என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முன் ஜென்ம பாவம் நீங்கும்"
- சிவபெருமானை வழிபட்டால் தோஷங்கள் விலகி துன்பங்கள் நீங்கி நல்லது நடக்கும்.
- துவாதசியும் திரயோதசியும் சேர்ந்து வரும் பிரஷத்தையே திவ்ய பிரதோஷம் என்பார்கள்.
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறையில் திரயோதசி தினத்தன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை, பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் சிவபெருமானை வழிபட்டால் தோஷங்கள் விலகி துன்பங்கள் நீங்கி நல்லது நடக்கும் என்பது ஐதீகம். பிரதோஷ கால நேரத்தில் நந்திக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை நடத்துவார்கள்.
அபிஷேகத்துக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டால் அபரிமிதமான பலனைப்பெற முடியும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அதிலும் ஒவ்வொரு மாதமும் எந்த கிழமைகளில், எந்த திதி சேர்க்கையுடன் பிரதோஷம் வருகிறது என்பதை பொருத்து பலன்கள் அமையும்.
அந்த வகையில் இன்றைய பிரதோஷம் திவ்ய பிரதோஷம் ஆகும். துவாதசியும் திரயோதசியும் சேர்ந்து வரும் பிரஷத்தையே திவ்ய பிரதோஷம் என்பார்கள்.
இந்த பிரதோஷத்தில் வழிபட்டால் முன்ஜென்ம பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை. இன்று மாலை சிவாலயங்களுக்கு சென்று திருவாசகம் பாடி, வில்வ இலை சாத்தி, 16 தீபம் ஏற்றி வழிபட்டால் அந்த பலனை பெற முடியும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்