search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கன்னியாகுமரி ரெயில்"

    12CNI0110502024: சென்னை எழும்பூரில் இருந்து கன்னியா குமரிக்கு தினமும் கன்னியாகுமரி அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. மாலை 5.15 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் காைல 5.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். விரைவாக வும், சரியான நேரத்துக்கும் சென்று விடுவதால் தெ

    சென்னை:

    சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு தினமும் கன்னியாகுமரி அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.

    மாலை 5.15 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் காலை 5.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். விரைவாகவும், சரியான நேரத்துக்கும் சென்று விடுவதால் தென் மாவட்ட பயணிகள் இந்த ரெயிலில் பயணிப்பதையே விரும்புகிறார்கள். எனவே தினமும் இந்த ரெயில் நிரம்பி வழியும்.

    இதே போல் மறுமார்க்கத்தில் கன்னியாகுமரியில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.30 மணிக்கு சென்னை வந்தடையும். இதனால் பல்வேறு அலுவல்களுக்கு செல்பவர்களும் இந்த ரெயிலையே நம்பி வருகிறார்கள்.

    தினமும் கன்னியாகுமரி சென்றடைந்ததும் இந்த ரெயில் நாகர்கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு பராமரிப்பு பணிகள் மற்றும் சுத்தம் செய்யும் பணிகள் நடக்கும்.

    பின்னர் மாலை 3.30 மணிக்கு கன்னியாகுமரி சென்று அங்கிருந்து கன்னியாகுமரி-சென்னை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (எண்.12634) என்று சென்னைக்கு புறப்படும்.

    இந்த ரெயில் ரேக்குகள் பகலில் சும்மா நிற்பதாக சொல்லி பெங்களூரு-கன்னியாகுமரி ரெயிலுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    அதாவது காலை 8 மணிக்கு பெங்களூரில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் மாலை 4.30 மணிக்கு கன்னியாகுமரி சென்றடைந்ததும் அங்கிருந்து 5.30 மணிக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலாக சென்னைக்கு புறப்பட்டு செல்லும்.

    பெங்களூரில் இருந்து வரும் ரெயில் தாமதமானால் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு புறப்படுவதும் தாமதமாகும். சுமார் 2 மணி நேரம் தாமதம்.

    அது மட்டுமல்ல பெங்களூரில் இருந்து கன்னியாகுமரிக்கு சென்றதும் எவ்வித பராமரிப்பும், சுத்தமும் செய்யாமல் சென்னைக்கு புறப்படுகிறது. இது பயணிகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதேபோல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் அங்கு எந்த பராமரிப்பும் இல்லாமல் உடனடியாக பெங்களூரு புறப்பட்டு செல்கிறது.

    ரெயில்வே துறைக்கு பெங்களூரு-கன்னியாகுமரி வழித்தடத்தில் இயக்கப்பட்ட ஒரு ரேக் அதே போல் கன்னயாகுமரி-சென்னை வழித்தடத்தில் இயக்கப்பட்ட ஒரு ரேக் மிச்சப்படும்.

    ஆனால் 2 ரேக்கை மிச்சப்படுத்தி 2 ஆயிரம் பயணிகளை ரெயில்வே துறை தவிக்க விடுவது நியாயம்தானா? முன்பு போல் மீண்டும் இயக்காவிட்டால் தென் மாவட்ட மக்கள் போராட்டம் நடத்த தயாராகிறார்கள்.

    ×