என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமாவளவன்"

    • அ.தி.மு.க. ஏற்கனவே 2021-ம் ஆண்டே பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து படிப்பினை பெற்று இருக்கிறது.
    • அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கும்தான் இரு துருவ போட்டியாகத்தான் 2026 சட்டசபை தேர்தல் நடைபெறும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரி சபைக் கூட்டத்தில் வருகிற மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்துவதற்கு முடிவு எடுத்து இருக்கிறார்கள்.

    இது மகிழ்ச்சி அளிக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்று பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம். காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள் அனைத்தும் இந்த கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்ததை நாடு அறியும். பீகார் தேர்தல் பரபரப்புக்கு இடையில் மத்திய அமைச்சரவை கூடி இந்த முடிவை எடுத்திருக்கிறது.

    எனவே இது பீகார் சட்டசபை தேர்தலுக்கான ஒரு அவசர நிலைப்பாடாகத்தான் தெரிகிறது. பீகார் சட்டசபை தேர்தலுக்காகத்தான் இந்த நிலைப்பாடு என்றாலும் கூட இதனை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம் பாராட்டுகிறோம்.

    வருகிற தமிழக சட்டசபை தேர்தலில் எத்தனை முனை போட்டி நடந்தாலும் இரு முனை போட்டிதான் உண்மையான போட்டியாக இருக்க முடியும்.

    தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் மக்கள் செல்வாக்கு பெற்று உள்ள கட்சிகள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

    அ.தி.மு.க. தன்னுடைய பலத்தை குறைத்து மதிப்பிடுவதாகதான் நான் பார்க்கிறேன்.

    அ.தி.மு.க. ஏற்கனவே 2021-ம் ஆண்டே பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து படிப்பினை பெற்று இருக்கிறது. மறுபடியும் அதே பிழையை அது செய்கிறது.

    அ.தி.மு.க. தனித்து நின்றால் கூட அந்த வாக்கு வலிமை குன்ற போவதில்லை. அதை அ.தி.மு.க. உணராமல் இருக்கிறது என்பதுதான் இங்கே குறிப்பிடத்தக்க ஒன்று.

    எனவே எத்தனை அணிகள் இங்கே உருவானாலும் கூட தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கும்தான் இரு துருவ போட்டியாகத்தான் 2026 சட்டசபை தேர்தல் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குடிக்கிறவர்களின் எண்ணிகையை தமிழ்நாட்டில் அதிகப்படுத்தி ஒரு வரலாறு படைத்ததுதான் தி.மு.க. ஆட்சியின் சாதனை.
    • அ.தி.மு.க. என்பது தவிர்க்க முடியாத ஒரு மாபெரும் மக்கள் இயக்கம்.

    மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க.வும் பங்கேற்கலாம் என்று திருமாவளவன் அழைப்பு விடுத்திருப்பது பற்றி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருப்பதாவது:-

    மது என்பது சமுதாயத்துக்கு மிகப்பெரிய கேடு. குறிப்பாக தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் பூரண மது விலக்கு கொண்டு வருவோம் என்று குறிப்பிட்டு உள்ளனர்.

    அ.தி.மு.க. ஆட்சியின் போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் கையில் பதாகையுடன் பூரண மது விலக்கு வேண்டும் என்று வீட்டு முன்பு கோஷமிட்டு போராடினார். இதை அனைவரும் அறிவார்கள்.

    அதன் பிறகு ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாபாரம் ஆகாத 500 மதுக்கடையை மூடிவிட்டு அதற்கு பதிலாக எப்.எல்.2 லைசென்சு,1,500 கடைகளுக்கும், 3 ஆயிரம் மனமகிழ் மன்றங்களுக்கும் லைசென்சு கொடுத்து விட்டு அதற்கு பிறகு ரூ.35 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.42 ஆயிரம் கோடியாக மதுக்கடை வருமானத்தை உயர்த்தி விட்டு, குடிக்கிறவர்களின் எண்ணிகையை தமிழ்நாட்டில் அதிகப்படுத்தி ஒரு வரலாறு படைத்ததுதான் தி.மு.க. ஆட்சியின் சாதனை.

    அது தோழமையில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு இப்போது பிடிக்கவில்லை. அதன் அடிப்படையில்தான் முதலில் திருமாவளவன் அவர்களுக்கு எதிராக குரல் கொடுத்து இருக்கிறார்.

    குரல் கொடுத்தது மட்டுமின்றி ஒரு நல்ல விசயத்துக்காக அவர் மாநாடு நடத்துகிறார். இந்த மாநாடு நல்ல நோக்கத்துக்காக நடைபெறும் மாநாடு என்ற அடிப்படையில் அ.தி.மு.க.வுக்கு ஒரு அழைப்பு விடுத்துள்ளார்.

    அ.தி.மு.க. என்பது தவிர்க்க முடியாத ஒரு மாபெரும் மக்கள் இயக்கம். மக்களின் பேராதரவு பெற்றுள்ள இயக்கம் அ.தி.மு.க. என்பதால் அந்த அடிப்படையில் இன்று அழைப்பு கொடுத்துள்ளார்.

    இதில் கலந்து கொள்வதா? இல்லையா? என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும்.

    இவ்வாறு ஜெயக்குமார் கூறி உள்ளார்.

    • ஈரோடு சோலாரில் ஒரு விளையாட்டு அரங்கம் உருவாக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ஒப்புதல் தந்துள்ளார்.
    • உச்ச நீதிமன்றம் அங்கீகரிக்கப்படாத மனைகள் மற்றும் கட்டிடங்களை வரைமுறைப்படுத்த சில நிபந்தனை விதித்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் வரும் 24-ந் தேதி வரை 5 பிரிவுகளின் கீழ் நடைபெறுகின்றது. போட்டியில் தமிழகம் முழுவதும் 11.56 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் 21,626 பேர் பதிவு செய்துள்ளனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கையில் போட்டிகளை தொடங்கி வைத்துள்ளார். முதலமைச்சர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர்.

    ஈரோடு சோலாரில் ஒரு விளையாட்டு அரங்கம் உருவாக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ஒப்புதல் தந்துள்ளார். அதற்கான பணிகள் தொடக்கப்பட்டுள்ளன. சி.என்.சி. கலை அறிவியல் கல்லூரியில் ஒரு உள் விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விளையாட்டு துறை அமைச்சர் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஒரு விளையாட்டு அரங்கம் அமைக்க திட்டமிட்டுள்ளார்.

    மதுவிலக்கை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஒரு மாநாட்டை நடத்துகிறார். மதுவிலக்கு கொள்கை தளர்த்தப்பட்டது. இந்த அரசு காலத்தில் அல்ல அது பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இதனால் கூட்டணியில் இருந்து கொண்டு அவர் தி.மு.க.வை எதிர்ப்பதாக கருதக்கூடாது.

    அவர் அவரது கருத்தை, கோரிக்கைகளை தெரிவிக்க மாநாட்டை நடத்துகிறார். மதுவிலக்கு பிரசாரத்திற்கு 5 கோடி ரூபாய் இந்த அரசு ஒதுக்கி உள்ளது. இது படிப்படியாக தேவையான அளவிற்கு நிதி ஒதுக்கப்படும்.

    உச்ச நீதிமன்றம் அங்கீகரிக்கப்படாத மனைகள் மற்றும் கட்டிடங்களை வரைமுறைப்படுத்த சில நிபந்தனை விதித்துள்ளது. அதன்படி விண்ணப்பங்கள் மட்டும் தற்போது பெற உத்தரவிட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத மனை பிரிவுகள், கட்டிடங்கள் குறித்து கண்டறிய மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கீகரிக்கப்படாத பள்ளி கட்டிடங்கள் வரைமுறைப்படுத்த இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2026-வது ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிறுத்தி இல்லை. அரசியல் வேறு மது ஒழிப்பு என்பது வேறு.
    • சாராயக்கடைகளை மூடினாலே நல்லது நடக்கும் என பொதுமக்கள் நம்புகிறார்கள்.

    விழுப்புரம்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விழுப்புரத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சாதி ஒழிப்பு போராளி இமானுவேல் சேகரன் நினைவுநாளை முன்னிட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அமைக்க சட்டமன்றத்தில் வலியுறுத்தப்பட்டதில் மணிமண்டபம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன்.

    மது, போதை பொருள்களை ஒழிக்க காலங்காலமாக போராடி வருகிறோம். பவுத்தத்தை தழுவியர்கள் 22 கொள்கைகளில் மதுவை தொட கூடாது என்பது ஒன்று. மது ஒழிப்பு போராட்டம் என்பது தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

    மதுவை ஒழிக்க மகளிரின் குரல் ஒலிக்க வேண்டுமென்பதால் மது போதை ஒழிப்பு மாநாடு நடத்துகிறோம். கட்சி அரசியல் என்பது வேறு சமூகம் மக்கள் நலன் சார்ந்த அரசியல் வேறு. மதுவை ஒழிக்க அனைவரும் எங்களுடன் போராட வேண்டும். மக்கள் நலன் சார்ந்து செயல்பட வேண்டியுள்ளது. தி.மு.க.விற்கும், அ.தி.மு.க.விற்கும் மதுவை ஒழிக்க வேண்டும் என்ற கருத்துள்ள போது படிப்படியாக ஏன் தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டு வரஇயலாது. இந்தி திணிப்பு, நீட் எதிர்ப்பு போன்றவைகளில் தமிழகம் முதன்மையானவையாக இருக்கும் போது தமிழகம் ஏன் மது ஒழிப்பில் முதன்மையானவையாக இருக்க கூடாது.

    மது ஒழிப்பிற்கு அறை கூவல் விடுப்பது மதுவை ஒழிக்க மட்டுமே. இது 2026-வது ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிறுத்தி இல்லை. அரசியல் வேறு மது ஒழிப்பு என்பது வேறு. சாராயக்கடைகளை மூடினாலே நல்லது நடக்கும் என பொதுமக்கள் நம்புகிறார்கள்.

    கூட்டணியில் இருந்தாலும் நல்ல பிரச்சனைகள் இருந்தால் எதிர்த்து போராடுவோம். அதன்படி அ.தி.மு.க. மது ஒழிப்பு மாநாட்டிற்கு வந்து மேடையில் பேசலாம்.

    பா.ஜ.க, பா.ம.க.விற்கு தான் நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை. அவர்கள் மதவாத, சாதியவாத கட்சி என்பதால் அவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. எப்போதும் அவர்களுடன் இணைய மாட்டோம். தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கியுள்ள விஜய்யும் இந்த மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ளலாம். மதுக்கடைகளை வைத்து கொண்டு அதன் மூலம் வருமானத்தை கொண்டு அரசு ஆட்சி நடத்துவது என்பது ஏற்புடையதல்ல. மக்களுடைய கோரிக்கையை தான் முன் வைக்கிறோம். அது ஒரு கட்சியின் கோரிக்கையாக பார்க்க வேண்டாம். எல்லோரும் கை கோர்த்தால் தான் முடிவு எட்டப்படும். கள்ளச்சாராயம் புழக்கம் இன்னும் இருக்கிறது. பள்ளி வரை போதை பொருள் பழக்கம் உள்ளது.

    பெண்களுக்கெதிரான குற்றங்கள் அனைத்தும் போதை பொருட்களில் அடிமையானவர்களால் நடைபெற்றுள்ளது. போதை என்பது அமைதியாக நடைபெறுகிற பேரழிவு. தமிழகம் கல்வி கொள்கையில் சிறந்து விளங்குவதாக மத்திய மந்திரியே தெரிவிப்பதால் கல்வி சிறப்பாக இருப்பது தான் காரணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியா முழுவதும் மதுக்கடைகள் திறந்து இருக்கின்றன.
    • மதுவை உற்பத்தி செய்கின்ற முதலாளிகளை எதிர்க்கின்ற செயலாகும்.

    திருவாரூர்:

    மது போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு குறித்த விளக்க மண்டல செயற்குழு கூட்டம் திருவாரூரில் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    மது ஒழிப்பு என்கிற உணர்வு பூர்வமான பிரச்சனையை கையில் எடுத்துள்ளேன். அனைத்து கட்சிகளும் மதுவேண்டாம், மதுவிலக்கு வேண்டும் என்பார்கள், ஆனால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த மாட்டார்கள். இதனால் தான் இந்தியா முழுவதும் மதுக்கடைகள் திறந்து இருக்கின்றன. இதற்கு அனைவரும் ஒன்றிணைந்து மதுவிலக்கு என்ற முடிவு எடுத்தால் நிச்சயம் மதுவை ஒழிக்க முடியும் மது என்பது மிகப்பெரிய லாபம் தரும் தொழில், மிகப்பெரிய கட்டமைப்பினை கொண்டது. மதுக்கடைகளை மூடுவது என்பதை விட மது ஆலைகளை மூட வேண்டும்.

    டாஸ்மாக் கடையை மூடுவது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. டாஸ்மாக் என்பது கார்பரேசன் தமிழ்நாடு அரசே உருவாக்கி உள்ளது. இதற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. பெரிய தொழில் அதிபர்களுடன் முரண்படுகின்ற விசயம். மதுவை உற்பத்தி செய்கின்ற முதலாளிகளை எதிர்க்கின்ற செயலாகும். இது குறித்து தொடக்கத்தில் இருந்து பேசி வருகிறேன்.

    நாங்கள் மது ஒழிப்பு குறித்து பேசுவதால் தற்போது தி.மு.க. கூட்டணியை சிலர் உடைக்க நினைத்து பேசி வருகின்றனர். தேர்தலில் அரசியல் வேறு, மதுவிலக்கு கொள்கை வேறு என்று கூறுகிறோம். மதுவிலக்கு குறித்து தி.மு.க., அ.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் என அனைவரும் கூறுகிறோம். தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கு என்பது மட்டுமல்ல, தேசிய அளவில் மதுவிலக்கு கொண்டு வந்தால் பயன் அளிக்கும்.

    தூய்மையான நோக்கத்துக்கு தேர்தல் அரசியல் முடிச்சு போட வேண்டாம். மது ஒழிப்பு கொள்கையால் அரசியலில் எந்த பாதிப்பு வந்தாலும் சந்திக்க தயார். கூட்டணி உறவில் பாதிப்பு வந்தாலும் வரலாம். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்வோம். இப்போது நாங்கள் தி.மு.க கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணியில் தொடர்கிறோம், தொடரும் என நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மாநிலப் பிரதிநிதித்துவம் மக்கள் தொகை அடிப்படையில் இருக்கக் கூடாது.
    • தொகுதி மறுசீரமைப்பு என்பது மக்கள் தொகை மட்டும் கொண்டதாக இருக்க கூடாது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையுள்ளது. இந்த சூழலில் மக்கள் தொகை அடிப்படையில் பாராளுமன்ற தொகுதிகளை வரையறுத்தால் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்று புள்ளி விவரம் கூறுகிறது.

    மாநிலப் பிரதிநிதித்துவம் மக்கள் தொகை அடிப்படையில் இருக்கக் கூடாது. வேறு சில அளவுகளும் தேவைப்படுகிறது என்பதனை தமிழ்நாடு மற்றும் ஆந்திர முதலமைச்சர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

    எனவே தொகுதி மறுசீரமைப்பு என்பது மக்கள் தொகை மட்டும் கொண்டதாக இருக்க கூடாது.

    சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் நீதிமன்றமே கண்டிக்கும் வகையில் இருப்பது வேதனைக்குரியது. இதன் பிறகாவது விமர்சனம் இல்லாமல் அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    தமிழகத்தில் மழை, புயல், வெள்ளம் ஏதுமில்லை. மக்கள் பாதிப்பும் இல்லை. இதனால் எதிர்க்கட்சிகள் விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் திட்டமிட்டே விமர்சனம் என்ற பெயரில் அரசு மீது களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பது ஏற்புடையது அல்ல. நண்பர் விஜய் கட்சி ஆரம்பித்து முதல் முயற்சியாக மாநாடு நடத்த உள்ளார்.

    இந்த மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள். மாநாட்டுக்கு அழைப்பு வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் கட்சியை மறு சீரமைப்பு செய்ய திட்டமிட்டுள்ளார்.
    • பொறுப்புக்கான பரிந்துரை குழு அறிவிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் அனுப்பப்படுவார்கள்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி 144 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகின்றன. 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

    கட்சியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளை அதிகளவில் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புதிதாக மாவட்ட செயலாளர்களை நியமிக்க கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் முடிவு செய்துள்ளார்.

    புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் கட்சியை மறு சீரமைப்பு செய்ய திட்டமிட்டுள்ளார்.

    அதன்படி 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தொகுதி வாரியாக மாவட்ட செயலாளர்களை திருமாவளவன் நியமிக்க முடிவு செய்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கட்சி தொண்டர்களுக்கு முகநூல் நேரலை வழியாக பேசி அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் 234 மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகத்தை அறிவிக்க இருக்கிறோம்.

    தற்போது இயங்கும் 144 மாவட்டச் செயலாளர்கள் அதிக புகார் உள்ளவர்கள், பணி செய்யாமல் செயலற்று இருப்பவர்கள் மற்றும் எல்லை பிரச்சனைகளை கருத்தில் கொண்டு ஒரு சிலரை அப்பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டி இருக்கும்.

    புதிதாக நியமிக்கப்பட இருக்கும் 234 மாவட்டச் செயலாளரும் அந்தத் தொகுதியின் பெயரில் மாவட்டச் செயலாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள்.

    பொறுப்புக்கான பரிந்துரை குழு அறிவிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் அனுப்பப்படுவார்கள்.

    புதிதாக விண்ணப்பம் அளிக்க விரும்புபவர்கள் இந்த பரிந்துரை குழுவிடம் நமது தமிழ்மண் சந்தா 2000 ரூபாய் மற்றும் பொறுப்புக்கு 1000 ரூபாய் டி.டி எடுத்து விண்ணப்பம் அளிக்க வேண்டும்.

    ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகத்திற்கும் மற்றும் அணிகளின் மாநில-மாவட்ட பொறுப்புகளுக்கும் இந்த பரிந்துரை குழுவிடம் விண்ணப்பம் அளிக்கலாம்.

    புதிதாக நியமிக்கப் படும் மாவட்ட நிர்வாகம்:

    மாவட்டச் செயலாளர்-1, மாவட்ட பொருளாளர்-1, மாவட்டத் துணைச் செயலாளர்கள்-5, மாவட்ட செய்தி தொடர்பாளர்-1, செயற்குழு உறுப்பினர்-1, மகளிர் அணி செயலாளர்-1, இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறையின் மாவட்ட அமைப்பாளர்-1, மேற்கண்ட மாவட்ட நிர்வாகத்தில் குறைந்தது 9 பேரும் அதிகபட்சம் 11 பேரும் இடம் பெறுவார்கள்.

    கட்சியில் பிரிக்கப்பட்ட ஒரு ஒன்றிய நிர்வாகத்திற்கு ஒரு மாவட்டத் துணைச் செயலாளர் என்ற அடிப் படையில் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.

    ஒரு சட்டமன்றத் தொகுதிக்குள் ஐந்து முதல் அதற்கு மேற்பட்ட ஒன்றிய நிர்வாகம் நம் கட்சியில் பிரிக்கப்பட்டால், அந்த பிரிக்கப்பட்ட ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ஒரு மாவட்டத் துணைச் செய லாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

    மாவட்ட நிர்வாகத்தில் உள்ள பொறுப்புகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஒன்றிய நிர்வாகத்திலும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

    வருகிற 15-ந் தேதிக்குள் அனைத்து நிலை பொறுப்புகளுக்கும் பரிந்துரை குழுவிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

    தமிழ்நாடு முழுவதும் வருவாய் மாவட்ட அடிப் பப்படையில் நியமிக்கப்படும் பரிந்துரை குழுக்கள் இன்றி, மேலும் ஐந்து மண்டல உயர்நிலைக் குழுவும் அமைக்கப்பட இருக்கிறது.

    வடமண்டலம், மேற்கு மண்டலம், மைய மண்டலம், டெல்டா மண்டலம், தென் மண்டலம் என்று 5 மண்டல உயர்நிலைக் குழு அமைக்கப்பட இருக்கிறது.

    தற்போது உள்ள 144 மாவட்டச் செயலாளர்களில் ஒரு சிலர் ஒரே சட்டமன்றத் தொகுதிக்குள் வருகிறார்கள். இவற்றைக் குறித்து அந்த பகுதிக்குள் வரும் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் உயர்நிலைக் குழுவுடன் பேசி ஒரு முடிவு எடுத்து அவை சரி செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.

    எந்த முடிவு ஆனாலும் என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகள் ஏற்றுக்கொண்டு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த தகவலை தலைமை செய்தி தொடர்பாளர் கு.க.பாவலன் தெரிவித்துள்ளார்.

    • வேல்முருகன் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் நீடிப்பார் என்று நான் நம்புகிறேன், நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
    • தமிழ்நாட்டைப் பொறுத்தவரை போதைப்பொருள் விற்பனை அதிகரித்து இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    கே.கே.நகர்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வலிமையாக இருக்கின்றன. எனவே வருகிற சட்டமன்றத் தேர்தலில், 200 தொகுதிகள் வெல்லும் என்ற முதல்வரின் கருத்து சரியானது. தி.மு.க. செயற்குழுவில் 200 இடங்களில் வெற்றி பெறுவது உறுதியாக இருக்க வேண்டும் என தீர்மானம் தி.மு.க. கூட்டணி வலுவாக இருப்பதை காட்டுகிறது.

    தி.மு.க. கூட்டணி தமிழ்நாட்டில் பல இடங்களில் தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்பது உறுதி. வருகிற சட்டமன்றத் தேர்தலில் எதிர்கட்சிகள் ஒரே அணியிலே திரளுவார்கள் என்பதற்கான எந்த நம்பிக்கையும் இல்லை.

    வேல்முருகன் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் நீடிப்பார் என்று நான் நம்புகிறேன், நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். பா.ஜ.க. தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேரும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் அது வெற்றிகரமாக அமையாது என்பதை கடந்த தேர்தலில் மக்கள் உணர்த்தி உள்ளனர்.

    பத்திரப்பதிவு துறையில் கட்டணம் உயர்வால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இது குறித்து முதலமைச்சரிடம் நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளேன். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இஸ்லாமியர்கள், சிறுபான்மையினருக்கு எப்போதும் தி.மு.க. கூட்டணி உறுதுணையாக இருக்கும்.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உள்ளாட்சித் தேர்தல் நடக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் சில சட்ட சிக்கல்கள் இருப்பதாக அமைச்சர் தெரிவித்திருக்கிறார். புதிய கல்விக் கொள்கை திட்டத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கப்படும் என தெரிவித்தது தவறானது ஆகும்.

    அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதை கண்டித்து இந்தியா முழுவதும் வரும் 28-ந்தேதி அம்பேத்கர் அமைப்புகள் பல்வேறு கட்சியினர்கள் ஒன்றிணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    அன்றைய தினம் சென்னையில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். 'அம்பேத்கர் அம்பேத்கர்' என்று ஆயிரம் முறை முழக்கங்கள் எழுப்பப்படும்.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை போதைப்பொருள் விற்பனை அதிகரித்து இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் முற்றிலுமாக போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டும் என்பதே விடுதலை சிறுத்தை கட்சியின் நிலைப்பாடு ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது திருச்சி கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், மேற்கு மாநகர மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • கூடுதலான இடங்களில் போட்டியிட வேண்டும் என்று விரும்புவது இயல்பான ஒன்றுதான்.
    • முன்கூட்டியே எத்தனை இடங்கள் வேண்டும் என்பதெல்லாம் ஒரு நிபந்தனையாக முன் வைக்க வாய்ப்பில்லை.

    கடந்த சில மாதங்களாகவே தி.மு.க.-வுக்கும், கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இடையே சச்சரவுகள் ஏற்பட்டு வருகிறது. முதலில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு தேவை என்று திருமாவளவன் முன்பு பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார். இது சர்ச்சையானதை தொடர்ந்து அந்த வீடியோ நீக்கப்பட்டது. இதையடுத்து திருமாவளவன் பேசிய வீடியோவை ஆதர் அர்ஜூனா பதிவிட்டு இருந்தார்.

    இதை தொடர்ந்து 'எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தக வெளியிட்டு விழாவில் விஜயுடன் திருமாவளவன் பங்கேற்க உள்ளதாவும் இதனால் தவெக- விசிக இடையே கூட்டணி உறுதியாகிறது என்றும் செய்திகள் வெளிவந்தன. இதனால் புத்தக வெளியிட்டு விழாவில் பங்கேற்பதை விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தவிர்த்தார்.



    இதை அடுத்து புத்தக வெளியிட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜூனா பங்கேற்று மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆதவ் அர்ஜூனா தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வெளியேறினார். 

    இப்படி சர்ச்சைகளில் சிக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மீண்டும் பிரச்சனை உருவெடுத்துள்ளது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி இரட்டை இலக்கத்தில் சட்டசபையில் இருக்க வேண்டும். அதற்கு கூடுதலான இடங்களை கேட்டுப்பெற வேண்டும். குறைந்தபட்சம் 25 தொகுதிகளையாவது கேட்டுப்பெற வேண்டும் என்பதுதான் என் விருப்பம். இதையே தான் அனைத்து தோழர்களும் விரும்புகிறார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு கூறியுள்ளார்.

    இதையடுத்து கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது:-

    தேர்தலில் எவ்வளவு இடங்கள் வேண்டும் என்பதை கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தும் போது தான் நாங்கள் முடிவு செய்வோம். முன்கூட்டியே எத்தனை இடங்கள் வேண்டும் என்பதெல்லாம் ஒரு நிபந்தனையாக முன் வைக்க வாய்ப்பில்லை. அப்படி எப்போதும் வைத்ததும் இல்லை.

    ஏற்கனவே எங்களுக்கு 10 தொகுதி கொடுத்துள்ளார்கள். அது இரட்டை இலக்கம் தான். 12 தொகுதி வரை நாங்கள் 2011-ல் பேசி தவிர்க்க முடியாத காரணங்களால் அதை 10 என்று இறுதி செய்தோம். ஆகவே எங்களுடைய எண்ணிக்கையை பெருக்க வேண்டும். கூடுதலான இடங்களில் போட்டியிட வேண்டும் என்று விரும்புவது இயல்பான ஒன்றுதான். கூட்டணியில் பல கட்சிகள் இருக்கின்றபோது அவற்றையெல்லாம் அனுசரித்து எங்கள் முடிவை மேற்கொள்வோம். திமுகவிடம் 25 தொகுதிகள் கேட்போம் என வன்னி அரசு கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்றார்.

    ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு தேவை என்று கூறிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தற்போது 25 தொகுதிகள் வரை வேண்டும் என்று கூறுவது தி.மு.க.வு.க்கு அழுத்தத்தை தருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.  

    • டெல்லியில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என பா.ஜ.க. தீவிரமாக களமாடியது.
    • இனி வருகிற தேர்தலிலாவது இதனை உணர்ந்து இந்தியா கூட்டணி கட்சிகள் ஒற்றுமையுடன் ஒவ்வொரு தேர்தலையும் சந்திக்க வேண்டும்.

    திண்டுக்கல்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

    டெல்லியில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என பா.ஜ.க. தீவிரமாக களமாடியது. சமூக ஊடகங்களில் கூட வாக்காளர்களுக்கு அந்த கட்சியினர் பணம் கொடுத்ததாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் இந்தியா கூட்டணியில் ஒற்றுமையாக இருக்க வேண்டிய காங்கிரஸ், ஆம் ஆத்மி ஈகோ பிரச்சனையால் பிரிந்து தேர்தலை சந்தித்தது. இது பா.ஜ.க. வெற்றிக்கு பெரிதும் உதவியாக அமைந்து விட்டது. பா.ஜ.க.வின் வெற்றி அதிர்ச்சி அளிக்கிறது.

    பாராளுமன்ற தேர்தலோ, சட்டமன்ற தேர்தலோ இந்தியா கூட்டணி கட்சிகள் ஒற்றுமையாக இணைந்து செயல்பட்டால் தான் பா.ஜ.க. என்ற மதவாத சக்தியை வீழ்த்த முடியும். இனி வருகிற தேர்தலிலாவது இதனை உணர்ந்து இந்தியா கூட்டணி கட்சிகள் ஒற்றுமையுடன் ஒவ்வொரு தேர்தலையும் சந்திக்க வேண்டும்.

    தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் தனி வாரியம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை தமிழக அரசு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    ×