என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "யானைக்கவுணி மேம்பாலம்"
- ரூ.1192.45 கோடி மதிப்பீலான 30 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
- ஜமீன் பல்லாவரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.40 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடம்.
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.800.75 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
அதில் பெசன்ட்நகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய நடைபாதை, யானைக்கவுணி ரெயில்வே மேம்பாலம், மெரினா லூப் சாலை கடற்கரை பகுதியில் நவீன மீன் அங்காடி, புதிய பூங்காக்கள், புதிய விளையாட்டு மைதானங்கள், புதிய பஸ் நிலையங்கள், சுரங்கப்பாதை, புதிய பாலங்கள்,
ஜமீன் பல்லாவரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.40 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடம், ஆகாய நடைபாதை, ஏரி மற்றும் கால்வாய் சீரமைப்பு, தூய்மை பணியாளர்கள் குடியிருப்பு, ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள், புதிய அலுவலக கட்டிடங்கள், அறிவுசார் மையங்கள், பொது கழிப்பிடங்கள், புதிய குடிநீர் திட்டப்பணிகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட 104 முடிவுற்ற திட்டப்பணிகள் அடங்கும். இவை மக்கள் செயல்பாட்டுக்கு இன்று கொண்டு வரப்பட்டது.
இது தவிர ரூ.1192.45 கோடி மதிப்பீலான 30 புதிய திட்டப்பணிகளுக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் 144 பேருக்கு பணிநியமன ஆணைகள் மற்றும் 27 பேருக்கு கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணைகளை வழங்கி 68 புதிய வாகனங்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, அரசு முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி, குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்