search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளெருக்கு விநாயகர்"

    • விநாயகரின் திருவருள் நிலைபெற்றிருக்கும் இடம் “ஸ்வேதார்க்கம்” எனப்படும் வெள்ளெருக்கு செடியாகும்.
    • இம்மகா மூலிகையை சிவபெருமான் ஸ்ரீ காக புஜண்ட மகரிஷிக்கு அளித்தார்.

    விநாயகரின் திருவருள் நிலைபெற்றிருக்கும் இடம் "ஸ்வேதார்க்கம்" எனப்படும் வெள்ளெருக்கு செடியாகும்.

    இம்மகா மூலிகையை சிவபெருமான் ஸ்ரீ காக புஜண்ட மகரிஷிக்கு அளித்தார்.

    வெள்ளெருக்கினால் விநாயகர் செய்து வீட்டில் வைத்து ஸ்வேதார்க்க விநாயகரது துதியை செவ்வாய் தோறும் வாசித்து வந்தால் சகல பாக்கியங்களும் படிப்படியாக வந்து சேரும்.

    பூ பூக்கும் காய் காக்காது!

    ஈரோடு அருகே உள்ள கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் மிகப்பழமையான வன்னி மரம் உள்ளது.

    இந்த மரத்தில் பூ பூக்கும். ஆனால் காய் காய்க்காது. ஒரு பக்கம் முள் இருக்கும். மறுபக்கம் முள் இருக்காது.

    இந்த மரத்தின் இலையைத் தண்ணீரில் போட்டால் எவ்வளவு நாள் ஆனாலும் தண்ணீர் கெட்டுப் போகாது.

    பழனி பங்குனி உத்திரத்திருவிழாவுக்கு தீர்த்தக் காவடி கொண்டு செல்லும் போது காவிரி தீர்த்தத்தில் இந்த இலைகளைப் போட்டுத்தான் பக்தர்கள் பாத யாத்திரையாகக் கொண்டு செல்வார்கள்.

    • வீட்டில் வெள்ளெருக்கு விநாயகர் இருப்பது விசேஷமானது.
    • அவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டியதில்லை.எருக்கம்பூ, அருகம்புல், வன்னியிலை ஆகியவற்றைச் சூட்டி வழிபடலாம்.

    வடக்கு நோக்கி செல்லும் வெள்ளெருக்கு வேரைத் தேர்ந்தெடுத்து சாஸ்திர முறைப்படி மஞ்சள் காப்பு கட்டி, மந்திரம் கூறி, எடுத்து வடித்த விநாயகர் திருவுருவத்துக்கு சக்தி அதிகம்.

    சென்னைக்கு அருகில் உள்ள ஓரகடம் எனும் ஊரில் வெள்ளெருக்கு விநாயகர் கோவில் உள்ளது.

    கோவில் நிலத்தில் வெள்ளெருக்கஞ் செடிகள் வளர்க்கப்படுகின்றன.

    வீட்டில் வெள்ளெருக்கு விநாயகர் இருப்பது விசேஷமானது.

    அவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டியதில்லை.

    எருக்கம்பூ, அருகம்புல், வன்னியிலை ஆகியவற்றைச் சூட்டி வழிபடலாம்.

    அத்தர், ஜவ்வாது, புனுகு போன்ற வாசனைப் பொருள்களைச் சாத்தலாம்.

    வெள்ளெருக்கு விநாயகர் எழுந்தருளிய வீட்டில் செல்வம் பெருகும். பீடைகள் அகலும்.

    மகிழ்ச்சியுடன் மன அமைதியும் உண்டாகும்.

    ×