search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடைகள் அபராதம்"

    • கடைவீதிகளில் திடீரென அதிரடி சோதனையில் சோதனையில் ஈடுபட்டனர்.
    • 7 கடைகளில் ஒரு முறை பயன்படுத்தப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது

    திருப்பூர்:

    தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையையும் மீறி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்கிறவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் அந்த கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே திருப்பூர் அரிசி கடை வீதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. அதன்பேரில் இன்று காலை முதல் மாநகர நல அதிகாரி கௌரி சரவணன் மற்றும் உதவி ஆணையர் வினோத், சுகாதார அலுவலர் முருகன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் சின்னத்துரை, தங்கமுத்து, ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் அரிசி கடை வீதியில் உள்ள கடைவீதிகளில் திடீரென அதிரடி சோதனையில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது 7 கடைகளில் ஒரு முறை பயன்படுத்தப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அந்த கடைகளுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.7லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் கடைக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    ×