search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாரீஸ் பாரா ஒலிம்பிக்"

    • பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது.
    • பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

    17 ஆவது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் இந்த பாரா ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழாவை பிரான்ஸ் சிறப்பாக நடத்தியது.

    இதில் 167 நாடுகளை சேர்ந்த 4,400 போட்டியாளர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். இதில் பாரா ஒலிம்பிக் வரலாற்றிலே அதிகபட்சமாக 84 வீரர் வீராங்கனைகளை இந்தியா இம்முறை அனுப்பி இருக்கிறது. இந்த நிலையில், இந்திய வில் வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி ஒருபுள்ளியில் உலக சாதனையை தவறவிட்டுள்ளார்.

    தகுதிச் சுற்றில் அற்புதமாக விளையாடிய ஷீத்தல் 703 புள்ளிகளை பெற்றார். எனினும், 704 புள்ளிகளை பெற்ற துருக்கி வீராங்கனை சாதனை படைத்தார். ஒருபுள்ளியில் உலக சாதனையை தவறவிட்ட போதிலும், வில் வித்தையில் 700 புள்ளிகளை கடந்த முதல் இந்திய பாராலிம்பிக் வீராங்கனை என்ற பெருமையை ஷீத்தல் பெற்றுள்ளார்.

    • சுமித் ஆன்ட்டில் கடந்த பாரா ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார்.
    • பாரா ஒலிம்பிக் வரலாற்றிலே அதிகபட்சமாக 84 வீரர் வீராங்கனைகளை இந்தியா இம்முறை அனுப்பி இருக்கிறது.

    பாரீஸ்:

    17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் இந்த பாரா ஒலிம்பிக் தொடரின் ஜோதியை பிரபல நடிகர் ஜாக்கி சான் ஏந்தி சென்றார்.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா மிகவும் மோசமாக நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதற்கு பதில் சொல்லும் விதமாக பாரா ஒலிம்பிக்கில் தொடக்க விழாவை சிறப்பாக பிரான்ஸ் நடத்தியது.

    இதில் 167 நாடுகளை சேர்ந்த 4,400 போட்டியாளர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். இதில் பாரா ஒலிம்பிக் வரலாற்றிலே அதிகபட்சமாக 84 வீரர் வீராங்கனைகளை இந்தியா இம்முறை அனுப்பி இருக்கிறது.

    பாரிசில் முக்கிய பகுதியான லா கான்கோர்டு என்ற இடத்தில் இந்த தொடக்க விழா நடந்தது. இதில் 140 நடன கலைஞர்கள் பங்கேற்று கண்கவரும் நடனத்தில் ஈடுபட்டனர். இந்த தொடக்க விழாவில் பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்கரான் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து பிரெஞ்ச் கலைஞர் கிறிஸ்டின் குழுவினர் நடத்திய இசை கச்சேரி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதன் பிறகு போர் விமானங்கள் மூலம் வண்ண புகைகள் வெளியேற்றி வானத்தில் வட்டமிட்டு படி சென்றது.


    இந்தத் தொடக்க விழாவில் இந்திய கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பு கடந்த டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் என்ற சுமித் ஆண்டில்க்கும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் என்ற பாக்கியஸ்ரீ ஜாதவ்க்கும் கிடைத்தது. சுமித் ஆன்ட்டில் கடந்த பாரா ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார்.

    இதை போன்று பாக்கியஸ்ரீ ஜாதவ் குண்டு எறிதலில் ஆசிய பாரா போட்டிகளில் வெள்ளி வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய குழுவினர் வெள்ளை நிற ஆடை மற்றும் தேசியக் கொடியை ஏந்தி சென்றனர். கடந்த முறை இந்தியா ஐந்து தங்கம் உட்பட 19 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 24-ம் இடத்தை பிடித்தது. இம்முறை அதிக வீரர், வீராங்கனைகள் பங்கேற்று இருப்பதால் மேலும் அதிக பதக்கங்களை இந்தியா வெல்லும் என்ற எதிர்பார்ப்பு இருந்துள்ளது .

    • தமிழகத்தில் இருந்து 6 பேர் பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார்கள்.
    • இந்திய அணி 12 விளையாட்டுகளில் பங்கேற்கிறது.

    புதுடெல்லி:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சமீபத்தில் முடிவடைந்தது. இதல் 117 பேர் கொணட இந்திய அணி 16 விளையாட்டுகளில் பங்கேற்றது. இந்தியாவுக்கு 1 வெள்ளி, 5 வெண்கலம் ஆக மொத்தம் 6 பதக்கம் கிடைத்தது.

    ஒலிம்பிக் முடிவடைந்ததை தொடர்ந்து பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுகிறது. வருகிற 28-ந்தேதி முதல் செப்டம்பர் 8-ந் தேதி வரை இந்த போட்டி நடக்கிறது. 22 விளையாட்டுகளில் 549 பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது.

    பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 84 பேர் கொண்ட இந்திய அணி இந்த போட்டிக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளது. 52 வீரர்கள், 32 வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்திய அணி வில் வித்தை, தடகளம், பேட்மின்டன், சைக்கிளிங், ஜூடோ, வலு தூக்குதல், துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டேக்வாண்டோ உள்பட 12 விளையாட்டுகளில் பங்கேற்கிறது.

    தமிழகத்தில் இருந்து 6 பேர் பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார்கள். அதன் விவரம்:-

    டி.மாரியப்பன் (உயரம் தாண்டுதல்), துளசிமதி, முருகேசன், மனிஷா ராமதாஸ், நித்யா ஸ்ரீசிவன், சிவராஜன் சோலைமலை (நால்வரும் பேட்மின்டன்), கஸ்தூரி ராஜாமணி (வலு தூக்குதல்)

    29 வயதான தங்கவேலு மாரியப்பன் பாரா ஒலிம் பிக்கில் 2 பதக்கம் பெற்றுள்ளார். 2016 ரியோவில் நடந்த பாரா ஒலிம்பிக்கில் தங்கமும், 2021-ம் ஆண்டு டோக்கியோவில் நடை பெற்ற பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும் பெற்றார். தொடர்ந்து 37-வது முறையாக பாரா ஒலிம்பிக்கில் மாரியப்பன் பதக்கம் பெறுவாரா? என்ற எதிர்பாரப்பு அதிகமாக உள்ளது.

    இந்த ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் மாரியப்பன் தங்கம் வென்று இருந்தார். மற்ற தமிழக வீரர், வீராங்கனைகள் முதல் முறையாக பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார்கள். இதில் துளசிமதி, மனிஷா, நித்யா ஆகியோர் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்று இருக்கிறார்கள்.

    கடந்த 2021-ம் ஆண்டு டோக்கியோவில் நடந்த பாரா ஒலிம்பிக்கில் 54 பேர் கொண்ட இந்திய அணி 9 விளையாட்டுகளில் பங்கேற்றது. இதில் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் ஆகி மொத்தம் 19 பதக்கம் கிடைத்தது.

    தற்போது அதைவிட கூடுதலாக பாரீஸ் பாரா ஒலிம்பிக்கில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை பங்கேற்றவர்களில் 19 பேர் இந்த தடவை இடம் பெற்றுள்ளனர்.

    ×