என் மலர்
நீங்கள் தேடியது "காங்கிரஸ்"
- சோனியா காந்தி வக்பு திருத்த மசோ தாவுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
- சமூகத்தை நிரந்தரமாக பிளவுபடுத்தி வைக்க வேண்டும் என்ற பா.ஜ.க. வின் சதி இதுவாகும்.
வக்பு சட்டத் திருத்த மசோதா-2025 எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையில் நேற்று நள்ளிரவில் நிறைவேறியது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் , மேல் சபை எம்.பி. யுமான சோனியா காந்தி வக்பு திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்து உள்ளார்.
இன்று நடந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
வக்பு திருத்த மசோதா அரசியலமைப்பின் மீதான வெட்கக்கேடான தாக்குதலாகும். இந்த மசோதா பாராளுமன்ற மக்களவையில் வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
சமூகத்தை நிரந்தரமாக பிளவுபடுத்தி வைக்க வேண்டும் என்ற பா.ஜ.க. வின் சதி இதுவாகும்.
மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கும் காங்கிரஸ் கட்சி தனது எதிர்ப்பை தெரிவிக்கும். அரசியல் அமைப்பை தகர்க்கும் மற்றொரு முயற்சி இதுவாகும்.
கல்வி, சிவில் உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள், நமது கூட்டாட்சி அமைப்பு அல்லது தேர்தல்களை நடத்துதல் என எதுவாக இருந்தாலும், மோடி அரசு நாட்டை ஒரு படுகுழியில் இழுத்துச் செல்கிறது.அங்கு அரசியல் அமைப்பு வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கும். அரசியல் அமைப்பை அழிப்பதுதான் அவர்களது நோக்கமாகும்.
மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பேச அனுமதிக்கப்படாதது நமது ஜனநாயகத்திற்கு மிகுந்த கவலை அளிக்கும் விஷயமாகும். இதேபோல், மேல்சபையில் எதிர்க்கட்சித் தலைவர் கார்கேவும் தான் சொல்ல விரும்புவதையும் சொல்ல வேண்டியதையும் பதில் அளிக்க மீண்டும் மீண்டும் அனுமதிக்கப்படுவது இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
- சாதிவாரி கணக்கெடுப்பு என்பது சாதிய கட்டமைப்பை பலப்படுத்துவதற்கு அல்ல.
- ஒவ்வொரு பத்து ஆண்டுக்கு ஒருமுறை நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பைகூட மத்திய அரசு எடுக்காமல் காலம் தாழ்த்துகிறது.
சாதிவாரி கணக்கெடுப்பு...! பரவலாக பேசப்படுகிறது. பீகார் மாநிலத்தில் நடத்தி முடித்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் இந்த கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற குரல் ஒலித்து வருகிறது.
அவ்வாறு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தமிழகத்தில் கிடைக்கப் போகும் பலன் என்ன? என்பது பற்றிய கேள்விக்கு விளக்கம் அளித்து உள்ளார்கள் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசும், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-
இந்திய சமூக அமைப்பு 5 ஆயிரம் ஆண்டுகளாக சமசீரற்ற முறையில் இருந்தது. ஒரு தரப்பு உயர் சாதி என்று அதிகார செருக்கில் இருந்தது.
இன்னொரு தரப்பு ஊருக்கு ஒதுக்குப்புறமாக யார் கண்ணிலும் படாமல் உரிமையற்ற வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். அன்றைய சமூக அமைப்பில் அதை நியாயம் என்று கூறி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அவரவர் பிறந்த சமூகத்தின் அடிப்படையில்தான் வாழ வேண்டும். அது ஈஸ்வரன் கொடுத்த வரம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு கூட ஒரு சில சமூகத்தில் பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்ற நிலை இருந்தது. பிறந்தது முதல் இறக்கும் காலம் வரை அப்படித்தான் வாழ வேண்டும். அதையும் எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல் அங்கீகரித்தார்கள். ஏற்றுக்கொண்டார்கள். இதைவிட காட்டுமிராண்டித்தனமான அநாகரீகமான, மானுடநெறி பிறழ்ந்த சமூக அமைப்பு இருக்க முடியாது.
மிருகங்களுக்கு இடையே கூட இத்தகைய பாகுபாடு கிடையாது. பெண்கள் உடன்கட்டை ஏறும் பழக்கமும் இங்குதான் இருந்தது. வயதான கிழவருக்கு இளம்பெண்ணை திருமணம் செய்து வைப்பார்கள். அவர் இறந்ததும் அவரது உடலோடு அந்த பெண்களையும் கட்டி வைத்து எரித்து விடுவார்கள். அந்த பெண் பத்தினியாகி விட்டார்.
சிவலோக பதவி அடைந்துவிட்டார் என்று ஏற்றுக்கொள்வார்கள். இந்த காட்டுமிராண்டிதனத்தை ஒழிக்கத்தான் சீர்திருத்தவாதிகளும், புரட்சியாளர்களும் பாடுபட்டார்கள். அதில் வெற்றியும் பெற்றார்கள். மனித உணர்வுமிக்க சமூக நீதியை அவர்கள் நிலை நாட்டினார்கள்.
அதேபோல்தான் இடஒதுக்கீடு முறையும். எல்லா சமூகங்களாலும் உடனடியாக கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் உயர்ந்த நிலைக்கு சென்றுவிட முடியாது என்ற நிலை இருந்தது. அவர்களையும் கைதூக்கிவிட வேண்டும் என்பதற்காகத்தான் இட ஒதுக்கீடு முறை தேவைப்பட்டது.
நமது அரசியல் சட்டத்தை இயற்றிய போது இடஒதுக்கீட்டை தலைவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.
ஆனால் இட ஒதுக்கீடு அவசியம் என்ற குரல் முதன் முதலில் தமிழகத்தில் இருந்துதான் தொடங்கியது. பிற்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு சேவலை வழங்கியது செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
அரசியல் சட்டத்தில் அதற்கு இடமில்லை என்று கோர்ட்டு சுட்டிக் காட்டியது. இதுதான் இடஒதுக்கீடு அவசியத்துக்கான பொறியாக அமைந்தது. தமிழகத்தில் தந்தை பெரியார் குரல் கொடுத்தார். அவர் அதிகாரத்தில் இல்லாததால் அந்த குரல் எட்ட வேண்டிய இடத்தை எட்டவில்லை.
இந்த பிரச்சனை பெருந்தலைவர் காமராஜரின் காதுகளை எட்டியது. அவரும் அதன் நியாயத்தை உணர்ந்தார். பிரதமர் நேருவின் கவனத்துக்கு கொண்டு சென்று நியாயத்தை எடுத்து சொன்னார். இதனால் அரசியல் சட்டத்தை திருத்தி இட ஒதுக்கீட்டுக்கான சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றார்.
அதை ஏற்றுக்கொண்ட நேரு பாராளுமன்றத்தில் சட்ட திருத்த மசோதா கொண்டு வர முடிவு செய்தார். ஆனால் அப்போது எம்.பி.க்களாக அதிக அளவில் இருந்த உயர் சாதியினரும், இடஒதுக்கீடு தேவையில்லை என்பதை கொள்கை ரீதியாக ஏற்றுக் கொண்டவர்களும் அரசியல் சட்டம் இப்போதுதான் இயற்றப்பட்டுள்ளது. அதில் உடனடியாக திருத்தம் தேவையா? என்றவர்களும் இருந்தார்கள். இதை உணர்ந்த நேரு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினார். சுதந்திரம் பெற்றது அனைவருக்கும் சமநீதி, சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான். இப்போது அதற்கு சட்டத் திருத்தம் அவசியமாகிறது. எனவே உங்கள் மாநில எம்.பி.க்களை இந்த சட்டம் நிறைவேற வாக்களிக்க சொல்லுங்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதனால் அரசியல் சட்ட திருத்தம் நிறைவேறியது. இந்திய அரசியல் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட முதல் சட்டத் திருத்தமும் அதுதான்.
அப்போது சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கரும் தேவையை உணர்ந்து சட்டத் திருத்தத்துக்கு ஒத்துழைத்தார். சட்டப்படி இடஒதுக்கீடு கிடைத்தாலும் சமூகங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப துல்லியமாக இல்லை என்ற குரல் எழுந்தது. அனைத்து தரப்பு மக்கள், ஏழைகள் கீழ் நிலையில் இருப்பவர்கள் இட ஒதுக்கீட்டை பெற முடியவில்லை.
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது சாதிய கட்டமைப்பை பலப்படுத்துவதற்கு அல்ல. சாதி ஒரு அடையாளம். அதுபோல் வாழ்க்கை கிடையாது. எந்த சாதியையும் ஆதிக்கம் செலுத்த ஜனநாயகம் அனுமதிக்காது.
பீகாரில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதில் பிற்படுத்தப்பட்ட மக்கள் 63.14 சதவீதம் இருந்தும் அவர்களுக்கு கிடைக்கும் இடஒதுக்கீடு 27 சதவீதம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு.
தமிழகத்திலும் இதே நிலைதான் இருக்கும். சில சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கிறது. சிலருக்கு உயர்சாதி என்பதால் கிடைப்பதில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் அவர்களுக்கு உரிய ஒதுக்கீடு கிடைக்கும். துல்லியமாக அனைத்து தரப்பினருக்கும் இடஒதுக்கீடு தேவை. அதற்கு சாதிவாரியான புள்ளி விவரம் அவசியம். எனவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ராகுல் கேட்டுக்கொண்ட பிறகு நாடு முழுவதும் இந்த கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
ஒவ்வொரு பத்து ஆண்டுக்கு ஒருமுறை நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பைகூட மத்திய அரசு எடுக்காமல் காலம் தாழ்த்துகிறது. தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நிகழ்ச்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார்.
- கல்லூரி நிறுவனர், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி:
கொட்டாரம் அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் நடைபெறும் அறிவியல் விழா தொடக்க நிகழ்ச்சியில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கல்லூரி நிறுவனர், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- மேற்கு வங்க பா.ஜனதா தலைவர் டாக்டர் சுகந்தோ மஜும்தார் தனது எக்ஸ் தளத்தில் ஒரு படத்தை வெளியிட்டார்.
- தாக்குதலில் மூளையாக செயல்பட்ட லலித்ஜா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தபஸ்ராயுடன் நீண்ட காலமாக நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் அத்துமீறிய வழக்கில் மூளையாக செயல்பட்ட லலித்ஜாவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. தபஸ்ராயுடன் நீண்ட காலமாக தொடர்பு இருந்ததாக பா.ஜனதா கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
இது தொடர்பாக மேற்கு வங்க பா.ஜனதா தலைவர் டாக்டர் சுகந்தோ மஜும்தார் தனது எக்ஸ் தளத்தில் ஒரு படத்தை வெளியிட்டார்.
அதில், தபஸ்ராயுடன், லலித்ஜா செல்பி புகைப்படம் எடுத்து கொண்ட காட்சி உள்ளது. அந்த புகைப்படத்துடன் மஜும்தாரின் பதிவில், நமது ஜனநாயக கோவில் மீதான தாக்குதலில் மூளையாக செயல்பட்ட லலித்ஜா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தபஸ்ராயுடன் நீண்ட காலமாக நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்.
எனவே அவரது உடந்தையை விசாரிக்க இந்த ஆதாரம் போதாதா? என பதிவிட்டு இருந்தார்.
Lalit Jha, the mastermind of the attack on our Temple of Democracy, had been in close association with TMC's Tapas Roy for a long time... Isn't this proof enough for investigation into the connivance of the leader? @AITCofficial @TapasRoyAITC @abhishekaitc #shameontmc pic.twitter.com/1PIVnnbGx9
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) December 14, 2023
இதே போல பா.ஜனதா கட்சியின் தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா கூறுகையில், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் இப்போது திரிணாமுல் காங்கிரசுடன் தொடர்பு வைத்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது என கூறியதோடு, இந்தியா கூட்டணி மீதும் புகார் கூறியுள்ளார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை திரிணாமுல் காங்கிரஸ் மறுத்துள்ளது. பார்வையாளர்களாக வந்தவர்களுக்கு பாஸ் வழங்கிய பா.ஜனதா கட்சியின் மைசூர் எம்.பி. பிரதாப் சிம்ஹாவை விசாரிக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
அதே நேரம் பாஸ்களை வழங்கியதை தவிர குற்றம் சாட்டம் பட்டவர்களுடன் தனக்கு எந்த தொடர்பு கிடையாது என பிரதாப் சிம்ஹா மறுத்துள்ளார்.
- தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
- அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
புதுடெல்லி:
இந்தியாவின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
இந்நிலையில், 2024 மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகள் உடன் தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்த மூத்த நிர்வாகிகள் 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது.
அக்குழுவில், அசோக் கெலாட், பூபேஷ் பாகெல், முகேஷ் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், மோகன் பிரகாஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
In the run-up to the General Elections-2024, Congress President Shri @kharge has constituted an National Alliance Committee, as follows, with immediate effect:
— Congress (@INCIndia) December 19, 2023
1. Shri Ashok Gehlot
2. Shri Bhupesh Baghel
3. Shri Mukul Wasnik- Convenor
4. Shri Salman Khurshid
5. Shri Mohan… pic.twitter.com/mUkyLF7yJt
- அரசியல் நெருக்கடி காலத்தில் இந்திரா காந்தி தெலுங்கானா மாநிலத்தில் மேடக் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
- ரேபரேலி தொகுதியை விட்டு வெளியேறி தெலுங்கானாவுக்கு வருவது உணர்ச்சிகரமான தருணமாக இருக்கும்.
தெலுங்கானாவில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. அங்கு சோனியா காந்தி அறிவித்த 6 முக்கிய வாக்குறுதிகள் தான் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.
மேலும் சோனியா காந்தி தனி தெலுங்கானா உருவாக முக்கிய பங்காற்றியதாகவும் அந்த மாநிலத்தில் பிரசாரம் செய்தனர். இதனால் சோனியா காந்திக்கு தெலுங்கானா மாநிலத்தில் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக அந்த கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக வருகிற பாராளுமன்ற தேர்தலில் சோனியா காந்தி தெலுங்கானா மாநிலத்தில் போட்டியிட வேண்டும் என அந்த மாநில காங்கிரஸ் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரசியல் நெருக்கடி காலத்தில் இந்திரா காந்தி தெலுங்கானா மாநிலத்தில் மேடக் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதே பாணியில் சோனியா காந்தி நல்கொண்டா மற்றும் கம்பம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
அவர் ரேபரேலி தொகுதியை விட்டு வெளியேறி தெலுங்கானாவுக்கு வருவது உணர்ச்சிகரமான தருணமாக இருக்கும்.
இந்த கோரிக்கையை சோனியா காந்தி ஏற்க மறுத்தால் பிரியங்கா காந்தியை தெலுங்கானா மாநிலத்தில் போட்டியிட வலியுறுத்துவோம் என தெலுங்கானா காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
- போலீசார் தடியடி மற்றும் தண்ணீர் பீய்ச்சியடித்து வன்முறையை கட்டுப்படுத்தினர்.
- கைது செய்தவர்கள் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் மக்களை நேரில் சென்று சந்தித்து குறைகளை கேட்கும் நவ கேரளா சதாஸ் நிகழ்ச்சி கடந்த மாதம் நடந்தது. இந்த நிகழ்ச்சியை கண்டித்து கேரள மாநில இளைஞர் காங்கிரசார் மற்றும் மாணவர் காங்கிர சார் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
கடந்த மாதம் 20-ந்தேதி அவர்கள் கேரள தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணி நடத்தினர். இந்த பேரணியில் திடீரென வன்முறை வெடித்தது. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. இதனை தொடர்ந்து போலீசார் தடியடி மற்றும் தண்ணீர் பீய்ச்சியடித்து வன்முறையை கட்டுப்படுத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக கேரள மாநில எதிர்க்கட்சி தலைவர் சதீசன், எம்.எல்.ஏ.க்கள் ஷாபி பரம்பில், வின் செண்ட், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
போலீசாரின் அனுமதியின்றி ஊர்வலம் நடத்தியது, பொதுச் சொத்துக்களை நாசம் செய்தது, அதிகாரிகளை தாக்குதல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்குகளின் கீழ் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். பத்தனம் திட்டா ஆத்தூரில் உள்ள தனது வீட்டுக்கு வந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர். அவரை திருவனந்தபுரம் கொண்டு சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் மக்களை நேரில் சென்று சந்தித்து குறைகளை கேட்கும் நவ கேரளா சதாஸ் நிகழ்ச்சி கடந்த மாதம் நடந்தது. இந்த நிகழ்ச்சியை கண்டித்து கேரள மாநில இளைஞர் காங்கிரசார் மற்றும் மாணவர் காங்கிர சார் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
கடந்த மாதம் 20-ந்தேதி அவர்கள் கேரள தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணி நடத்தினர். இந்த பேரணியில் திடீரென வன்முறை வெடித்தது. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. இதனை தொடர்ந்து போலீசார் தடியடி மற்றும் தண்ணீர் பீய்ச்சியடித்து வன்முறையை கட்டுப்படுத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக கேரள மாநில எதிர்க்கட்சி தலைவர் சதீசன், எம்.எல்.ஏ.க்கள் ஷாபி பரம்பில், வின் செண்ட், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
போலீசாரின் அனுமதியின்றி ஊர்வலம் நடத்தியது, பொதுச் சொத்துக்களை நாசம் செய்தது, அதிகாரிகளை தாக்குதல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்குகளின் கீழ் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். பத்தனம் திட்டா ஆத்தூரில் உள்ள தனது வீட்டுக்கு வந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர். அவரை திருவனந்தபுரம் கொண்டு சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த முறை திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
- கரூர், திருச்சி, விருதுநகர் போன்ற சில தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுவதில் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் எல்லா கட்சிகளும் கூட்டணிகள் அமைப்பது, தொகுதிகளை தேர்வு செய்வது போன்ற வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன.
தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்த கட்சிகள் தொகுதி பங்கீட்டை விரைவில் முடிக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதையடுத்து அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களையும் அழைத்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே கருத்து கேட்டார்.
தமிழகத்தின் சார்பில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, பொறுப்பாளர் அஜய்குமார், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனையின்போது கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட தொகுதிகள், வெற்றி பெற்ற தொகுதிகள், இந்த தேர்தலில் கேட்க வேண்டிய தொகுதிகள் எண்ணிக்கை, எந்தெந்த தொகுதிகளை கேட்பது, வெற்றி வாய்ப்புகள் பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கடந்த முறை திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
இதில் தேனியை தவிர அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வென்றது. எனவே கடந்த முறை 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த முறை கூடுதலாக தொகுதிகள் கேட்க வேண்டும். கூட்டணி கட்சிகளுக்காக விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் 9 தொகுதிகளில் குறைய கூடாது என்று தெரிவித்து உள்ளார்கள்.
அதே நேரம் கடந்த முறை காங்கிரஸ் வென்ற சில தொகுதிகளில் போட்டியிட தி.மு.க.வும், ஒரு சில கூட்டணி கட்சிகளும் விரும்புவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக கரூர், திருச்சி, விருதுநகர் போன்ற சில தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுவதில் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் காங்கிரசும் சில தொகுதிகளை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை வரலாம் என்று கருதப்படுகிறது. அப்படியானால் மாற்று தொகுதிகளாக எந்த தொகுதியை விட்டுக் கொடுப்பது? அதற்கு பதிலாக எந்த தொகுதியை கேட்பது? என்ற குழப்பம் வரும்.
கடைசி நேரத்தில் சம்பந்தம் இல்லாமல் ஏதாவது தொகுதிகளை வாங்க வேண்டிய சூழ்நிலையை தவிர்ப்பதற்காக காங்கிரசுக்கு சாதகமான தொகுதிகளை கண்டறிந்து அந்த பட்டியலையும் தருமாறு காங்கிரஸ் மேலிடம் கேட்டு உள்ளது.
இதையடுத்து புதிதாக 9 தொகுதிகள் பட்டியலை காங்கிரஸ் தயாரித்துள்ளது. அந்த பட்டியல் வருமாறு:-
திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஈரோடு.
இந்த தொகுதிகள் பட்டியலும் மேலிடத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த தொகுதிகளை தேர்வு செய்வதற்கு காரணம் தென்காசியில் 9 முறையும் மயிலாடுதுறையில் 7 முறையும் காங்கிரஸ் வென்றுள்ளது. தஞ்சாவூரில் 4 முறை வெற்றி பெற்றுள்ளது. ராமநாதபுரத்தில் 3 முறை வெற்றி பெற்றுள்ளது. பெரம்பலூர் மற்றும் நெல்லையில் தலா 2 முறையும் காங்கிரஸ் வென்று உள்ளது.
எனவே வெற்றி பெற முடியும் என்று நம்பப்படும் தொகுதிகளை காங்கிரஸ் தேர்வு செய்துள்ளது.
இதற்கிடையில் தி.மு.க. தரப்பிலும் ஒரு பட்டியல் காங்கிரஸ் மேலிடத்திடம் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அதில் தி.மு.க. போட்டியிட விரும்பும் தொகுதிகள் மற்றும் காங்கிரஸ் தவிர இதர கூட்டணி கட்சிகள் விரும்பும் தொகுதிகள், அந்த தொகுதிகளில் கட்சிகளுக்கான வெற்றி வாய்ப்புகள் பற்றியும் குறிப்பிட்டு உள்ளன. இந்த பட்டியலில் 30 தொகுதிகளுக்கு மேல் இடம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த தொகுதிகளை அடிப்படையாக வைத்து காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தி.மு.க. மேலிட தலைவர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளார்கள்.
- மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் பா.ஜனதாவை ஆதரித்துள்ளனர்.
- உத்தரவாத திட்டங்களால் வெற்றி பெற்றுவிடலாம் என்று அவர்கள் கண்ட கனவு நனவாகிவிட்டது.
பெங்களூரு:
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து விஜயேந்திரா பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் பா.ஜ.க. கூட்டணி 19 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரசுக்கு 9 தொகுதிகள் கிடைத்துள்ளது. பா.ஜ.க., ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி தேர்தலை எதிர்கொண்டன. 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறிய காங்கிரசாருக்கு ஏமாற்றம் தான் கிடைத்துள்ளது. உத்தரவாத திட்டங்களால் வெற்றி பெற்றுவிடலாம் என்று அவர்கள் கண்ட கனவு நனவாகிவிட்டது. கர்நாடகத்தில் காங்கிரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர்.
கர்நாடகத்தில் எங்களின் வெற்றிக்கு காரணமான பா.ஜ.க., ஜனதா தளம்(எஸ்) நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறோம். மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் பா.ஜ.க.வை ஆதரித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மண்டியா தொகுதியில் போட்டியிட்ட குமாரசாமி 2 லட்சத்து 84 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றி குறித்து குமாரசாமி மண்டியாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) கையில் இருந்து மண்டியா தொகுதி கை தவறிவிட்டது. இந்த தொகுதி ஜனதா தளம் (எஸ்) கட்சியின் இரும்பு கோட்டையாகும். தற்போது அந்த இரும்பு கோட்டையை ஜனதா தளம் (எஸ்) கட்சி தக்க வைத்துக் கொண்டது. என்னை வெற்றிபெற செய்த மண்டியா தொகுதி மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் வெற்றி சர்க்கரை நாட்டில் வசித்து வரும் ஒவ்வொரு தந்தை-தாய்க்கும், அக்காள்-தங்கைக்கும், அண்ணன்-தம்பிக்கும் கிடைத்த வெற்றி. ஜனதா தளம்(எஸ்)-பா.ஜ.க. தொண்டர்கள் ஒன்று சேர்ந்து வேலை பார்த்துள்ளனர். என்னை இவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மோடி 3-வது முறையாக பிரதமராவார். அவர் நல்லாட்சி வழங்குவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் சார்பில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் இளையபெருமாள் நூற்றாண்டு விழா இன்று மாலையில் காமராஜர் அரங்கில் நடக்கிறது.
இதையொட்டி காங்கிரஸ் எஸ்.சி. துறை சார்பில் மாநில தலைவர் ரஞ்சன் குமார் இளையபெருமாளின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியிட ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து காங்கிரஸ் பேரியக்கத்தின் நாடறிந்த தலைவராக உயர்ந்த பெரியவர் எல்.இளையபெருமாள் அரசியல் வாழ்க்கை என்பது, காலத்தாலும், களத்தாலும் வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றதாகும்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தவர், சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக 1952 முதல் 1967 வரை 3 முறை தேர்வு செய்யப்பட்ட பெருமைக்குரியவர், சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். நேரு பிரதமராக இருந்தபோது அமைக்கப்பட்ட அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு ஆணையத்தின் முதல் தலைவராகவும் பணியாற்றியவர் என்பதெல்லாம் இளையபெருமாள் அரசியல் அடையாளங்கள்.

அவர் தலைமையிலான அகில இந்தியத் தீண்டாமை ஆணையத்தின் பரிந்துரையின் பலனாகவே, தீண்டாமைக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்உருவானது என்பதே அவரது அரசியல் லட்சியத்தின் உன்னதத்திற்கும், விழுமியத்திற்கும் வெளிப்படையான வரலாற்றுச் சான்று.
பெரியவர் இளையபெருமாள், 1980-ல் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமையும்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தார். கலைஞருடன் மிகுந்த நெருக்கமும், நட்புறவும் கொண்டிருந்தவர். 1998-ம் ஆண்டு அண்ணல் அம்பேத்கர் பெயரிலான தமிழ்நாடு அரசின் விருதை முதன்முதலாக பெரியவர் இளையபெருமாள் அவர்களுக்குத்தான் முதலமைச்சர் தலைவர் கலைஞர் வழங்கினார்கள். "சலிப்பேறாத சமூகத் தொண்டர்" என்று கலைஞர் அவர்களால் பாராட்டப்பட்டவர்.
இளையபெருமாள் அவர்களைச் சிறப்பிக்கும் வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவரங்கம் ஒன்று அமைக்கப்படும் என்று கடந்த 18.4.2023 அன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளேன்.
பெரியவர் இளையபெருமாள் நூற்றாண்டைக் கொண்டாடுவதுடன், "இளையபெருமாள் வாழ்க்கைச் சரித்திரம்" என்ற அவரது வாழ்க்கை வரலாற்று நூலையும் வெளியிடுவது பெரிதும் பாராட்டுதலுக்குரிய நிகழ்வாகும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
- காங்கிரஸ் நிர்வாகிகளும் விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.
- விசாரிக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பீளமேடு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
கோவை:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருப்பவர் கே.சி. வேணுகோபால்.
இவர் கடந்த 17-ந் தேதி கேரளாவில் நிகழ்ச்சியை முடித்து கொண்டு டெல்லி செல்ல கோவை விமான நிலையத்திற்கு வந்தார்.
அவரை வழியனுப்பி வைக்க கோவை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளும் திரண்டிருந்தனர். அந்த சமயம் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், மயூரா ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்ததால் சலசலப்பு ஏற்பட்டது. பொதுச்செயலாளர் வேணுகோபால் அவர்களை சமாதானம் செய்து விட்டு, டெல்லி புறப்பட்டு சென்றார்.
காங்கிரஸ் நிர்வாகிகளும் விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார், அங்கு நின்றிருந்த காங்கிரஸ் ஐ.என்.டியூ.சி நிர்வாகி கோவை செல்வன் மீது மோதியதாக தெரிகிறது.
இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஆனது. அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே ஐ.என்.டி.யூ.சி நிர்வாகி கோவை செல்வன் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மயூரா ஜெயக்குமார் உள்பட 3 பேர் மீது புகார் அளித்தார். விமான நிலையத்தில் மயூரா ஜெயக்குமாரும், அவருடன் வந்தவர்களும் வேண்டும் என்றே என்னையும், என்னுடன் வந்தவர்களையும் தாக்க முயன்றனர். எனவே அவர்கள் மீது வழக்குபதிந்து நடவடிக்கை எடுத்து, எனக்கும், எனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
இதுதொடர்பாக விசாரிக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பீளமேடு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகி மயூரா ஜெயக்குமார் மற்றும் அவருடன் வந்த தமிழ்ச்செல்வன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 3 பேர் மீது அவதூறாக பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 2 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
- காங்கிரஸ் சார்பில் மத நல்லிணக்க சிறப்பு வழிபாடு நடத்த போவதாக அறிவித்தார்.
- பக்தர்களை தவிர மற்ற அமைப்பினர், கட்சியினர் திரண்டு வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மதுரை:
மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் பாதுஷா தர்கா விவகாரம் இந்து மற்றும் இஸ்லாமிய மதத்தினரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பும் பதட்டமும் நிலவி வருகிறது.
இதனால் மாவட்டம் முழுவதும் 2 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து இரு சமயத்தை சேர்ந்த மக்கள் திருப்பரங்குன்றத்தில் திரளுவதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று மாலை சென்னை சத்திய மூர்த்திபவனில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், இன்று மாலை திருப்பரங்குன்றத்தில் முருகன் கோவில் மற்றும் சிக்கந்தர் பாதுஷா தர்காவில் காங்கிரஸ் சார்பில் மத நல்லிணக்க சிறப்பு வழிபாடு நடத்த போவதாக அறிவித்தார்.
திருப்பரங்குன்றம் பகுதியில் தற்போது அமைதி நிலவும் நிலையில் உச்சக்கட்ட பாதுகாப்புடன் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் செல்வப்பெருந்தகையின் இந்த அறிவிப்பு மேலும் சிக்கலை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அம்மாபட்டி பாண்டியிடம் தொடர்பு கொண்டு சில தகவல்களை தெரிவித்தனர். அப்போது அவரிடம் பக்தர்களை தவிர மற்ற அமைப்பினர், கட்சியினர் திரண்டு வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவரும் மாநில தலைமைக்கு அதை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து காங்கிரசாரின் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மற்றும் சிக்கந்தர் பாதுஷா தர்காவில் மத நல்லிணக்க வழிபாடு ஒத்திவைக்கப்பட்டு, செல்வப்பெருந்தகையின் பயணமும் ரத்தாகி உள்ளது.