search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94316"

    • இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் 'அண்ணாமலை'.
    • இப்படத்தின் மூலம் ரஜினிகாந்துக்கு joமுதல்முறையாக தேவா இசையமைத்திருந்தார்.

    ரஜினிகாந்த் நடிப்பில் 1992-ஆம் ஆண்டு ஜூன் 27 தேதி வெளியான திரைப்படம் 'அண்ணாமலை'. இயக்குனர் கே.பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்கி இருந்தார். இதில் ரஜினிக்கு ஜோடியாக குஷ்பூ நடித்திருந்தார். சரத் பாபு, மனோரம்மா, ஜனகராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் மூலம் ரஜினிகாந்துக்கு முதல்முறையாக தேவா இசையமைத்திருந்தார். ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் குறிப்பிடப்படும் படங்களில் 'அண்ணாமலை' திரைப்படம் இன்று வரை முக்கிய பங்கு வகிக்கிறது. அன்றைய காலக்கட்டத்தில் இப்படம் திரையரங்குகளில் 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கண்டது.

    அண்ணாமலை

    அண்ணாமலை

    'அண்ணாமலை' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்திருந்தார். இது குறித்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    அண்ணாமலை

    அண்ணாமலை

    இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக நடித்த குஷ்பூ ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "அண்ணாமலை, என் கேரியரில் மிக சிறந்த படங்களில் ஒன்று, 30 ஆண்டுகள் கடந்துவிட்டதை என்னால் நம்பமுடியவில்லை. ரஜினிகாந்த் சாரிடம் பணிபுரிந்தது மகிழ்ச்சியாகவும் மரியாதையாகவும் உணர்கிறேன். மேலும், சுரேஷ்கிருஷ்ணா சாருக்கும், இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் சாருக்கும் நான் கண்டிப்பாக கடமைப்பட்டிருக்கிறேன். அனைத்து அன்புக்கும் நன்றி" என குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


    • இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் 'அண்ணாமலை'.
    • இப்படத்தின் மூலம் ரஜினிகாந்துக்கு முதல்முறையாக தேவா இசையமைத்திருந்தார்.

    ரஜினிகாந்த் நடிப்பில் 1992-ஆம் ஆண்டு ஜூன் 27 தேதி வெளியான திரைப்படம் 'அண்ணாமலை'. இயக்குனர் கே.பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்கி இருந்தார். இப்படத்தின் மூலம் ரஜினிகாந்துக்கு முதல்முறையாக தேவா இசையமைத்திருந்தார். ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் குறிப்பிடப்படும் படங்களில் 'அண்ணாமலை' திரைப்படம் இன்று வரை முக்கிய பங்கு வகிக்கிறது. அன்றைய காலக்கட்டத்தில் இப்படம் திரையரங்குகளில் 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கண்டது.

    சுரேஷ் கிருஷ்ணா - ரஜினி - அண்ணாமலை

    சுரேஷ் கிருஷ்ணா - ரஜினி - அண்ணாமலை

    இந்நிலையில் 'அண்ணாமலை' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். இது குறித்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் 30 வருட கொண்டாட்டத்தை ரசிகர்கள் உற்சாகத்துடன் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    • கமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இப்படத்தின் சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்திருந்தார்.

    விக்ரம் படத்தின் வெற்றி அனைத்து மொழி திரையுலகையும் வியக்க வைத்திருக்கிறது. வெற்றி விழாவில் பேசிய கமல்ஹாசன், இந்த ப்படத்தின் மூலம் எனக்கு பங்கு தொகை ரூ.75 கோடி கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அதை இப்படி வெளியில் சொல்வதன் மூலம் எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் சொல்கிறேன் என்றார்.

    சில வருடங்களுக்கு முன்பு தனது ராஜ்கமல் நிறுவனத்தின் புதிப்பிக்கப்பட்ட அலுவலகத்தை திறந்து வைத்தபோது அந்த நிகழ்வில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அலுவலகத்தை திறந்து வைத்து ரஜினி பேசியபோது, நல்ல கதை அமைந்தால் நான் கமல்ஹாசனோடு சேர்ந்து நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறிரியிருந்தார். அப்போது ரஜினி பேசிய விஷயம் பரபரப்பானது. இதை மனதில் வைத்து கமல்ஹாசன் சில பூர்வாங்கப் பணிகளை செய்தார்.

    கமல் - ரஜினி

    கமல் - ரஜினி

    முதலில் ரஜினியும்-கமல்ஹாசனும் சேர்ந்து நடித்தால் அந்தப் படத்தின் பட்ஜெட் யாரும் எதிர்பார்க்காதச் வகையில் மிகப்பெரிய பட்ஜெட்டாக இருக்கும் என்பதே. அதற்கு செலவிட கமல்ஹாசனிடம் பணம் இல்லை என்பதால் கமல்ஹாசனே சில இடங்களில் சொல்லியிருக்கிறார். இதனால் அவருக்காக சில நண்பர்கள் பைனான்ஸ் திரட்டும் பணியில் ஈடுபட்டார்கள். அது அன்றைய சூழலுக்கு மேலும் நகராமல் அப்படியே நின்றுபோனது.

    முதலில் கதை எழுதலாம் என்ற கமலின் யோசனையில் தோன்றியதே விக்ரம் படத்தின் முழு ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த கதை. இதற்கு அவர் முதலில் வைத்தப் பெயர் வேறு. லோகேஷ் கனகராஜ் கதை சொல்ல வந்த போது அவர் சொன்ன கதையை கேட்டு விட்டு தன்னிடம் இப்படி ஒரு கதை இருக்கிறது என்று கமல்ஹாசன் சொல்ல, லோகேஷ் மகிழ்ச்சியாக ஒத்துக்கொண்டார்.

    கமல் - ரஜினி

    கமல் - ரஜினி


    இந்தக் கதையில் ரஜினியையும் சேர்க்க வேண்டும் என்பதே கமல்ஹாசனின் திட்டமாக இருந்தது என்கிறார்கள். ஆனால் ஒரு முழுக்கதையில் ரஜினி-கமல் இருவருக்குமே சமபங்கு ஆக்‌ஷன் காட்சிகளும், பில்டப் காட்சிகளும் வைத்து எடுக்கபடுவது என்பது இன்றைய சூழலுக்கு நடக்காத காரியம். இரண்டு ஹீரோக்களின் ரசிகர்களும் இதை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்பதும் சிக்கலான விஷயமாக இருந்தது. ஒருவர் ஹீரோவாக நடிக்க, இன்னொருவர் கவுரவ வேடத்தில் நடிக்க வேண்டும். அப்படி செய்தால்தான் ரசிகர்களை திருப்திபடுத்த முடியும்.

    அந்த வகையில் சூர்யா நடித்த பாத்திரத்தில் ரஜினி நடித்திருந்தால் எப்படியிருக்கும் என்கிறார்கள் கமலுக்கு நெருக்கமானவர்கள். நிஜமாகவே தியேட்டர் அதிர்ந்துதான் போயிருக்கும். இதன் தொடர்ச்சியாக ரஜினியே அடுத்தப் படத்தில் முழுமையாக நார்கோடிக் ஆபிசராக நடித்தால் எப்படியிருக்கும் என்று கேட்கிறார்கள். ஆனால் இந்தத்திட்டம் ரஜினியின் பாலிசிக்கு ஒத்துவராது.

    கமல் - ரஜினி

    கமல் - ரஜினி


    அவரைப்பொருத்தவரை எந்தப் படத்திற்கும் இரண்டாம் பாகம் நடிக்கக்கூடாது. தனது மொழிமாற்றுப் படங்களுக்கு பின்னணி குரல் கொடுக்கக்கக்கூடாது என்பதே. இதனால்தான் அந்த இடத்தில் சூர்யா நடித்தார் என்கிறார்கள். ஆனால் இப்போதும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு ஒரு படம் செய்து கொடுக்க வேண்டும் என்கிற ரஜினியின் முடிவில் எந்தவித மாற்றம் இல்லை என்கிறார்கள்.

    அதற்கு தகுந்த கதையும், காலச்சூழலும் அமைய வேண்டும். அதற்கான முயற்சியை கமல்ஹாசன் எடுப்பார் என்கிறார்கள். விக்ரம் படத்தின் நிகழ்ச்சிகளில் கூட நானும் ரஜினியும் சேர்ந்து நடிக்கத் தயாராக இருக்கிறோம் கதைதான் அமைய வேண்டும் என்று பதிலளித்தார். இந்தக் கதையையும் கமல்ஹாசனே எழுதினால்தான் பொருத்தமாக இருக்கும். அதுவும் விரைவில் நடக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்கள் கமலுக்கு நெருக்கமானவர்கள்.

    • நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வந்த நிலையில் இவர்களின் திருமணம் இன்று நடைபெற்று வருகிறது.
    • இவர்களின் திருமணத்தில் திரைபிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வருகின்றனர்.

    நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்களின் ஜோடியான புகைப்படங்களை இருவரும் பகிர்ந்து வந்த நிலையில் எப்போது திருமணம் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். அதன்பின், ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஜூன் 9-ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் விமர்சையாக திருமணம் நடக்கவுள்ளதாக விக்னேஷ் சிவன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

    நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று காலை 8:30 மணியளவில் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக தொடங்கியது. இவர்களது திருமணத்தில் 200க்கு மேற்பட்ட பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்பட்ட நிலையில், வரிசையாக பிரபலங்கள் மகாபலிபுரம் நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.


    நயன்தாரா - விக்னேஷ் சிவன்

    நயன்தாரா - விக்னேஷ் சிவன்


    இந்நிலையில் திரைபிரபலங்கள் உறவினர்கள் முன் தொடங்கிய இவர்களின் திருமணத்தில் சரியாக 10.25 மணிக்கு விக்னேஷ் சிவன், நயன்தாராவின் கழுத்தில் தாலி கட்டினார். தற்போது மணமக்களை பலரும் வாழ்த்தி பதிவிட்டு வருகின்றனர். 

    • நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வந்த நிலையில் இவர்களின் திருமணம் இன்று நடைபெற்று வருகிறது.
    • இவர்களின் திருமணத்தில் திரைபிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வருகின்றனர்.

    நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்களின் ஜோடியான புகைப்படங்களை இருவரும் பகிர்ந்து வந்த நிலையில் எப்போது திருமணம் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். அதன்பின், ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஜூன் 9-ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் விமர்சையாக திருமணம் நடக்கவுள்ளதாக விக்னேஷ் சிவன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று காலை 8:30 மணியளவில் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் 200க்கு மேற்பட்ட பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்பட்ட நிலையில், வரிசையாக பிரபலங்கள் மகாபலிபுரம் நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.


    ஷாருக்கான்

    ஷாருக்கான்


    தற்போது நடிகர் ஷாருக்கான், நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்து கொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இதற்காக மும்பையில் இருந்து வந்திறங்கிய இவர் மணமக்கள் விக்னேஷ் சிவன் - நயன்தாராவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். நடிகர் ஷாருக்கான் கலந்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. 

    • நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வந்த நிலையில் இவர்களின் திருமணம் இன்று நடைபெற்று வருகிறது.
    • இவர்களின் திருமணத்தில் திரைபிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வருகின்றனர்.

    நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்களின் ஜோடியான புகைப்படங்களை இருவரும் பகிர்ந்து வந்த நிலையில் எப்போது திருமணம் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். அதன்பின், ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஜூன் 9-ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் விமர்சையாக திருமணம் நடக்கவுள்ளதாக விக்னேஷ் சிவன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று காலை 8:30 மணியளவில் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் 200க்கு மேற்பட்ட பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்பட்ட நிலையில், வரிசையாக பிரபலங்கள் மகாபலிபுரம் நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.


    ரஜினி

    ரஜினி

    தற்போது நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்து கொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதையடுத்து உள்ளே சென்ற ரஜினி மணமக்கள் விக்னேஷ் சிவன் - நயன்தாராவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

    கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் கமலை, நடிகர் ரஜினிகாந்த் போன் மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து இருக்கிறார்.
    நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் சென்னை போருரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்ததாகவும், பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானதால் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்றும் கமல் தெரிவித்து இருந்தார். 

    ரஜினி - கமல்

    இதையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘அன்பு நண்பர் கலைஞானி கமல்ஹாசன் அவர்கள் கொரோனா தொற்றிலிருந்து விரைந்து மீண்டு, தனது பணிகளைத் தொடர விழைகிறேன் என்று கூறினார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், போன் மூலம் கமலை தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து விசாரித்து இருக்கிறார்.

    ரஜினி நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் தீபாவளி திருநாளை முன்னிட்டு இன்று காலை வெளியாகியுள்ளது.
    சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் அண்ணாத்த. இப்படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு இன்று காலை சிறப்பு காட்சிகள் வெளியானது. பல இடங்களில் ரசிகர்கள் மழை என்றும் பாராமல், உற்சாகமாக வெடி வைத்து கொண்டாடினார்கள். பேனர், தாளம், நடனம் ஆடி படத்தை வரவேற்று இருக்கிறார்கள். ரசிகர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கும் இப்படத்தில் ரஜினியுடன், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இமான் இசையமைத்துள்ள இப்படத்தை வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். 


    ×