என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 94316"
- நடிகர் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- ரஜினியின் 170-வது படத்தை ஜெய்பீம் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்குகிறார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் நடிக்கின்றனர். ரஜினியின் 169-வது படமான ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை 'ஜெய் பீம்' பட இயக்குனர் டி.ஜே. ஞானவேல் இயக்கவுள்ளார். லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் ரஜினியின் 171வது படம் குறித்த தகவல் இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.
அதன்படி இப்படத்தை மாநகரம், கைதி, விக்ரம் படத்தை இயக்கி பிரபலமடைந்த லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ படத்தை முடித்த பிறகு இப்படத்தின் பணிகள் தொடங்கும் என்றும் இப்படத்திற்காக முதற்கட்ட கலந்துரையாடல் சமீபத்தில் நடைபெற்றதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நடிகர் ரஜினி தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
- இவர் நிதா அம்பானியின் கலாச்சார மைய கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். திரைப்பிரபலங்கள் பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து லைகா தயாரிப்பில் மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் 'லால் சலாம்' திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
திரையரங்கம்
இவ்வாறு பல படங்களில் பிசியாக நடித்து வரும் ரஜினி சமீபத்தில் மும்பையில் அம்பானியின் மனைவி நிதா அம்பானியின் கலாச்சார மைய கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிலையில், ரஜினி தன் நண்பர் அம்பானிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
ரஜினி பதிவு
அதில், மும்பையில் உலக தரம் வாய்ந்த பிரம்மாண்ட திரையரங்கம் உருவாக்கியதற்கு என் நண்பர் முகேஷ் அம்பானிக்கு நன்றிகளும் வாழ்த்துகளும். நிதா அம்பானி ஜி இது போன்ற தேசபற்று மிகுந்த மனதை மயக்கும் நிகழ்ச்சியை வழங்கியதற்காக உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் நன்றி சொல்ல என்னிடம் வார்த்தை இல்லை. இந்த திரையரங்கில் ஒரு நாடகத்தில் நடிக்க வேண்டும் என்று எனக்கு கனவு உள்ளது. அது விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- ஈஸ்வரியிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளை, ஆல்பத்தில் உள்ள போட்டோக்களுடன் ஒப்பிட்டு பார்த்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்த வழக்கில் மேலும் 43 சவரன் நகை மீட்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் லாக்கரில் இருந்த நகைகளை வேலைக்காரப் பெண் ஈஸ்வரி, டிரைவர் வெங்கடேசன் என்பவருடன் சேர்ந்து சிறிது சிறிதாக திருடி தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து ஈஸ்வரி, வெங்கடேசன் இருவரிடம் இருந்தும் 100 பவுன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.
இதுதவிர வெள்ளி மற்றும் வைர நகைகளும் மீட்கப்பட்டன. வேலைக்காரப் பெண்ணான ஈஸ்வரி திருடிய நகைகளை விற்று அதில் சோழிங்கநல்லூர் பகுதியில் ரூ.9 லட்சம் மதிப்பில் நிலம் வாங்கி போட்டிருப்பதும், குடும்பத்துக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்திருப்பதும் தெரியவந்தது.
கணவருக்கு காய்கறி கடை, மகளுக்கு மளிகை கடை ஆகியவற்றை வைத்துக் கொடுத்திருப்பதுடன் இன்னொரு மகளுக்கு திருமணம் செய்து வைத்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தேனாம்பேட்டை போலீசில் ஐஸ்வர்யா அளித்த புகாரில் குறிப்பிட்டிருப்பதை விட அதிக அளவில் கூடுதல் நகைகள் வேலைக்காரப் பெண்ணான ஈஸ்வரி வீட்டில் இருந்து மீட்கப்பட்டிருப்பதுதான் இந்த வழக்கில் போலீசாரை அடுத்த கட்ட விசாரணைக்கு தள்ளி இருக்கிறது.
இதையடுத்து திருடப்பட்ட நகைகள் தொடர்பாக கூடுதல் விவரங்களை திரட்ட போலீசார் திட்டமிட்டனர். இதற்காக ஐஸ்வர்யாவின் லாக்கரில் சோதனை நடத்தி அவரிடமும் விசாரிக்க போலீஸ் தரப்பில் முடிவு செய்யப்பட்டது. ஐஸ்வர்யா போலீசில் புகார் அளித்தபோது தனது சகோதரி சவுந்தர்யா திருமணத்தின்போது எடுத்த புகைப்படங்கள் அடங்கிய போட்டோ ஆல்பம் ஒன்றையும் கொடுத்துள்ளார். அந்த திருமணத்தின் போது ஐஸ்வர்யா அணிந்திருந்த விலை உயர்ந்த நகைகள் திருடப்பட்டிருந்தன. இதைதொடர்ந்து வேலைக்காரப் பெண் ஈஸ்வரியிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளை, ஆல்பத்தில் உள்ள போட்டோக்களுடன் ஒப்பிட்டு பார்த்தும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும், இந்த வழக்கில் மயிலாப்பூரைச் சேர்ந்த வினால்க் சங்கர் நவாலி என்பவரிடம் இருந்து 340 கிராம் நகை மீட்கப்பட்டது. திருட்டு நகைகளை வாங்கியதாக வினால்க் சங்கரை போலீசார் கைது செய்தனர். நேற்று ஐஸ்வர்யா வீட்டு வேலைக்கார பெண் ஈஸ்வரி மற்றும் டிரைவர் வெங்கடேசன் ஆகியோரை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதியளித்துது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட வீட்டின் பணியாளர் ஈஸ்வரி, கார் ஓட்டுநர் வெங்கடேசனிடம் நடந்த விசாரணையின் அடிப்படையில் மேலும் 43 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கு மேலும் சூடுபிடித்துள்ளது.
- ரஜினிகாந்த் அன்பு இல்லம் எனும் பெயரில் கான்கிரீட் தளத்துடன் வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
- நேற்று கிரகப்பிரவேஷம் செய்து அதற்கான சாவியை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
நடிகர் ரஜினிகாந்த் 47 ஆண்டாக கலைத்துறையில் சேவையாற்றி தமிழக மக்களை மகிழ்வித்து வருவதற்காகவும், இந்திய அரசின் திரைத்துறை சார்ந்த உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றமைக்காகவும் ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து சென்னை, நந்தனம் ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் மார்ச் மாதம் 26-ந்தேதி பாராட்டு விழாவும், நலிந்த ரசிகர் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவையும் நடத்த திட்டமிட்டு அதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நிகழ்ச்சி திடீரென தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணத்தால் ரத்து செய்யப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் செயலாளருமான சோளிங்கர் என்.ரவி அப்போது வெளியிட்ட அறிக்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் அவர்களிடத்தில் நேரில் வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.
அதனடிப்படையில் ரசிகர்களின் குடும்ப சூழலுக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்கப்பட்ட நலத்திட்ட உதவிகளுள் ரஜினிகாந்த் அன்பு இல்லம் எனும் பெயரில் கான்கிரீட் தளத்துடன் வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 5 பேருக்கு இந்த வீடு வழங்கப்பட்டுள்ளது. நேற்று கிரகப்பிரவேஷம் செய்து அதற்கான சாவியை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்தவர்களுக்கு பங்க் அமைத்து கொடுத்துள்ளனர். கணவனால் கைவிடப்பட்டு வருவாய் இன்றி தவித்து வந்த பெண்களுக்கு வீட்டிலிருந்தபடியே வருவாய் ஈட்ட ஊதுவத்தி தயாரிக்கும் எந்திரம், 2 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இட்லி மாவு அரைக்கும் எந்திரம், தையல் எந்திரம் 5 பேருக்கும், மேற்படிப்பு படிக்க இயலாமல் தவித்து வந்த 15 மாணவர்களுக்கு முழு கல்விக்கான நிதியும், உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான நிதியும், ஏழ்மையில் தவித்து வந்த குடும்ப தலைவிகளுக்கு குடிசை தொழில் தொடங்க நிதியும், மாற்றுத்திறனாளி ரசிகர்களுக்கு 3 சக்கர மோட்டார் வாகனங்களும் வழங்கப்பட்டது. 2 பேருக்கு கறவை மாடுகள் வழங்கினர்.
நலத்திட்ட உதவிகள் பெற்றுக்கொண்ட பயனாளிகள் நடிகர் ரஜினிகாந்த்துக்கு நன்றியை தெரிவித்து ஒருமுறையாவது தங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பை வழங்குமாறு மிகுந்த உருக்கத்துடன் கேட்டுக் கொண்டனர்.
- ஐஸ்வர்யா வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் வீட்டு வேலைக்காரி ஈஸ்வரி மற்றும் டிரைவர் வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர்.
- அதன்பின்னர் ரஜினி, தனுஷ் வீடுகளிலும் நகைகள் திருடப்பட்டதா என்றும் போலீசார் விசாரணை நடித்தி வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனது வீட்டு லாக்கரில் இருந்த நகைகள் சிறிது சிறிதாக திருடப்பட்டுள்ளதாகவும், இதில் வீட்டு வேலைக்காரி ஈஸ்வரி மற்றும் டிரைவர் வெங்கடேசனுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக தேனாம்பேட்டை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
ஈஸ்வரி, வெங்கடேசன் இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் ஐஸ்வர்யாவின் வீட்டில் கூட்டு சேர்ந்து அவர்கள் கொள்ளையடித்திருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஐஸ்வர்யா போலீசில் அளித்திருந்த புகாரில் குறிப்பிப்பட்டிருந்ததை விட கூடுதல் நகைகள் வேலைக்கார பெண் ஈஸ்வரி வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
100 பவுன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள், வீட்டு பத்திரம் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றி இருந்தனர். ஐஸ்வர்யாவின் வீட்டில் திருடிய நகைகளை விற்று தனது கணவர் அங்க முத்துவுக்கு அதிக முதலீட்டில் காய்கறி கடையை வைத்துக் கொடுத்த ஈஸ்வரி 2-வது மகளுக்கு மளிகை கடை வைத்து கொடுத்துள்ளார். முதல் மகளுக்கு திருமணம் செய்து வைத்திருப்பதுடன் சோழிங்கநல்லூரில் சுமார் 9 லட்சத்துக்கு நிலம் வாங்கி போட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வந்தது என்று கணவர் அங்கமுத்து, ஈஸ்வரியிடம் கேள்வி எழுப்பி உள்ளார். அப்போது அவர் தான் ஐஸ்வர்யா ரஜினியின் பினாமி என்றும் நாம் இருக்கும் வீடு கூட அவருடையது தான் என்றும் கூறி பந்தாகாட்டி ஏமாற்றி உள்ளார். இதைப்பற்றி வெளியில் யாரிடமும் சொல்லிவிடாதீர்கள் என்றும் குடும்பத்தாரை ஏமாற்றி உள்ளார்.
ஐஸ்வர்யாவின் லாக்கரில் இருந்து ஈஸ்வரி திருடிய நகைகளில் பெரும்பாலானவை ரஜினி சீதனமாக கொடுத்தவை ஆகும். இதுதவிர தனுஷ், ஐஸ்வர்யாவை திருமணம் செய்யும் போதும் சில நகைகளை பரிசாக வழங்கி இருக்கிறார். இப்படி கடந்த 18 ஆண்டுகளாக தான் சேகரித்த நகைகளையே ஐஸ்வர்யா லாக்கரில் வைத்து பாதுகாத்து வந்துள்ளார்.
அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் இந்த நகைகளை அணிந்து செல்லாமல் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே எடுத்து அணிவதை வழக்கமாக வைத்திருந்தார். இதையே சாதகமாக்கி ஐஸ்வர்யா, லாக்கர் சாவியை எடுத்து திறந்து நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக வாரி சுருட்டி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஐஸ்வர்யா வீட்டில் திருடப்பட்டதாக கூறப்பட்ட நகைகளை விட கூடுதல் நகைகளை ஈஸ்வரியின் வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றி உள்ளனர். இது போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. வேலைக்கார பெண் ஈஸ்வரி, ரஜினிகாந்த், தனுஷ் ஆகியோரது வீடுகளுக்கும் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது இருவரது வீடுகளிலும் அவர் நகைகளை திருடி இருக்கலாமோ? என்கிற சந்தேகம் வலுத்துள்ளது.
இதுதொடர்பாக ஈஸ்வரியிடம் மேலும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த விசாரணைக்கு பிறகு ஈஸ்வரியின் கைவரிசை பற்றி மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஜெயிலர் படத்தின் கதாப்பாத்திரங்கள் குறித்த தகவல் இணையத்தில் வைரலானது. அதில், இப்படத்தில் ரஜினி ஓய்வு பெற்ற ஜெயிலராகவும், ரம்யா கிருஷ்ணன் ரஜினியின் மனைவியாகவும், வசந்த் ரவி ஐபிஎஸ் அதிகாரியாகவும், தமன்னா மற்றும் சுனில் சினிமா நடிகர்களாகவும் நடித்து வருவதாக சினிமா வட்டாரத்தில் தகவல் பரவியது. மேலும் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் விரைவில் நிறைவு பெறவுள்ளதாகவும் இதில் கலகலப்பான ரஜினியை எதிர்பார்க்கலாம் எனவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் ஜெயிலர் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருவதாகவும், இதற்காக ரஜினி கேரளாவில் உள்ள கொச்சிக்கு விமானத்தில் சென்றுள்ளதாக தகவல் இணையத்தில் பரவி வருகிறது. படப்பிடிப்பு முடிந்த பின்னர் ரஜினி சென்னை திரும்புவார் எனவும் கூறப்படுகிறது.
- மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அபர்ணா பாலமுரளி.
- இவர் 'நித்தம் ஒரு வானம்' படத்தில் நடிகர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
மலையாள திரையுலகின் பிரபல நடிகையாக வலம் வரும் அபர்ணா பாலமுரளி தமிழில் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர், சர்வம் தாளமயம், தீதும் நன்றும், வீட்ல விசேஷம் போன்ற படங்களில் நடித்தார். 'சூரரைப்போற்று' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்த இவருக்கு அந்த படத்திற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
ரஜினிகாந்த் -அபர்ணா பாலமுரளி
கடந்த ஆண்டு வெளியான 'நித்தம் ஒரு வானம்' படத்தில் நடிகர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தார். இந்நிலையில், நடிகை அபர்ணா பாலமுரளி விமானத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
- விஜய்யின் பத்ரி, கமலின் தெனாலி, ரஜினிகாந்த்தின் படையப்பா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் லாவண்யா தேவி.
- இவர் தொழிலதிபர் பிரசன்னா என்பவரை திருமணம் செய்துள்ளார்.
1997 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான சூரியவம்சம் படத்தில் சொப்னா என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை லாவண்யா தேவி. அதன்பின்னர் விஜய்யின் பத்ரி, கமலின் தெனாலி, ரஜினிகாந்த்தின் படையப்பா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார். சின்னத்திரை சீரியல்களில் கவனம் செலுத்தி வரும் லாவண்யா, தற்போது அருவி சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் 44 வயதாகும் லாவண்யா தேவி, தொழிலதிபர் பிரசன்னா என்பவரை திருமணம் செய்துக் கொண்டுள்ளார். இவரின் திருமணம் திருப்பதியில் நடந்துள்ளது. இந்த திருமணத்தில் லாவண்யாவுடன் பணியாற்றும் சீரியல் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரகாக இருக்கும் ரஜினியின் ரசிகர் ஒருவர் கால்பந்து அகாடமி ஒன்றை தொடங்கியுள்ளார்.
- இதுகுறித்து ரஜினி வீடியோ ஒன்று வெளியிட்டு கால்பந்து விளையாட்டு குறித்து பேசியுள்ளார்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரகாக இருக்கும் ரஜினியின் ரசிகர் ஒருவர் கால்பந்து அகாடமி ஒன்றை தொடங்கியுள்ளார். இதற்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ரஜினி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழ்நாட்டில் வேர்ல்டு கிளாஸ் யூத் ஃபுட்பால் அகாடமி வருவது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமான விஷயம். ஃபுட் பாலை கிங் ஆஃப் கேம்ஸ் அப்படின்னு சொல்லுவாங்க. முதல்ல நம்ம இந்தியாவுல அது ரொம்ப பாப்புலரா இருந்தது.
அதன்பின்னர் கிரிக்கெட் வந்து அது டாமினேட் செய்து விட்டது. இப்போது கேரளா, கொல்கத்தாவில் ஃபுட் பால் அதிகம் விளையாடப்பட்டு வருகிறது. இப்போ ஃபுட் பாலோட விழிப்புணர்வு ரொம்ப அதிகமா இருக்கு. கடைசியாக நடந்த உலககோப்பை ஃபுட் பால் போட்டியை பார்க்காதவர்களே கிடையாது. கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி எல்லோருடைய ஹீரோவாக ஆகிட்டார்.
ஃபுட் பால் ஸ்கில்லோடு ஆடக்கூடிய ஒரு வீர விளையாட்டு, அற்புதமான விளையாட்டு. சின்னச் சின்ன நாடுகள் கூட ஃபுட் பால் விளையாடி உலக அளவுள்ள அந்த நாட்டை பற்றி தெரிய வச்சிருக்கு. ஆனால் இந்தியா ஃபுட் பால் விளையாட்டில் இன்னும் பேர் வாங்கவில்லை என்பது வருத்தமான விஷயம். இதற்கு யூத் ஃபுட் பால் அகாடமி நிச்சயம் வரவேற்கத்தக்கது. அவங்களுடைய இலக்கு சென்னையிலிருந்து மெஸ்ஸி, ரொனால்டு மாதிரியான விளையாட்டு வீரர்களை இந்த அகாடமி கொடுக்கணும். இதில் இருக்கக்கூடிய அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்'' என்று ரஜினி பேசியுள்ளார்.
- இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் எஜமான்.
- இப்படத்தின் நினைவுகளை தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் கடந்த 1993ம் ஆண்டு ரஜினி கதாநாயகனாக நடித்து வெளியான படம் எஜமான். இப்படத்தில் மீனா, ஐஷ்வர்யா, நெப்போலியன், மனோரம்மா, கவுண்டமணி, செந்தில், உதயகுமார் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர். ஏ.வி.எம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அன்றைய காலகட்டத்தில் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் எஜமான் படத்தின் தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ள கடிதம் ஒன்று இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 1993ம் ஆண்டு ரசிகை ஒருவர் எஜமான் படத்தை பார்த்துவிட்டு அதில் வரும் ரஜினியின் வானவராயன் கதாப்பாத்திரத்தை போன்று மாப்பிள்ளை தேடிவருவதாக கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இந்த கடித்தத்தை தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்திருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
A letter for #Yejaman
— AVM Productions (@avmproductions) March 16, 2023
In the 80's movie reviews from the public were rare and few. So, Shri M. Saravanan decided to ask people to send their reviews about #Yejaman by post. While a lot of letters came with so much for the film, one stood out. (1/4) pic.twitter.com/Td4zNxAZ05
- ராயப்பேட்டை மியூசிக் அகாடமியில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார்.
- அப்போது அவர், கடவுள் இல்லை என்று சொல்பவர்களை பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது என்று பேசினார்.
சென்னை ராயப்பேட்டை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற தனியார் அறக்கட்டளையின் 25-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் கடவுள் இல்லை என்று சொல்பவர்களை பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது என்று பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது, "கடவுள் இல்லை என்று சொல்பவர்களை பார்த்து எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. நமது உடலில் உள்ள இதயம் லப்டப் லப்டப் என்று பிறந்ததிலிருந்து சுமார் 70 வருடம் 80 வருடம் வரை அடித்துக் கொண்டிருக்கிறது. எந்த விஞ்ஞானியாவது இப்படி ஒரு மெக்கானிசத்தை செய்ய முடியுமா. அதேபோல் நமது உடலில் உள்ள ரத்தத்தில் உள்ள ஒரு துளியாவது விஞ்ஞானிகளால் செய்ய முடியுமா? என்று கேட்டார். இதையெல்லாம் பார்த்தும் ஒரு சிலர் கடவுள் இல்லை என்று கூறியதை பார்க்கும்போது எனக்கு அழுவதாக சிரிப்பதா என்று தெரியவில்லை என்று கூறினார். இவர் பேசிய இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- தமிழில் பிதாமகன் ,லவ்லி, விவரமான ஆளு, லூட்டி போன்ற பல படங்களை தயாரித்தவர் வி.ஏ.துரை
- இவர் சில தினங்களுக்கு முன்பு தனக்கு உதவி செய்யுமாறு விடியோ ஒன்றை வெளியிட்டு உதவி கேட்டார்.
விஜயகாந்த் நடித்த 'கஜேந்திரா' விக்ரம், சூர்யா நடித்த 'பிதாமகன்' உள்பட பல திரைப்படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ. துரை. மேலும் நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'பாபா' உள்பட ஒரு சில படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாகவும் இருந்து உள்ளார். சமீபத்தில் வி.ஏ. துரை வறுமையின் காரணமாக தவித்து வருவதாகவும் நீரிழிவு, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் இருப்பதாகவும் வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்து இருந்தார்.
தற்போது அவரது நண்பர்கள் அவரை ஒரு வீட்டில் தங்க வைத்து, தேவையான உதவிகள் செய்து வருவதாகவும் இருப்பினும் தனது சிகிச்சைக்கு அதிகம் பணம் தேவைப்படுவதால் திரையுலகினர் கொடுத்து உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலான நிலையில் தயாரிப்பாளர் விஏ துரையின் மருத்துவச் செலவுக்காக நடிகர் சூர்யா. கருணாஸ் உள்ளிட்டோர் 2 லட்சம் வழங்கினார்.
இந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு உதவி கோரிய தயாரிப்பாளர் வி.ஏ.துரையிடம் தொலைபேசியில் நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார். எதற்கும் கவலைப்பட வேண்டாம், நான் பார்த்துக்கொள்கிறேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்ததும் நேரில் சந்திப்பதாகவும் ரஜினிகாந்த் அவரிடம் கூறியுள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் ராகவா லாரன்ஸும் ரூ.5 லட்சம் வரை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்