search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடுகளம்"

    • 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இந்தியா இருக்கிறது.
    • இந்த ஆடுகளத்தில் விளையாடுவது சவாலானது.

    நியூயார்க்:

    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி 'ஏ'பிரிவில் இடம் பெற்று உள்ளது. பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தியது.

    இந்திய அணி 2-வது போட்டியில் பாகிஸ்தானை இன்று (ஞாயிற்றுக்கிழமை) எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் நியூயார்க்கில் உள்ள நசாவு ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

    பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இந்தியா இருக்கிறது. பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவிடம் அதிர்ச்சிகரமாக தோற்றது.

    இந்தப் போட்டி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறிய தாவது:-

    7 மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தானுக்கு எதிராக ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை போட்டியில் விளையாடினோம். தற்போது 20 ஓவர் உலக கோப்பையில் விளையாட இருக்கிறோம். பெரிதாக எந்த ஒரு மாற்றமும் இல்லை.

    அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஆட்டத்தின் சூழ் நிலைகளுக்கு ஏற்றவாறு விளையாட விரும்புகிறேன். நியூயார்க் ஆடுகளங்களைப் பற்றி புரிந்து கொள்வதற்கு கடினமாக இருக்கிறது. இந்த ஆடுகளத்தில் விளையாடுவது சவாலானது.

    ஆடுகளங்களை சீரமைப்பவர்களும் ஆடுகளம் குறித்து புரிந்து கொள்ள சிரமப்படுகிறார்கள். ஆடுகளங்கள் எப்படி இருக்கும் என்பது அவர்களுக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×