search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "20 லட்சம் பேர்"

    • சென்னையில் 432 இடங்களில் குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது.
    • 1 மணி நேரத்துக்கு முன்பாக தேர்வுக்கூடத்துக்கு சென்றுவிட வேண்டும்.

    சென்னை:

    தமிழக அரசின் குரூப்-4 பதவிகளில் வரும் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநில உதவியாளர்- 2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து-தட்டச்சர்- 445, தனிப்பட்ட உதவியாளர், கிளர்க்- 3, தனி செயலாளர்- 4, இளநிலை நிர்வாகி- 41, வரவேற்பாளர்- 1, பால் பதிவாளர்- 15, ஆய்வக உதவியாளர்- 25, பில் கலெக்டர்- 66, தொழிற்சாலை மூத்த உதவியாளர்- 49, வன பாதுகாவலர், காவலர்- 1,177, இளநிலை ஆய்வாளர்- 1 ஆகிய 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கான, போட்டித்தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஜனவரி மாதம் 30-ந்தேதி வெளியிட்டது.

    இந்த தேர்வுக்கு 6 ஆயிரத்து 244 பணியிடங்களுக்கு 20 லட்சத்து 37 ஆயிரத்து 101 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதாவது ஒரு பணியிடத்துக்கு சுமார் 326 பேர் போட்டியிடுகின்றனர்.

    இவர்களுக்கான எழுத்துத்தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் 38 மையங்களை உள்ளடக்கி 7 ஆயிரத்து 247 தேர்வு அறைகளில் நடைபெறுகிறது. தேர்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை 3 மணி நேரம் நடைபெறும்.

    தேர்வு தொடங்குவதற்கு 1 மணி நேரத்துக்கு முன்பாக தேர்வுக்கூடத்துக்கு சென்றுவிட வேண்டும் என்று தேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    சென்னையில் 432 இடங்களில் குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 276 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×