என் மலர்
நீங்கள் தேடியது "கும்பமேளா"
- மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, மகா கும்பமேளா மூலம் இந்தியாவின் பலத்தை உலகமே கண்டது.
- பலரும் மகா கும்பமேளா வெற்றிக்காக தங்கள் பங்களிப்பை தந்துள்ளனர் என தெரிவித்தார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று மக்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மகா கும்பமேளா மூலம் இந்தியாவின் பலத்தை உலகமே கண்டது என்றார்.
மேலும், மகா கும்பமேளாவை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து நடத்தி முடித்ததற்காக கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பலரும் மகா கும்பமேளா வெற்றிக்காக தங்கள் பங்களிப்பை தந்துள்ளனர்.
அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் பல்வேறு சாதனைகளை புரியலாம் என ஏற்கனவே தெரிவித்திருந்தேன். தற்போது, ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் பிரம்மாண்டத்தை கண்டது என தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று பாராளுமன்றத்தின் வெளியே சமாஜ்வாதி கட்சியின் எம்.பி.யான அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மகா கும்பமேளாவை ஒருங்கிணைத்து நடத்த மத்திய அரசு எவ்வளவு நிதி வழங்கியது? உத்தரப் பிரதேச முதல் மந்திரியும், மத்திய பிரதேச முதல் மந்திரியும் வாகனங்களை நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை மட்டுமே செய்தனர். மக்கள் எல்லைக்குள் கூட நுழைய விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
1000 இந்துக்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு பா.ஜ.க.வும், அதன் தொண்டர்களும் உதவ வேண்டும்.
காணாமல் போயுள்ள அந்த 1000 இந்துக்கள் குறித்து அவர்களின் குடும்பங்களுக்கு பா.ஜ.க. முறையான பதிலை வழங்கவேண்டும். காணாமல் போன அந்த 1000 இந்துக்களையாவது பா.ஜ.க. கண்டுபிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
- ஏராளமானவர்கள் கும்பமேளாவில் கலந்து கொள்ள செல்வார்கள்.
- கட்டணத்திற்கு ஏற்ப ரெயில் பயண வகுப்பு, தங்குமிடம், உள்ளூர் போக்குவரத்து வசதி ஆகியவை வழங்கப்படுகிறது.
நெல்லை:
உத்தரபிரதேசம் மாநிலம் காசியில் வருகிற 13-ந்தேதி முதல் பிப்ரவரி 26-ந்தேதி வரை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் கும்பமேளா நடைபெற இருக்கிறது.
இந்த விழாவில் காசி கங்கை நதியில் புனித நீராட பொதுமக்கள் விரும்புவார்கள். அவ்வாறு நீராடினால் புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால் ஏராளமானவர்கள் கும்பமேளாவில் கலந்து கொள்ள செல்வார்கள்.
இந்த பயணிகளின் வசதிக்காக நெல்லையில் இருந்து தென்காசி, ராஜபாளையம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர் வழியாக காசிக்கு சுற்றுலா ரெயில் இயக்க இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி சிறப்பு சுற்றுலா ரெயில் நெல்லையில் இருந்து அடுத்த மாதம் 5-ந்தேதி அன்று அதிகாலை 1 மணிக்கு புறப்பட்டு மதுரை வந்து, மதுரையில் இருந்து அதே நாளில் காலை 6 மணிக்கு காசிக்கு புறப்படுகிறது.
இந்த ரெயில் பிப்ரவரி 7-ந்தேதி மதியம் 12.30 மணிக்கு காசி பனாரஸ் சென்றடைகிறது. அன்று மாலை கங்கா ஆரத்தி பார்த்து மறுநாள் முழுவதும் பிராக்யாராஜ் பகுதியில் சுற்றுலா செல்லுதல், பிப்ரவரி 9-ந்தேதி காசி விஸ்வநாதர், விசாலாட்சி, காலபைரவர், சாரநாத் கோவில்களுக்கு சுற்றுலா செல்லுதல், 10-ந்தேதி அயோத்தியா சரயு நதி மற்றும் ராம ஜென்ம பூமி கோவிலில் வழிபாடு செய்து அன்று இரவு நெல்லைக்கு புறப்படும்படி சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த சுற்றுலா ரெயில் பிப்ரவரி 13-ந்தேதி அதிகாலை 2.50 மணிக்கு மதுரை வந்து, காலை 7.30 மணிக்கு நெல்லை வந்தடைகிறது. இந்த ரெயில் தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் போன்ற ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த சுற்றுலாவுக்கு ரெயில் பயண கட்டணம், தங்குமிடம், பயண வழிகாட்டி, பாதுகாப்பு அலுவலர், தென்னிந்திய உணவு வகைகள், உள்ளூர் சுற்றுலா போக்குவரத்து உட்பட குறைந்த கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூ.26 ஆயிரத்து 850 வசூலிக்கப்படுகிறது. குளிர்சாதன ரெயில் பெட்டி பயணம் மற்றும் உயர் சிறப்பு வசதிகளுக்கு கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூ.38 ஆயிரத்து 470 மற்றும் ரூ.47 ஆயிரத்து 900 வசூலிக்கப்படுகிறது. கட்டணத்திற்கு ஏற்ப ரெயில் பயண வகுப்பு, தங்குமிடம், உள்ளூர் போக்குவரத்து வசதி ஆகியவை வழங்கப்படுகிறது.
- சாதுக்கள், துறவிகள், பக்தர்கள் என உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 45 கோடி பேர் கலந்து கொள்வார்கள்
- 1991 இல் திருமணம் செய்துகொண்ட ஸ்டீவ் - லாரென் தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர்
இந்துக்களின் முக்கிய திருவிழாக்களில் மகா கும்பமேளாவும் ஒன்று. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த விழா கொண்டாடப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ், உத்தரகாண்ட் மாநிலம் அரித்வார், மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மற்றும் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் ஆகிய 4 ஊர்களில் உள்ள ஆற்றங்கரையில் கும்பமேளா கொண்டாடப்படுகிறது.
அதில் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவே மிகவும் புகழ்பெற்றது. அங்கு கங்கை, யமுனை மற்றும் கண்களுக்கு புலப்படாத சரஸ்வதி ஆறு ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நடைபெறுவதால் இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
3 நதிகளும் சங்கமிக்கும் இடத்தை திரிவேணி சங்கமம் என்று அழைக்கிறார்கள். கும்பமேளா நடைபெறும் காலங்களில் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதை இந்துக்கள் மிகவும் புனிதமாக கருதுகிறார்கள்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த மகா கும்பமேளா நிகழ்ச்சிகள் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. உலகின் மிகப்பெரிய விழாவான இந்த மகா கும்பமேளாவில் சாதுக்கள், துறவிகள், பக்தர்கள் என உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 45 கோடி பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பிரபல செல்போன் ஆப்பிள் நிறுவனத்தின் மறைந்த இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் உடைய மனைவி கும்பமேளாவை ஒட்டி இந்தியா வந்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ் கணைய புற்றுநோய் காரணமாக தனது 56 வயதில் உயிரிழந்தார். அவரது மனைவி லாரென் பாவெல்(61), ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டவராக இருந்து வருகிறார். 1991 இல் திருமணம் செய்துகொண்ட ஸ்டீவ் - லாரென் தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், லாரென் பாவெல், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வருகை தந்து லாரென், சாமி தரிசனம் செய்தார். அவருடன் நிரஞ்சனி அகாரா ஆசிரமத்தை சேர்ந்த கைலாஷ் ஆனந்த் ஜி மகராஜ் உடன் வந்திருந்தார். லாரென் பாவெல் மேலும் சில நாட்கள் இந்தியாவில் தங்கியிருந்து மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- மௌனி அமாவாசை தினமான இன்று கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
- இதையடுத்து, பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
லக்னோ:
மௌனி அமாவாசை தினமான இன்று மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதை அடுத்து, பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சமாஜ்வாடி தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான அகிலேஷ் யாதவ், கும்பமேளாவில் உயிரிழந்த பக்தர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அகிலேஷ் யாதவ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
மகா கும்பமேளாவிற்கு வந்திருக்கும் துறவிகள் மற்றும் பக்தர்கள் மத்தியில் கும்பமேளா நிர்வாக அமைப்பின் மீது நம்பிக்கையை மீண்டும் நிலைநாட்ட, கும்பமேளா நிர்வாகத்தை உ.பி அரசிடம் ஒப்படைக்காமல் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
உலகத்தரம் வாய்ந்த ஏற்பாடுகளைச் செய்வதாகக் கூறப்படும் உண்மைகள் தற்போது அனைவர் முன்னிலையில் வெளிவந்துள்ளன. இதுபற்றி பொய்ப் பிரசாரம் செய்பவர்கள், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தார்மீகப் பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
மகா கும்பாபிஷேகத்தின் தவறான நிர்வாகத்தால் ஏற்பட்ட விபத்தில் பக்தர்கள் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது. காயம் அடைந்தவர்களை ஆதரிப்பதற்கும், மேலும் குழப்பத்தைத் தடுக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரப் பிரதேச அரசை கேட்டுக் கொள்கிறேன்.
படுகாயம் அடைந்தவர்களைக் கொண்டு செல்வதற்கு ஏர் ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட வேண்டும். இறந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களின் உடல்களை அவர்களது குடும்பங்களுக்குத் திருப்பித் தருவதற்கு விரைவான ஏற்பாடுகள் செய்யவேண்டும்.
இந்த இக்கட்டான நேரத்தில் பக்தர்கள் பொறுமையாகவும் அமைதியாகவும் இருக்கவேண்டும். பக்தர்களின் எதிர்கால ஏற்பாடுகளை மேம்படுத்த இந்தச் சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்ளும்படி மாநில அரசை கேட்டுக் கொண்டார்.
- யோகி ஆதித்யநாத் மருத்துவமனையில் சந்தித்து பேசினார்.
- சிறந்த சிகிச்சை அளிக்க ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி காயமுற்றவர்களை உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மருத்துவமனையில் சந்தித்து பேசினார்.
மேலும், மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் பேசிய அவர், அவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு மருத்துவ ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி 29-ம் தேதி அதிகாலை மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்தனர். மேலும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் பாதுகாப்பாக தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதை உறுதி செய்யுமாறு யோகி ஆதித்யநாத் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டுள்ளார்.
யோகி ஆதித்யநாத் வருகைக்கு முன், உத்தர பிரதேச தலைமைச் செயலாளரும், டி.ஜி.பி.யும் மருத்துவமனைக்குச் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா பிப்ரவரி 26-ம் தேதி வரை 45 நாள் நடக்கிறது.
- கும்பமேளா நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியாகினர்.
புதுடெல்லி:
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்து வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா அடுத்த மாதம் 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது.
கும்பமேளா நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
இதற்கிடையே, கும்பமேளா நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியாகினர். மாநில அரசின் நிர்வாகம் சரியில்லை என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், நடிகையும், பா.ஜ.க. எம்பியும் ஆன ஹேமமாலினி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாங்கள் கும்பமேளா போயிருந்தோம். நன்றாகக் குளித்தோம். எல்லாம் நன்றாக நிர்வகிக்கப்பட்டது. கூட்ட நெரிசல்) நடந்தது சரிதான்.
இது ஒரு பெரிய சம்பவம் இல்லை. அது எவ்வளவு பெரியது என எனக்குத் தெரியவில்லை. இது மிகைப்படுத்தப்படுகிறது.
கும்பமேளா நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டது, மேலும் அனைத்தும் மிகச் சிறப்பாக செய்யப்பட்டது.
நிறைய பேர் வருகிறார்கள், அதை நிர்வகிப்பது மிகவும் கடினம். ஆனால் நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்கிறோம் என தெரிவித்தார்.
- மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்து வருகிறது.
- கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் நீராடி வருகின்றனர்.
லக்னோ:
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்து வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா அடுத்த மாதம் 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது.
கும்பமேளா நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
இந்நிலையில், கும்பமேளா முடிவில் 2,000 மூத்த குடிமக்கள் புனித நீராடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
சமூக நலத்துறை, தேசிய மருத்துவக் கழகம் மற்றும் இந்திய செயற்கை உறுப்புகள் உற்பத்திக் கழகம் உடன் இணைந்து முக்கிய ஆதரவை வழங்கி வருகிறது.
கும்பமேளாவில் முதன்முறையாக யோகி ஆதித்யநாத் அரசு முதியோர் மற்றும் செவித்திறன் குறைபாடுடையோருக்கான சிறப்பு முகாமை தொடங்கியுள்ளது.
சமூக நலத்துறையின் மூலம் அமைக்கப்பட்டுள்ள இந்த முகாமில் தேவைப்படுபவர்களுக்கு இலவச பரிசோதனைகள் மற்றும் உதவி சாதனங்கள் வழங்கப்படுகின்றன.
இந்த முன்முயற்சியின் மூலம் முதியோர், குறிப்பாக அரசால் நடத்தப்படும் முதியோர் இல்லங்களில் உள்ளவர்கள், அத்தியாவசிய சேவைகளைப் பெறுவதையும், கும்பமேளாவின் தெய்வீக உணர்வை அனுபவிப்பதையும் உறுதி செய்வதில் அரசு முன்னேற்றம் கண்டுள்ளது என தெரிவித்துள்ளது.
- கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா பிப்ரவரி 26-ம் தேதி வரை 45 நாள் நடக்கிறது.
- கும்பமேளா நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியாகினர்.
புதுடெல்லி:
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்து வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா அடுத்த மாதம் 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது.
கும்பமேளா நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியாகினர். மாநில அரசின் நிர்வாகம் சரியில்லை என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இதற்கிடையே, நடிகையும், பா.ஜ.க. எம்பியும் ஆன ஹேமமாலினி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கும்பமேளா கூட்ட நெரிசல் ஒரு பெரிய சம்பவம் இல்லை. அது மிகைப்படுத்தப்படுகிறது என தெரிவித்தார்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இருப்பவர்கள், மக்களின் வலியையும், விரக்தியையும் பார்த்து புரிந்து கொண்டு பேச வேண்டும் என காட்டமாகத் தெரிவித்தார்.
- கும்ப மேளாவில் தினமும் லட்சக்கணக்கானோர் புனித நீராடி வருகின்றனர்.
- உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் புனித நீராடினார்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கி, கோலாகலமாக நடந்து வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சாதுக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
பொது மக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் புனித நீராடி வருகின்றனர். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புனித நீராடினார்.
இந்த வரிசையில் பிரதமர் மோடி இன்று பிரயாக்ராஜ் செல்கிறார். அங்கு படகு மூலம் ஏரியல் கோட் பகுதிக்கு செல்லும் பிரதமர் மோடி காலை 11 மணி முதல் 11.30 மணிக்குள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுகிறார்.
தலைநகர் டெல்லியில்சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடி கும்ப மேளாவில் புனித நீராட இருக்கிறார். பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
- குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர்கள் பற்றிய தகவல் தெரியவில்லை.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் சகினேடிபள்ளி மண்டலம் அந்தர் வேதிபலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீனு (வயது 43). இவருடைய மனைவி கங்கா பவானி ( 35) தம்பதியின் மகள் தேவக்னா (6) மகன் மாதவ் (4).
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீனு மனைவி குழந்தைகளுடன் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் நடந்து வரும் கும்பமேளாவுக்கு செல்வதாக கூறிவிட்டு பைக்கில் அவர்களை அழைத்துச் சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர்கள் பற்றிய தகவல் தெரியவில்லை. இந்த நிலையில் அவருடைய தம்பி புல்லையா என்பவர் ஸ்ரீனு வீட்டிற்கு சென்றார்.
அங்கு ஸ்ரீனு எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. அதில் நாங்கள் கடன் தொல்லையால் குடும்பத்துடன் கும்பமேளா நடைபெறும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்வோம் என எழுதப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த புல்லையா இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் பிரயாக்ராஜ் நகர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதுவரை குழந்தைகளுடன் மாயமான தம்பதி என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பிரதமர் மோடி உள்பட பலர் திரிவேனி சங்கமத்தில் புனித நீராடினர்.
- பாகிஸ்தானை சேர்ந்த ஆன்மிக குழு இந்தியா வந்தது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கி, கோலாகலமாக நடந்து வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சாதுக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
பொது மக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் புனித நீராடி வருகின்றனர். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி உள்பட பலர் திரிவேனி சங்கமத்தில் புனித நீராடினர்.
இதுவரை கிட்டத்தட்ட 34 கோடிக்கும் அதிகமானோர் திரிவேனி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். இந்த நிலையில், மகா கும்பமேளாவின் புகழ் பெற்ற நிகழ்வில் கலந்து கொள்ள பாகிஸ்தானை சேர்ந்த ஆன்மிக குழு இந்தியா வந்தது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தை சேர்ந்த 68 இந்து பக்தர்கள் குழு நேற்று பிரயாக்ராஜுக்கு வந்தது. பிறகு திரிவேனி சங்கமத்திற்கு வந்த அந்த குழு தங்களது மூதாதையர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்து, சங்கமத்தில் புனித நீராடினர்.
பாகிஸ்தானை சேர்ந்த பக்தர்கள் கங்கை, யமுனை மற்றும் புராண சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் புனித சங்கமத்தில் சடங்குகளை செய்து, தங்கள் முன்னோர்களுக்காக பிரார்த்தனை செய்தனர். நீராடிய பிறகு அந்த குழுவை சேர்ந்த மகிஜா தனது அனுபவத்தை விவரித்தார். அப்போது, இது தெய்வீகத்தை விட மேலானது என குறிப்பிட்டார்.
- கும்பமேளாவிற்கு 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்து புனித நீராடினர்.
- இன்று ஒரே நாளில் 48 லட்சம் பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர் என மாநில அரசு தெரிவித்தது.
லக்னோ:
உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ம் தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது.
இதற்காக 10,000 ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15,000 துப்புரவு பணியாளர்கள், 25,000 தொழிலாளர்கள், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.
இந்நிலையில், கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ள பக்தர்களின் எண்ணிக்கை 40 கோடியைக் கடந்துள்ளது. இன்று ஒரே நாளில் 48 லட்சம் பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர் என உத்தர பிரதேச அரசு தெரிவித்தது.
மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் சுமார் 45 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் திங்கட்கிழமை உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகருக்கு வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட உள்ளார் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கும்பமேளாவில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், ராஜ்யசபா எம்.பி. சுதா மூர்த்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நீராடினர்.
அதேபோல, நடிகைகள் ஹேமமாலினி மற்றும் அனுபம் கெர், ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாய்னா நேவால், நடன இயக்குனர் ரெமோ டிசோசா உள்ளிட்ட பிரபலங்களும் புனித நீராடினர்.