.

    அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி இந்த தேர்தலில் போட்டியிடாததால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவின்போது கை விரலில் மை வைக்கும் நடைமுறையில் மாற்றமில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

    இடது ஆள் காட்டி விரலில் மக்களவை தேர்தலின்போது வாக்களித்த மை இருந்தால் வலது கை விரலில் மை வைக்கப்படும்.

    மக்களவை தேர்தலின்போது இடது கை விரலில் வைக்கப்பட்ட மை அழியாமல் இருந்தால் வலது கை ஆள்காட்டி விரலில் வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

    ×