search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைரவர் சிறப்புகள்"

    • இந்த ஆலயத்தின் பல்வேறு பகுதிகளில் அபூர்வமான சிலைகள் உள்ளன.
    • அகஸ்தியர் வித்தியாசமான கோலத்தில் இந்த தலத்தில் மட்டுமே இருக்கிறார்.

    1. ராமகிரி ஆலயம் ராமர் காலத்துடன் தொடர்புடையது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களிலும் சிற்ப அமைப்புகள் காணப்படுகின்றன.

    2. ஆலயத்தின் முன்பகுதியில் மிகப்பெரிய அரசமரம் உள்ளது. பக்தர்களுக்கு நிழல் தரும் வகையிலும், கார்களை நிறுத்துவதற்கும் அந்த பகுதியில் மிகப்பெரிய இடம் அமைந்துள்ளது.

    3. இறைவனின் அருவ வழிபாட்டுமுறை சிவலிங்கம், இறைவனின் திருஉருவம் வழிபாட்டு முறை ஸ்ரீகால பைரவ ஸ்வரூபம் எனப்படும்.

    4. அஷ்டமி நாட்களில் ராமகிரி ஆலயத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகமாக உள்ளது. என்றாலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கிறார்கள்.

    5. காசியில் இருந்து லிங்கம் எடுத்துக்கொண்டு ராமேஸ்வரத்துக்கு சென்ற ஆஞ்சநேயர் இந்த இடத்தில்தான் லிங்கத்தை நழுவ விட்டார். எனவே இந்த தலம் காசி, ராமேஸ்வரம் ஆகிய இரு தலங்களுக்கும் சமமான தலமாக கருதப்படுகிறது.

    6. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் ஆலயத்தின் சில பகுதிகள் சீரமைக்கப்படாமலேயே இருக்கின்றன. இதனால் சப்த மாதர் சன்னதி உள்பட சில இடங்களில் வவ்வால்கள் நிறைந்து உள்ளன.

    7. கால பைரவரின் வாகனம் நாய். அதனால்தான் என்னவோ இந்த ஆலயத்தின் வெளிப்பகுதியில் நிறைய நாய்கள் உலா வருவதை காண முடிகிறது. நந்தி தீர்த்தம் அருகிலும், கார் பார்க்கிங் பகுதியிலும் ஏராளமான நாய்கள் அங்கு சுற்றியபடியே இருக்கின்றன.

    8. ஆஞ்சநேயர் இந்த தலத்தில் தவற விட்ட லிங்கத்தை எப்படியாவது மீட்டு செல்ல வேண்டும் என்று தனது வாலால் லிங்கத்தை இழுத்தார் என்பது தல வரலாறு ஆகும். மரகதாம்பிகை சன்னதி அருகே இதை பிரதிபலிக்கும் வகையில் அற்புதமான சிற்பம் ஒன்று ஒரு தூணில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    9. ராமகிரி கால பைரவரை 8 வாரம் தொடர்ச்சியாக வந்துதரிசனம் செய்தால் வேண்டியது அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம் ஆகும். முதல் வாரம் எந்த கிழமை வழிபாட்டை தொடங்குகிறார்களோ, அதே கிழமைகளில் 8 வாரமும் வழிபட வேண்டும் என்று விதி வகுத்துள்ளனர்.

    10. இந்த தலம் மிகச்சிறந்த பரிகார தலமாகும். திருமணம், குழந்தை பாக்கியம், எதிரிகள் தொல்லை, பித்ரு தோஷம் போன்றவற்றுக்கு இந்த தலத்தில் பரிகாரம் செய்கிறார்கள்.

    11. இந்த தலத்தில் திருமணம் நடத்தப்படுகிறது. ஆனால் 15 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும்.

    12. கோவிலுக்குள் செல்போன், கேமரா ஆகியவை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. லுங்கி அணிந்து வருபவர்களுக்கும் ஆலயத்துக்குள் அனுமதி இல்லை.

    13. இந்த ஆலயத்தின் அனைத்து சன்னதிகளிலும் ஆச்சார விதிமுறை படியே பூஜைகளும், ஆராதனைகளும் செய்யப்படுகின்றன.

    14. கால பைரவர், வாலீஸ்வரர் ஆகியோருக்கு அர்ச்சனை செய்யும் போது தமிழிலும் அர்ச்சனை செய்கிறார்கள் என்பது குறிப்பித்தக்கது.

    15. ஆலயத்தின் ஒவ்வொரு பகுதியையும் கண்காணிப்பதற்கு ரகசிய காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதை தனி அறையில் இருந்து கண்காணிக்கிறார்கள்.

    16. ஆலயத்தின் சுற்றுச்சுவர்களில் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. அனைத்து கல்வெட்டுக்களும் ஆதி தமிழில் உள்ளன. பழமையான தமிழ் மன்னர்கள் ஆட்சி காலத்தில் அந்த கல்வெட்டு வைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    17.தீபம், கற்பூரம் போன்றவை ஏற்றுவதற்கு இந்த தலத்தில்தடை விதிக்கப்பட்டுள்ளது. அகல் விளக்கு மட்டுமே ஏற்ற அனுமதிக்கிறார்கள். அதுவும் ஆலயத்துக்கு வெளியில்தான் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    18. ராமகிரி மலையில் இருக்கும் பாலமுருகர் ஆலயம் 1967ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இங்கு ஆடி மாதம் கிருத்திகை விழா மிக கோலாகலமாக நடக்கிறது. சுமார் 1 லட்சம் பக்தர்கள் அந்த சமயத்தில் திரள்வார்கள்.

    19. இந்த ஆலயத்தின் பல்வேறு பகுதிகளில் அபூர்வமான சிலைகள் உள்ளன. அகஸ்தியர் வித்தியாசமான கோலத்தில் இந்த தலத்தில் மட்டுமே இருக்கிறார். கஜ முக விநாயகர், வீர பத்திரர் ஆகியோர் அபூர்வமான வடிவமைப்பாக கருதப்படுகிறது.

    20.நமது ஜாதகத்தில் அமைந்துள்ள அனைத்து கிரக தோஷங்களையும் நிவர்த்தி செய்ய வல்லது பைரவர் வழிபாடு.

    • ஓம் வடுகூர் நாதனே போற்றி
    • ஓம் வடகிழக்கருள்வோனேபோற்றி

    ஓம்பைரவனேபோற்றி

    ஓம்பயநாசகனேபோற்றி

    ஓம்அஷ்டரூபனேபோற்றி

    ஓம்அஷ்டமித் தோன்றலேபோற்றி

    ஓம்அயன்குருவேபோற்றி

    ஓம்அறக்காவலனேபோற்றி

    ஓம்அகந்தையழிப்பவனேபோற்றி

    ஓம்அடங்காரின் அழிவேபோற்றி

    ஓம்அற்புதனேபோற்றி

    ஓம்அசிதாங்கபைரவனேபோற்றி

    -10

    ஓம்ஆனந்த பைரவனேபோற்றி

    ஓம்ஆலயக் காவலனேபோற்றி

    ஓம்இன்னல் பொடிப்பவனேபோற்றி

    ஓம்இடுகாட்டுமிருப்பவனேபோற்றி

    ஓம்உக்ரபைரவனேபோற்றி

    ஓம்உடுக்கையேந்தியவனேபோற்றி

    ஓம்உதிரங்குடித்தவனேபோற்றி

    ஓம்உன்மத்த பைரவனேபோற்றி

    ஓம்உறங்கையில் காப்பவனேபோற்றி

    ஓம்ஊழத்தருள்வோனேபோற்றி

    -20

    ஓம்எல்லைத்தேவனேபோற்றி

    ஓம்எளிதில் இரங்குபவனேபோற்றி

    ஓம்கபாலதாரியேபோற்றி

    ஓம்கங்காளமூர்த்தியேபோற்றி

    ஓம்கர்வபங்கனேபோற்றி

    ஓம்கல்பாந்தபைரவனேபோற்றி

    ஓம்கதாயுதனேபோற்றி

    ஓம்கனல் வீசுங்கண்ணனேபோற்றி

    ஓம்கருமேகநிறனேபோற்றி

    ஓம்கட்வாங்கதாரியேபோற்றி

    -30

    ஓம்களவைக்குலைப்போனேபோற்றி

    ஓம்கருணாமூர்த்தியேபோற்றி

    ஓம்காலபைரவனேபோற்றி

    ஓம்காபாலிகர்தேவனேபோற்றி

    ஓம்கார்த்திகையில் பிறந்தவனேபோற்றி

    ஓம்காளாஷ்டமிநாதனேபோற்றி

    ஓம்காசிநாதனேபோற்றி

    ஓம்காவல்தெய்வமேபோற்றி

    ஓம்கிரோத பைரவனேபோற்றி

    ஓம்கொன்றைப்பிரியனேபோற்றி

    -40

    ஓம்சண்டபைரவனேபோற்றி

    ஓம்சட்டை நாதனேபோற்றி

    ஓம்சம்ஹார பைரவனேபோற்றி

    ஓம்சம்ஹாரகால பைரவனேபோற்றி

    ஓம்சிவத்தோன்றலேபோற்றி

    ஓம்சிவாலயத்திருப்போனேபோற்றி

    ஓம்சிஷகனேபோற்றி

    ஓம்சீக்காழித்தேவனேபோற்றி

    ஓம்சுடர்ச்சடையனேபோற்றி

    ஓம்சுதந்திர பைரவனேபோற்றி

    -50

    ஓம்சிவ அம்சனேபோற்றி

    ஓம்சுவேச்சா பைரவனேபோற்றி

    ஓம்சூலதாரியேபோற்றி

    ஓம்சூழ்வினையறுப்பவனேபோற்றி

    ஓம்செம்மேனியனேபோற்றி

    ஓம்ேக்ஷத்ரபாலனேபோற்றி

    ஓம்தனிச்சன்னதியுளானேபோற்றி

    ஓம்தலங்களின் காவலனேபோற்றி

    ஓம்தீதழிப்பவனேபோற்றி

    ஓம்துஸ்வப்னநாசகனேபோற்றி

    -60

    ஓம்தெற்கு நோக்கனேபோற்றி

    ஓம்தைரியமளிப்பவனேபோற்றி

    ஓம்நவரஸரூபனேபோற்றி

    ஓம்நரசிம்மசாந்தனேபோற்றி

    ஓம்நள்ளிரவு நாயகனேபோற்றி

    ஓம்நரகம் நீக்குபவனேபோற்றி

    ஓம்நாய் வாகனனேபோற்றி

    ஓம்நாடியருள்வோனேபோற்றி

    ஓம்நிமலனேபோற்றி

    ஓம்நிர்வாணனேபோற்றி

    -70

    ஓம்நிறைவளிப்பவனேபோற்றி

    ஓம்நின்றருள்வோனேபோற்றி

    ஓம்பயங்கர ஆயுதனேபோற்றி

    ஓம்பகையழிப்பவனே போற்றி

    ஓம்பரசு ஏந்தியவனேபோற்றி

    ஓம்பலிபீடத்துறைவோனேபோற்றி

    ஓம்பாபக்ஷ்யனேபோற்றி

    ஓம்பால பைரவனேபோற்றி

    ஓம்பாம்பணியனேபோற்றி

    ஓம்பிரளயகாலனேபோற்றி

    -80

    ஓம்பிரம்மசிரச்சேதனேபோற்றி

    ஓம்பூஷண பைரவனேபோற்றி

    ஓம்பூதப்ரேத நாதனேபோற்றி

    ஓம்பெரியவனேபோற்றி

    ஓம்பைராகியர் நாதனேபோற்றி

    ஓம்மல நாசகனேபோற்றி

    ஓம்மகா பைரவனேபோற்றி

    ஓம்மணி ஞாணனேபோற்றி

    ஓம்குண்டலனேபோற்றி

    ஓம்மகோதரனேபோற்றி

    -90

    ஓம்மார்த்தாண்ட பைரவனேபோற்றி

    ஓம்முக்கண்ணனேபோற்றி

    ஓம்முக்தியருள்வோனேபோற்றி

    ஓம்முனீஸ்வரனேபோற்றி

    ஓம்மூலமூர்த்தியேபோற்றி

    ஓம்யமவாதனை நீக்குபவனேபோற்றி

    ஓம்யாவர்க்கும் எளியவனேபோற்றி

    ஓம்ருத்ரனேபோற்றி

    ஓம்ருத்ராக்ஷதாரியேபோற்றி

    ஓம்வடுக பைரவனேபோற்றி

    -100

    ஓம்வடுகூர் நாதனே போற்றி

    ஓம்வடகிழக்கருள்வோனேபோற்றி

    ஓம்வடைமாலைப்பிரியனேபோற்றி

    ஓம்வாரணாசி வேந்தேபோற்றி

    ஓம்வாமனர்க்கருளியவனேபோற்றி

    ஓம்வீபீஷண பைரவனேபோற்றி

    ஓம்வீழாமல் காப்பவனேபோற்றி

    ஓம்வேத முடிவேபோற்றி

    -108

    • 64 பைரவர்களில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விளக்கு போடலாம்.
    • இதை செய்ய முடியாதவர்கள் தினமும் சாதாரணமான விளக்கு போடலாம்.

    தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும், விபத்து, துர்மரணம் இவற்றிலிருந்தும் காப்பவர் பைரவர் மட்டுமே.

    இத்துன்பங்களில் இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும்.

    பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் வெண் பூசணியில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்.

    சனிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 8 மணிக்குள் அல்லது கோவில் நடை சாத்துவர்க்குள் வெண்பூசணியில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்.

    திறந்திருக்கும் பைரவருக்கு தான் விளக்கு போட வேண்டும், கண்டிப்பாக பைரவர் சிலையை திரை இட்டு மூட்டி இருந்தாலோ, கதவு சாத்தி இருந்தாலோ அந்த பைரவருக்கு விளக்கு போடக்கூடாது.

    64 பைரவர்களில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விளக்கு போடலாம்.

    இதை செய்ய முடியாதவர்கள் தினமும் சாதாரணமான விளக்கு போடலாம், அதுவும் முடியாதவர்கள் வாரத்தில் ஒருநாள் மட்டும் சாதாரணமான விளக்கு போடலாம்.

    • வறுமை நீங்கவும், செல்வச் செழிப்பு ஏற்படவும் கால பைரவரை வழிபடலாம்.
    • பாவம் நீங்கியதால் உயிர்கள் உன்னத நிலையை அடைந்து இறைவன் திருவடியை அடைகின்றன.

    கால பைரவரை வணங்கினால் எதிரிகளின் தொல்லை நீங்கும்.

    திருமணத் தடைகள் விலகும்.

    சனிக்கிழமைகளில் வாசனை வீசும் மலர்களால் பைரவரை அர்ச்சனை செய்து வழிபட்டால் சனி தோஷங்களும், நவக்கிரகத் தொல்லைகளும் நீங்கும்.

    தேய்பிறை அஷ்டமி அல்லது ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குழந்தைப் பேறு கிட்டும்.

    வறுமை நீங்கவும், செல்வச் செழிப்பு ஏற்படவும் கால பைரவரை வழிபடலாம்.

    பாவம் நீங்கியதால் உயிர்கள் உன்னத நிலையை அடைந்து இறைவன் திருவடியை அடைகின்றன.

    இதற்கு காரணமாக இருக்கும் கால பைரவரை நாமும் அவசியம் வழிபட வேண்டும்.

    கால பைரவர் அருள் பெற நமது நாட்டில் எத்தனையோ ஆலயங்கள் உள்ளன.

    • ஏனெனில் அன்றைய நாளில் அஷ்டலட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாக ஐதீகம்.
    • எனவே அன்று பைரவரை வணங்கிட மக்கள் அனைத்து வளங்களையும் பெற்று சிறப்புடன் வாழலாம்.

    பைரவருடைய உடலின் அங்கங்களாக 12 ராசிகள் அமைந்துள்ளன.

    அவை மேஷம் சிரசு, ரிஷபம் வாய், மிதுனம் இரு கைகள், கடகம் மார்பு, சிம்மம் வயிறு, கன்னி இடை, துலாம் புட்டங்கள், விருச்சிகம் மர்ம ஸ்தானங்கள், தனுசு தொடை, மகரம் முழங்கால்கள், கும்பம் காலின் கீழ் பகுதி, மீனம் கால்களின் அடிப்பாகம் என 12 ராசிகளும் நிறைந்துள்ளன.

    பைரவரின் சேவகர்களாக நவக்கிரகங்களும் இருப்பதால் தன்னை வணங்கக் கூடிய பக்தர்கள் எந்த ராசியைச் சேர்ந்தவராயினும் நவக்கோள்களில் எந்தக் கோளின் தாக்கத்தால் பாதிப்பு வந்தாலும் கெடுதல்கள் அனைத்தில் இருந்தும் விடுவிப்பார்.

    பைரவரை வழிபட ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, ஜென்மச்சனி, அர்த் தாஷ்டமச்சனி போன்ற சனி தோஷங்கள் விலகி விடும்.

    பைரவப்பெருமானை வழிபட ஒவ்வொரு மாத அஷ்டமியும் மிகச் சிறந்த நாளாகும்.

    ஏனெனில் அன்றைய நாளில் அஷ்டலட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாக ஐதீகம்.

    எனவே அன்று பைரவரை வணங்கிட மக்கள் அனைத்து வளங்களையும் பெற்று சிறப்புடன் வாழலாம்.

    பைரவ உருவங்களில் பல உண்டு என்றாலும் பிரதானமானவராகக் கருதப்படுபவர் கால பைரவர்.

    காசி கோவிலில் கால பைரவர்தான் பிரதானமாக வணங்கப்படுகிறார்.

    சிவன் கோவில்களில் கால பைரவர்தான் காவல் தெய்வமாக விளங்குகிறார்.

    காலனாகிய எமனையே சம்காரம் செய்து மார்க்கண்டேயனுக்கு அருள் செய்த மூர்த்தி இவர்.

    எனவே இவரை கால சம்கார மூர்த்தி என்றும் அழைக்கின்றனர்.

    • சிவபெருமானின் தத்புருஷ முகத்தில் இருந்து தோன்றியவர் பைரவர்.
    • இவர் காசியில் சிவ கணங்களுக்கு தலைவராக விளங்குபவர்.

    சிவபெருமானின் தத்புருஷ முகத்தில் இருந்து தோன்றியவர் பைரவர்.

    இவர் காசியில் சிவ கணங்களுக்கு தலைவராக விளங்குபவர்.

    ஆணவம் கொண்ட பிரம்மனின் சிரம் கொய்தவர். மன்மதனின் கர்வம் அடங்கச் செய்தவர்.

    முனிவரின் சாபத்தில் இருந்து தேவேந்திரன் மகன் ஜெயந்தனைக் காத்தவர்.

    சனிக்கு அருள்பாலித்து ஈஸ்வர பட்டம் கொடுத்து சனீஸ்வரராக்கி நவக்கிரகங்களில் வலிமை வாய்ந்த கோளாக உயர்த்தி பெருமை சேர்த்தவர்.

    இப்படி பைரவர் பல்வேறு சிறப்புகளைக் கொண்டவர்.

    இவரைக் கால பைரவர், மார்த்தாண்டவ பைரவர், சேத்ரபாலகர், சத்ரு சம்கார பைரவர், வடுக பைரவர், சொர்ணகர்சன பைரவர் என்று பல பெயர்களில் அழைத்து வழிபடுகிறோம்.

    ஒரு சமயம் அந்தகாசுரன் என்னும் அரக்கனின் அட்டூழியங்களை ஒழிக்க தேவர்கள் சிவபெருமானாரை வேண்டினார்கள்.

    ஈசன் தன் இதய அக்னியிலிருந்து பைரவரை உருவாக்கினார்.

    அது விஸ்வரூபமெடுத்து ஒன்றாகி, ஒன்றிலிருந்து எட்டாகி, எட்டில் இருந்து அறுபத்து நான்காக மாறியது.

    அதோடு அசுரர்களை முழுவதுமாக அழித்து தேவர்களுக்கு அமைதியை வழங்கியது.

    இதுவே பைரவ அவதாரத்தின் தனித்துவம் ஆகும்.

    இதனால் மகிழ்வடைந்த தேவர்கள் அறுபத்து நான்கு யோகினிகளை அவர்களுக்கு திருமணம் முடித்து வைத்ததாக புராணங்கள் கூறுகின்றன.

    ஆனால் தற்சமயம் நம்முடைய வழிபாட்டில் எட்டு பைரவர்களை மட்டுமே வழிபடும் முறை இருந்து வருகிறது.

    • தினமும் பைரவர் காயத்ரியை சொல்லி வந்தால் செல்வம் பெருகும். இது நிதர்சனமான உண்மை.
    • தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி செவ்வாய் தோறும் பைரவரை வழிபட்டு வந்தால் உங்கள் வாழ்வு சிறக்கும்.

    பைரவருக்கு சந்தன காப்பு அபிஷேகம் செய்து வழிபடுவது மிக, மிக பிடிக்கும்.

    தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, சந்தன மாலை அணிவித்து சர்க்கரை பொங்கல், தயிர் சாதம், தேன், அவல் பாயசம் மற்றும் பழ வகைகளை படைத்து பைரவரை வழிபட்டால் நாம் விரும்பியதை எல்லாம் பைரவர் தருவார்.

    தினமும் பைரவர் காயத்ரியை சொல்லி வந்தால் செல்வம் பெருகும். இது நிதர்சனமான உண்மை.

    செல்வத்தை நமக்கு வாரி வழங்கும் அஷ்ட லட்சுமிகள், ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டு தங்களது செல்வ வள சக்தியை மேம்படுத்தி கொள்கிறார்கள்.

    எனவே நாமும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று பைரவரை வழிபட்டால் மங்காத செல்வ வளத்தை பெறலாம் என்பது ஐதீகமாகும்.

    தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி செவ்வாய் தோறும் பைரவரை வழிபட்டு வந்தால் உங்கள் வாழ்வு சிறக்கும்.

    காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடியும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்பட வேண்டும்.

    அதே போல் ஆலயத்தின் மற்ற சன்னதிகளை மூடி சாவியை பைரவர் பாதத்தில் வைத்து விட்டு அதன்பின் வெளிக் கதவை பூட்டி சாவியை எடுத்துச் செல்லும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.

    • சிவபெருமானின் முக்கிய அம்சமான இவரை ஒவ்வொருவரும் அவசியம் வழிபட வேண்டும்.
    • பைரவர் என்றால் நம் பயம், துன்பம், துயரம் எல்லாவற்றையும் போக்கி நம்மை காப்பவர் என்று பொருள்.

    சிவாலயங்களில் நீங்கள் சன்னதியை சுற்றி வரும் போது வட கிழக்குப் பகுதியில் பைரவர் வீற்றிருப்தைப் பார்த்து இருப்பீர்கள்.

    சிவபெருமானின் முக்கிய அம்சமான இவரை ஒவ்வொருவரும் அவசியம் வழிபட வேண்டும்.

    ஏனெனில் பைரவரை மனம் உருகி வழிபடா விட்டால், நீங்கள் சிவாலயத்துக்கு சென்று வழிபட்டதற்கான நோக்கமே பயன் தராமல் போய் விடக் கூடும்.

    அந்த அளவுக்கு பைரவர் மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்தவர்.

    பைரவர் என்றால் நம் பயம், துன்பம், துயரம் எல்லாவற்றையும் போக்கி நம்மை காப்பவர் என்று பொருள்.

    வாழ்வில் உங்களுக்கு எப்போதாவது இக்கட்டான ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் மனம் கலங்காமல், நம்பிக்கையுடன் "பைரவா... காப்பாற்று'' என்று அழைத்துப் பாருங்கள்,

    காகம் விரட்டும் போது கோழி தன் குஞ்சுகளை எப்படி தன் இறக்கைக்குள் வைத்து காப்பாற்றுகிறதோ, அப்படி ஓடோடி வந்து பைரவர் உங்களை காப்பாற்றுவர்.

    பைரவரை நீங்கள் தொடர்ந்து தினமும் வணங்கினால், நவக்கிரக தோஷங்கள் விலகி, தீ வினைகள் அழிந்து, பிறவிப் பயனை உணர்ந்து, சுப மங்களமாக, தலை குனியா வாழ்க்கையை நிச்சயம் வாழ்வீர்கள்.

    8 மற்றும் 64 என்ற எண்ணிக்கையில் பல கோலங்களில் பைரவர் பக்தர்களுக்கு அருள் புரிகிறார்.

    ×