search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பதியில் முதல் தரிசனம் யாருக்கு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெருமாளுக்கும் லட்சுமிக்கும் ஒரு முறை பிணக்கு ஏற்பட்டது.
    • இறுதி தரிசனமும் கோபாலன் வாரிசுகளுக்கு தான்.

    பெருமாளுக்கும் லட்சுமிக்கும் ஒரு முறை பிணக்கு ஏற்பட்டது. திருமகள் கோபித்துக்கொண்டு பூமிக்கு வந்துவிட்டார். பின்னாலேயே பெருமாளும் வந்து அவரைத்தேடும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அவரால் லட்சுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவர் தவம் செய்தார்.

    நாளடைவில் அவர் மேல் பெரும் புற்று மூடிவிட்டது. அங்கு மாடுகளை மேய்க்கும் கோபாலன் என்பவர் தன்னுடைய பசுவைக்கொண்டு தினசரி அந்த புற்றுக்கு பால் அபிஷேகம் செய்ய, அதில் மனம் மகிழ்ந்த பெருமாள் அவனுடைய சந்ததிகளுக்கு தன்னை முதலில் தரிசனம் செய்யும் வரம் அளித்தார்.


    பெருமாளின் இந்த அருளால் கோபாலன் என்பவர் பரம்பரையில் வந்தவர்கள் தினமும் திருமலையில் முதலில் ஏழுமலையானை தரிசிக்கிறார்கள்.

    மூலஸ்தான நடை திறந்தவுடன் பெருமாளின் முதல் தரிசனம் இவர்களுக்குத்தான் கிடைக்கிறது. பின் இவர்கள் அர்ச்சகர்களின் வீடுகளுக்கு சென்று பூஜை செய்வதற்கு வரும்படி அழைக்கின்றனர். அதன் பின்னரே அர்ச்சகர்கள் கோவிலில் தங்கள் கடமையை ஏற்க வருகின்றனர்.


    இரவில் ஏகாந்த சேவை முடிந்தபின் பெருமாளின் அன்றைய இறுதி தரிசனமும் கோபாலன் வாரிசுகளுக்கு கிடைத்த பின் தான் நடை அடைக்கப்படுகிறது.

    ×