search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமீபா பரவல்"

    • கேரள மாநிலத்தில் அமீபா நுண்ணுயிர் பரவலால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • அசுத்தமான நீரின் வாயிலாகவே பரவும் இந்த நுண்ணுயிர், குழந்தைகளை தொற்றும் ஆபத்து அதிகம்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய 'எக்ஸ்' தளப்பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    கேரள மாநிலத்தில் அமீபா நுண்ணுயிர் பரவலால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ளதாக வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

    கேரளாவில் இந்த நுண்ணுயிர் பரவிவரும் நிலையில், தமிழ்நாட்டில் இத்தகைய பரவல்கள் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கையுடன் அரசு செயல்பட வேண்டும்.

    அசுத்தமான நீரின் வாயிலாகவே பரவும் இந்த நுண்ணுயிர், குழந்தைகளை தொற்றும் ஆபத்து அதிகம் உள்ளதால், மக்களின் உயிர்களை காக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிக கவனத்தை செலுத்துமாறு இந்த முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

    ×