search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துண்டுப்பிரசுரம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போதைப் பொருட்களுக்கு எதிரான போரில் அனைவரும் ஒன்றிணைவோம்.
    • துண்டுப்பிரசுரத்தில் தொடர்புடைய நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன.

    மதுரை:

    தமிழகத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து உள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

    அதேபோல் இளைஞர்களின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்க வேண்டும் என்று அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

    இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தெளிச்சாத்த நல்லூர் கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள 110 அடி உயர கொடிக்கம்பம் திறப்பு விழா மற்றும் கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகை தந்தார்.

    விமான நிலையத்தில் மதுரை மாநகர், புறநகர் கிழக்கு, புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் முன் னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் தொண்டர்கள் புடை சூழ உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியின் போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தில் விரும்பத்தகாத செயலாக தொடர்ந்து அரங்கேறி வரும் கொலை, கொள்ளை, போதைப் பொருட்கள் குறித்து பிரசாரம் செய்யும் வகையில் துண்டுப் பிரசுரங்களை எடப்பாடி பழனிசாமி தொண்டர்களிடம் வழங்கினார்.

    அந்த துண்டு பிரசுரத்தில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு போதைப் பொருட்கள் கடத்தப்பட்ட மாதங்கள், அதில் தொடர்புடைய நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன. மேலும் போதைப் பொருட்களுக்கு எதிரான போரில் அனைவரும் ஒன்றிணைவோம் என்றும் அச்சிடப் பட்டு இருந்தது. 

    ×