search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிர்கிஸ்தான் வன்முறை"

    • உள்ளூர் மக்கள் வெளிநாட்டு மாணவர்களை தாக்கி வருகின்றனர்.
    • வெளிநாட்டு மாணவர்கள் தாங்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் இருந்து வெளியே வரவேண்டாம் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    கிர்கிஸ்தான் நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் இந்தியாவை சேர்ந்த 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இதில் புதுவையை சேர்ந்த 2 மாணவ-மாணவிகளும் அடங்குவர். இந்த நிலையில் கிர்கிஸ்தான் நாட்டில் கடந்த 13-ந் தேதி உள்ளூர் மக்களுக்கும் எகிப்து மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் உள்ளூர் மக்கள் வெளிநாட்டு மாணவர்களை தாக்கி வருகின்றனர்.

    இதையடுத்து வெளிநாட்டு மாணவர்கள் தாங்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் இருந்து வெளியே வரவேண்டாம் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

    இதனால் புதுச்சேரியில் இருந்து கிர்கிஸ்தான் நாட்டில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகள் சவுமியா, சரவணன் ஆகியோர் தங்களை மீட்ககோரி ஆடியோவில் பதிவு செய்து பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் செல்போனில் செய்தி அனுப்பியுள்ளனர்.

    இதையடுத்து மாணவ-மாணவியின் பெற்றோர் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர். அதில் கிர்கிஸ்தான் நாட்டில் தவிக்கும் தங்களது பிள்ளைகளை மீட்டு தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    • வன்முறை வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
    • கிர்கிஸ்தானில் உள்ள இந்திய மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

    பிஷ்கெக்:

    மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானில் இந்திய மாணவர்கள் உள்பட வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் பலர் படித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தலைநகர் பிஷ்கெக்கில் நேற்று நள்ளிரவு வெளிநாட்டு மாணவர்களை குறிவைத்து கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானை சேர்ந்த மாணவர்கள் தாக்கப்பட்டனர். இதில் வன்முறை வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    பாகிஸ்தானியர்கள் உட்பட வெளிநாட்டு மாணவர்களுக்கும் எகிப்தை சேர்ந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து வன்முறை வெடித்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்தன.

    இந்த நிலையில் கிர்கிஸ்தானில் உள்ள இந்திய மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து இந்திய தூதரகம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

    நாங்கள் எங்கள் மாணவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். தற்போது நிலைமை அமைதியாக உள்ளது, ஆனால் மாணவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கவும், ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் தூதரகத்தை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளது.

    மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் கூறும்போது, கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் உள்ள இந்திய மாணவர்களின் நலனைக் கண்காணித்து வருகிறோம். தற்போது நிலைமை அமைதியாக இருப்பதாக தகவல் வந்துள்ளது. தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

    ×