search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலை-அறிவியல் கல்லூரிகள்"

    • முதல்கட்ட கலந்தாய்வு வரும் 15-ந் தேதி வரை நடக்கிறது.
    • கலந்தாய்வு அடுத்த மாதம் 24-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெறும்.

    சென்னை:

    தமிழக உயா்கல்வித் துறையின் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் 169 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில், பி.எஸ்சி. பி.காம். பி.ஏ. என பல்வேறு பாடப்பிரிவுகளில் 1.07 லட்சம் இடங்கள் உள்ளன.

    இதற்கான, 2024-2025-ம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் 6-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 2 லட்சத்து 58 ஆயிரத்து 527 விண்ணப் பங்கள் குவிந்தன. அதில், 2 லட்சத்து 11 ஆயிரத்து 10 மாணவா்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தினா்.

    இந்தநிலையில், கடந்த மாதம் 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சிறப்பு பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில், ஏராளமான மாணவ, மாணவிகள் இடங்களைப் பெற்றனா்.

    இதை அடுத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2024-2025-ம் கல்வியாண்டுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு நாளை (திங்கள்கிழமை) தொடங்குகிறது. முதல்கட்ட கலந்தாய்வு வரும் 15-ந் தேதி வரை நடக்கிறது.

    தரவரிசை பட்டியல் அடிப் படையில் மாணவா்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப் படுவா். 2-ம் கட்ட பொதுப்பிரிவு கலந்தாய்வு அடுத்த மாதம் 24-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெறும்.

    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலந் தாய்வில் பட்டப்படிப்புக் கான மாணவா் சோ்க்கை ஆணை பெற்ற மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் வரும் ஜூலை 3-ந்தேதி தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×