search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணவு தானியங்கள்"

    • உத்தரபிரதேசத்துக்கு 94 லட்சத்து 50 ஆயிரத்து 268 மில்லியன் டன் உணவு தானியம் வழங்கப்பட்டுள்ளது.
    • உணவு தானியம் அதிகம் பெற்ற பட்டியலில் பீகார், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    சென்னை:

    கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த கடந்த 2020-ம் ஆண்டின்போது மக்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசு, 'பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா' என்ற உணவு பாதுகாப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஒரு நபருக்கு தலா 5 கிலோ அரிசி, கோதுமை உள்பட உணவு தானியம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், கடந்த 2023-24-ம் ஆண்டில் இந்த திட்டத்தின்படி நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 4 கோடியே 95 லட்சத்து 45 ஆயிரத்து 597 மில்லியன் டன் உணவு தானியம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

    இதில், நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரபிரதேசத்துக்கு 94 லட்சத்து 50 ஆயிரத்து 268 மில்லியன் டன் உணவு தானியம் வழங்கப்பட்டுள்ளது. உணவு தானியம் அதிகம் பெற்ற பட்டியலில் பீகார், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தமிழகத்தை பொறுத்தமட்டில் இந்த காலக்கட்டத்தில் 23 லட்சத்து 36 ஆயிரத்து 649 மில்லியன் டன் உணவு தானியம் பெற்றுள்ளது.

    மேற்கண்ட தகவலை மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    ×