search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமணத்தில் மோதல்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மணமகள் மற்றும் மணமகன் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதமாக மாறியுள்ளது.
    • காயமடைந்த 8 பேரை சிகிச்சைக்காக நிஜாமாபாத் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    நிஜாமாபாத், நவிபேட் பகுதியில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற திருமண விருந்தில் பரிமாறப்பட்ட உணவில் ஆட்டிறைச்சி துண்டுகள் இல்லாததால் மணமக்களின் உறவினர்கள் தகராறில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    நவிப்பேட்டையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், நந்திப்பேட்டையைச் சேர்ந்த ஒரு ஆணுக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் திருமணத்திற்குப் பிந்தைய கொண்டாட்டத்தின் போது மணமகனின் உறவினர்கள் குறைந்த அளவு ஆட்டிறைச்சி துண்டுகள் வழங்கப்படுவதாக புகார் சொல்லியுள்ளனர்.

    இது மணமகள் மற்றும் மணமகன் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதமாக மாறியுள்ளது. இதைத்தொடர்ந்து இரு தரப்பினரும் சமையல் கரண்டி, கற்கள், கட்டைகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்த 8 பேரை சிகிச்சைக்காக நிஜாமாபாத் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ×