search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94323"

    செல்பி எடுக்க முயன்ற கல்லூரி மாணவர்கள் ஏரி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டனர். #Selfie #StudentDeath
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர் என்.எஸ்.எஸ். முகாமிற்காக பெங்களூரு புறநகர் பகுதியான நெலமங்களாவுக்கு வந்தனர். நேற்று காலையில் நெலமங்களா தாலுகா தாபஸ்பேட்டை அருகே உள்ள தேவரஒசஹள்ளி கிராமத்தில் உள்ள ரேவண்ணா சித்தேஷ்வரா கோவிலுக்கு சென்று அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். அப்போது கோவில் அருகே உள்ள ஏரியின் கரையில் பூரண சந்திரா (வயது 17), ஷசாங்(17) மற்றும் முகமது மூர்தாஜ்(16) ஆகிய 3 பேரும் நின்று கொண்டு செல்போன் மூலம் ‘செல்பி’ புகைப்படம் எடுக்க முயன்றனர்.

    அப்போது அவர்கள் 3 பேரும் ஏரிக்குள் தவறி விழுந்தனர். நீச்சல் தெரியாததால் ஏரி தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார்கள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கல்லூரி விரிவுரையாளர் சிவண்ணா ஏரிக்குள் குதித்து மாணவர்களை காப்பாற்ற முயன்றார். அதற்குள் 3 மாணவர்களும் ஏரி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டனர். பின்னர் அவர்களுடைய உடல்கள் மீட்கப்பட்டன.
    திண்டுக்கல்லில் ஆபத்தை உணராமல் ஆன்லைன் சவாரியிலேயே செல்பி எடுக்கும் மாணவிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் ஆபத்தை உணராமல் ஆன்லைன் சவாரியிலேயே செல்பி எடுக்கும் மாணவிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விபரீத விளையாட்டுகளில் பங்கேற்பது என்றால் மாணவ-மாணவிகளுக்கு அலாதி பிரியம். குறிப்பாக செல்போனில் வரும் பல வித விளையாட்டுகளில் அதன் விபரீதம் தெரியாமல் கலந்து கொண்டு சிக்கலில் மாட்டிக் கொள்வது உண்டு.

    குறிப்பாக ஆனந்தமாக எடுக்கும் செல்பி போட்டோக்கள் கூட அவர்களின் உயிருக்கே உலை வைக்கும் வகையில் அமைந்து விடுகிறது. இதனால் தான் மலைப் பாங்கான இடங்கள், அருவிகள், நீரோடைகள், ஆறுகள் அருகில் செல்பி எடுக்க தடை விதிக்கின்றனர். இது தவிர வாகனங்களில் செல்லும் போது செல்பி எடுத்து அதனை தங்கள் ஸ்டேட்டசில் போடுவதை பெருமையாக நினைக்கின்றனர்.

    இது போன்ற ஆபத்தான விளையாட்டுகளை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது மாணவிகளும் கடைபிடித்து வருகின்றனர்.

    பைக்கில் செல்லும் போதே செல்பி எடுத்து தங்களது ஸ்டேட்டசாக போட்டு வருகின்றனர். எதிரில் வரும் வாகனங்கள் கூட தெரியாமல் ஆபத்தன பயணம் செய்கின்றனர்.

    போக்குவரத்து போலீசார் பொதுவாக மாணவிகள், இளம்பெண்கள் என்றால் அவர்களிடம் கெடுபிடி காட்டாமல் விட்டு விடுகின்றனர். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பைக்கில் செல்லும் போதே செல்பி எடுத்து செல்கின்றனர்.

    18 வயதுக்கு குறைவான பள்ளி மாணவ-மாணவிகளுக்கு லைசென்ஸ் கூட இருக்காது. இது போன்ற நபர்கள் பைக்கில் சென்றாலே அவர்களை பிடித்து போலீசார் அவர்களது பெற்றேரை வரவழைத்து எச்சரிக்கை விடுக்க வேண்டும். இல்லையெனில் செல்பி மோகத்தில் வாகனங்களில் சுற்றும் மாணவிகளால் மற்றவர்களுக்கு ஆபத்து ஏற்படும்.
    ஈரோடு மாவட்டத்தில் ஆற்றின் கரையோரம் நின்று வெள்ளத்தை செல்பி எடுத்த 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் காவிரி மற்றும் பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினை காண ஏராளமான பொதுமக்கள் கரையோரங்களில் குவிந்து வருகின்றனர்.

    ஆற்றில் செல்லும் தண்ணீரை செல்போன் மூலம் போட்டோ எடுப்பது, குழுவாக நின்று கொண்டு செல்பி எடுப்பது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    கரையோரங்களில் ஒரு சில பகுதிகள் ஆபத்தானவை என்பதால் போலீசார் அங்கு பொதுமக்கள் செல்ல தடை விதித்துள்ளனர். ஈரோடு கருங்கல்பாளையம் பாலம், பவானி பழைய பாலம் ஆகியவற்றில் வாகனங்கள், பொதுமக்கள் நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று போக்குவரத்திற்கு இடையூறாகவும், ஆற்றின் கரையோரத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு தடையை மீறி சென்று செல்பி எடுத்து பொதுமக்களுக்கு இடையூறாகவும் செயல்பட்டதாக மாவட்டம் முழுவதும் 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சித்தோடு போலீஸ் நிலையத்தில் 6 வழக்குகளும், பவானி, பங்களாப்புதூரில் தலா 1 வழக்கும், சத்தியமங்கலத்தில் 3 வழக்கும் கவுந்தப்பாடியில் 2 வழக்குகள் என மொத்தம் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் கூறியதாவது:-

    பொது மக்கள் யாரும் போலீஸ் தடை செய்துள்ள பகுதியில் நின்று போட்டோ எடுக்கக்கூடாது. அவ்வாறு மீறி போட்டோ (செல்பி) எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    கல்லணை கொள்ளிடம் பாலத்தில் அறிவிப்புகள் அனைத்தையும் கண்டு கொள்ளாமல் இளைஞர்களும், பெண்களும் கரை புரண்டு ஓடும் வெள்ள நீர் பக்கம் நின்று கொண்டு செல்பி எடுத்து வருகின்றனர். #Kollidambridge
    பூதலூர்:

    கல்லணையில் இருந்து தொடர்ந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் அதிக அளவில் தண்ணீர் திறந்து வெளியேறிக் கொண்டுள்ளது. கல்லணையை பார்ப்பதற்காக விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக வந்து கொண்டிருந்தது. அதற்கேற்பு போலீசாரும் பொதுப்பணித்துறையினரும் கூட்டத்தை ஒழுங்கு படுத்தும் பணிகளில் செயல்பட்டுவந்தனர்.

    பொதுப்பணித்துறை சார்பில் அணைகளில் அனைத்து பகுதிகளிலும் ஒலிபெருக்கி மூலம் அவ்வப்போது பாலத்தில் எட்டி பார்க்காதீர்கள், செல்பி எடுக்காதீர்கள், ஆற்றில் இறங்காதீர்கள் என்ற அறிவிப்பு செய்த வண்ணம் இருந்தனர். வழக்கம் போல் கல்லணையை பார்க்கும் ஆவலில் திருச்சி மற்றும் தஞ்சை பகுதியில் இருந்து வருபவர்கள் கார்கள், இரண்டு சக்கர வாகனங்களை இதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்தாமல் பாலத்தில் வந்து விடுவதால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

    கல்லணையில் ஆங்காங்கு ஆற்றில் இறங்குவது ஆபத்தானது, செல்பி எடுக்கக் கூடாது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அறிவிப்புகள் அனைத்தையும் கண்டு கொள்ளாமல் இளைஞர்களும், பெண்களும் கரை புரண்டு ஓடும் வெள்ள நீர் பக்கம் நின்று கொண்டு செல்பி எடுத்து வருகின்றனர். காற்றும் வேகமாக வீசும் நிலையில் கொள்ளிடம் பாலத்தில் நின்று இளம் பெண்கள் செல்பி எடுத்து வருகின்றனர். அறிவிப்புகளை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் தன்னிலை மறந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பொதுமக்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என தெரியாமல் போலீசாரும், அதிகாரிகளும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.  #Kollidambridge




    நீர்நிலைகளில் ‘செல்பி’ எடுப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

    மதுரை:

    அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கடந்த 9-ந் தேதி முதல் கனமழை பெய்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி வீதம் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்றும், காவிரி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள மாவட்டங்கள் உரிய முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தர விட்டுள்ளார். இதன் பேரில் மாவட்ட கலெக்டர்கள் நேரடி கண்காணிப் பில் வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

    அவர்கள் அதிகாரப்பூர்வமான தகவல்களை வழங்குவார்கள். வெள்ளம் சம்பந்தப்பட்ட தகவல்களை தண்டோரா மூலமும், ஊடகங்கள் மூலமாகவும் வருவாய்த்துறை வழங்கும். எனவே அதிகாரப்பூர்வமற்ற செய்திகளை நம்ப வேண்டாம்.

    கடந்த 2015-ம் ஆண்டில் நூற்றாண்டு காலம் இல்லாத அளவிற்கு மழை பெய்தது. அந்த மழையையே சமாளித்தோம். எப்பபடிப்பட்ட மழை வந்தாலும் அதை எதிர்நோக்க தயார் நிலையில் தமிழக அரசு இருக்கிறது. எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

    நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி மாவட்டங் களில் மலைப்பகுதிகளில் ஆங்காங்கே இன்றும், நாளையும் இரு தினங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    வங்காள விரிகுடாவின் வடக்கு பகுதியில் குறிப்பாக வட ஆந்திர கடலோர பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச்செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த எச்சரிக்கையை மீனவர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

    தாழ்வான பகுதியில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். குழந்தைகள் காவிரி கரையோர பகுதிகளில் குளிப்பது, விளையாடுவதற்கு அனுமதிக்கக் கூடாது. நீர் நிலைகளில் செல்போன் மூலம் ‘செல்பி’ போட்டோ எடுப்பதையும் மக்கள், இளைஞர்கள் தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

    காவிரி நதி நீர் கால்வாய்களில் நீர் வெளியேறும்போது செல்பி எடுத்தல், நீச்சல், மீன்பிடித்தல் போன்ற நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபடக்கூடாது அமைச்சர் உதயகுமார் கூறினார். #MinisterUdayakumar #Cauveryflood
    சென்னை:

    அமைச்சர் உதயகுமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    மத்திய நீர்வள ஆணையம் கடந்த 9-ந்தேதி கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1 லட்சம் கன அடி வீதம் இரு தினங்களில் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் எனவும், காவிரி ஆற்றுப்படுகைகளில் அமைந்துள்ள மாவட்டங்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்தது.

    அதனை தொடர்ந்து காவிரி கரையோர மாவட்டங்களான தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் அனைவருக்கும், மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    காவிரி நதி நீர் கால்வாய்கள் மற்றும் பிற நீர் நிலைகளில் நீர் வெளியேறும்போது செல்பி எடுத்தல், நீச்சல், மீன்பிடித்தல் மற்றும் பிற பொழுதுபோக்கு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



    தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆற்றங்கரையில் குழந்தைகள் குளிக்கவும் மற்றும் விளையாடவும் அனுமதிக்கக் கூடாது எனவும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் கட்டிவைக்க வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மக்கள் மற்றும் வாகனங்கள் செல்லும் உயர்மட்ட பாலங்கள் தவிர ஆற்றின் குறுக்கே செல்லும் பாதைகளை அடையாளம் காண்பதற்கு தரைமட்ட பாலங்களிலும் எச்சரிக்கை பதாகைகள் அமைக்க உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது

    பாதிப்பிற்குள்ளாகும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி நிவாரண முகாம்களில் தங்க வைத்திடவும் மாவட்ட ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேட்டூர் அணை உயரம்-120.2 அடி, கொள்ளளவு- 93.79 டி.எம்.சி, வினாடிக்கு 1,30,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து-வினாடிக்கு 1,35,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க ஒலிப்பெருக்கிகள் மற்றும் தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

    சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 359 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு 4 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஆங்காங்கே 13 மற்றும் 14-ந்தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார். #MinisterUdayakumar #Cauveryflood


    வனத்துறையினரின் எச்சரிக்கையையும் மீறி கொடிய வி‌ஷம் கொண்ட ராஜநாகத்தை பிடித்து செல்பி எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    காந்தல்:

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனபகுதிகளில் யானை, சிறுத்தை, புலி, கரடி, மான், கொடிய வி‌ஷம் கொண்ட ராஜநாகம் உள்ளிட்ட ஏராளமான வன உயிரினங்களும், அரியவகை மூலிகைகளும் அதிகளவில் உள்ளன. தற்போது பெய்த மழை காரணமாக வனப்பகுதி முழுவதும் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. இதனால் அடர்ந்த வனப்பகுதிகளில் இருந்து வன விலங்குகள் வெளியேறி சாலையோரங்களில் சுற்றி வருகிறது. எனவே வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் வனவிலங்குகளை துன்புறுத்தக்கூடாது. செல்பி, போட்டோ எடுக்கக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் வனத்துறையினரின் எச்சரிக்கையையும் மீறி கொடிய வி‌ஷம் கொண்ட ராஜநாகத்தை பிடித்து செல்பி எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுபற்றி விவரம் வருமாறு:-

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி வனப்பகுதியில் கணிசமான அளவு ராஜநாகம் உள்ளது. இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி சேரம்பாடி பஜாரையொட்டிய கண்ணம்வயல் செல்லும் சாலையில் ஒரு மூங்கில் மரத்தில் ராஜநாகம் படுத்து இருந்தது. அதிக வி‌ஷத்தன்மை கொண்ட அந்த ராஜநாகத்தை எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் சிலர் பிடித்து துன்புறுத்தி செல்பி எடுத்து அந்த படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து இருந்தனர்.

    இதுபற்றி கூடலூர் வன அலுவலர் திலீப்புக்கு புகார் வந்தது. அவர் சேரம்பாடி வன சரகர் மனோகரனுக்கு விசாரணை நடத்த உத்தரவிட்டார். அவர் ராஜநாகத்துடன் செல்பி எடுத்தவர்கள் யார்? என்று விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் சேரம்பாடியை சேர்ந்த மணிகண்டன்(27), ராமானுஜம்(45), தினேஷ்குமார்(28), யுகேஸ்வரன்(22), விக்னேஷ் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் குடிபோதையில் ஆபத்து தெரியாமல் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.
    ரெயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுப்பவர்களிடம் ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் மீண்டும் தவறு செய்தால் 6 மாதம் ஜெயில் தண்டனை என்றும் ரெயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. #RailwayStation #Selfie #Fine
    சென்னை:

    இளைஞர்களிடம் செல்போன் மூலம் ‘செல்பி’ எடுக்கும் மோகம் அதிகரித்தப்படி உள்ளது.

    ‘செல்பி’ எடுத்து அவற்றை உடனுக்குடன் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்பவர்கள், ஓடும் ரெயிலிலும் வாசலில் நின்று பயணம் செய்து கொண்டே செல்பி எடுக்க தவறுவதில்லை.

    சில பயணிகள் ரெயில் நிலையங்களில் தூரத்தில் ரெயில் வரும் போது, அந்த காட்சியை பின்னணியாகக் கொண்டு செல்பி எடுக்கிறார்கள். இத்தகைய செல்பி மோகத்தால் ரெயில்களிலும், ரெயில் நிலையங்களிலும் அடிக்கடி விபத்து நடக்கிறது.

    இந்த செல்பி விபத்துகளை தடுக்க தென்னக ரெயில்வே சில திட்டங்களை அமல்படுத்தியது. அதற்கு பலன் கிடைக்காததால், ஓடும் ரெயில்களிலும், ரெயில் நிலையங்களிலும் செல்பி எடுப்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் திட்டத்தை தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

    ரெயில் பெட்டிகளின் வாசல்களிலும், ரெயில் என்ஜின் முன்பும் நின்று செல்பி எடுப்பவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது. சேலம் டிவிசனில் இந்த அபராத திட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரெயில்வே ஸ்டேசன் மாஸ்டர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    அதில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் செல்பி எடுக்கும் பயணிகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமீப காலமாக இளைஞர்கள் மட்டுமின்றி பெண்கள் மற்றும் வயதானவர்களும் கூட செல்பி மோகத்தில் சிக்கியுள்ளனர்.

    ரெயில் பயண நினைவுகளை படமாக்க சிலர் செல்பி எடுப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர். முதலில் பயணிகளை எச்சரிக்கை செய்யவும், பிறகு அபராதம் விதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஒரே பயணி மீண்டும், மீண்டும் செல்பி எடுத்து பிடிபட்டால் அவருக்கு அபராதத்துடன் 6 மாதம் சிறை தண்டனை வாங்கிக் கொடுக்கவும் அந்த சுற்றறிக் கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக் கையைத் தொடர்ந்து நேற்று முதல் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கும் திட்டம் அமலுக்கு வந்தது.

    முதல் நாள் என்பதால் நேற்று செல்பி எடுத்த பயணிகள் எச்சரித்து விடுக்கப்பட்டனர். இன்று முதல் அபராதம் விதிக்கப்படுகிறது.#RailwayStation #Selfie #Fine
    ரெயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுப்பவர்களிடம் ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என்று ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வருகிறது. #RailwayStation #Selfie #Fine
    மதுரை:

    நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் ‘செல்பி’ கலாசாரம் வேகமாக பரவி வருகிறது. இதனை ஒரு விதமான மனநோய் என டாக்டர்கள் கூறுகின்றனர். இந்த மனநோய் ரெயில் பயணிகளையும் விட்டுவைக்கவில்லை.

    தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் கேமராக்கள், வீடியோ கேமராக்களுக்கு பதிலாக செல்போன்கள் மூலம் இத்தகைய காட்சிகளை படமாக்கி மலரும் நினைவுகளாக்க முயலுகின்றனர். ஆனால் சிலர் பாலங்களில் ரெயில் செல்லும் போதும், ரெயில் பெட்டியின் படிக்கட்டில் நின்றவாறும் ‘செல்பி’ எடுக்கின்றனர்.

    இதனால், ரெயில்வேயில் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. தண்டவாளத்தை கடக்கும்போது, ரெயிலில் அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையை விட தற்போது, ரெயில் வரும்போது, தண்டவாளத்தின் அருகில் இருந்து ‘செல்பி’ எடுக்கும் போது அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    இதனை தடுக்க, ரெயில் நிலையங்கள், தண்டவாள பகுதி, ரெயில் நிலைய வளாகம், பிளாட்பாரங்கள், ரெயில் படிக்கட்டுகள் ஆகியவற்றில் இருந்து ‘செல்பி’ எடுப்பவர்களுக்கு அபராதம் விதிக்க ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ரெயில் நிலையங்களுக்குள் ஆபத்தான முறையில் ‘செல்பி’ எடுப்பவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

    அதேபோல, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரெயில் நிலைய வளாகத்தில் குப்பை தொட்டியை தவிர, பிற இடங்களில் குப்பை கொட்டும் பயணிகளிடம் இருந்து ரூ.500 அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை கோட்டத்தில், அனைத்து ரெயில் நிலையங்களிலும் ‘செல்பி’ எடுப்பவர்கள், குப்பை கொட்டுபவர்களுக்கு உடனடியாக அந்த இடத்திலேயே அபராதம் விதிக்க பறக்கும் படை டிக்கெட் பரிசோதகர்கள் தயாராக உள்ளனர். ஆனால், இது குறித்த அறிவிப்பு பலகைகள் எதுவும் ரெயில் நிலையங்களில் வைக்கப்படவில்லை.  #RailwayStation #Selfie #Fine
    கோவாவில் அடுத்தடுத்து நடந்த இருவேறு சம்பவங்களில் தமிழக வாலிபர்கள் இருவர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ‘செல்பி’ எடுக்க முயன்ற போது இந்த பயங்கரம் நிகழ்ந்தது.
    பனாஜி:

    உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகளின் சொர்க்கபுரியாக கோவா மாநிலம் விளங்குகிறது. இங்குள்ள அழகான கடற்கரைகளை காண வரும் சுற்றுலா பயணிகள், அங்கு குளித்து மகிழ்ச்சியாக பொழுதுபோக்கி செல்கின்றனர்.

    இங்கு தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் ஆகஸ்டு வரையிலான காலகட்டத்தில் அலையின் வேகம் அதிகமாக இருப்பதால், இந்த காலகட்டத்தில் கடலில் குளிக்கவோ, நீர் விளையாட்டுகளில் ஈடுபடவோ சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது இல்லை. அதைப்போல இந்த ஆண்டும் கடந்த 1-ந்தேதி முதல் 4 மாதங்களுக்கு கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.



    இந்த நிலையில் தமிழகம் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த 8 பேர் கொண்ட ஒரு குழுவினர் கடந்த 16-ந்தேதி கோவாவுக்கு சுற்றுலா சென்றனர். அன்று மாலையில் அவர்கள் வடக்கு கோவாவின் பாகா கடற்கரைக்கு சென்றனர்.

    இதில் வேலூரை சேர்ந்த தினேஷ் குமார் ரங்கநாதன் (வயது 28) என்ற வாலிபர் உள்பட 3 பேர் கடலுக்குள் இறங்கி, அங்கிருந்த பாறை மீது ஏறினர். பின்னர் அந்த பாறையில் நின்றவாறு அவர்கள் தங்கள் செல்போன்களில் ‘செல்பி’ எடுத்துக்கொண்டு இருந்தனர்.

    அப்போது ராட்சத அலை ஒன்று திடீரென எழுந்து அவர்கள் 3 பேரையும் இழுத்துச்சென்றது. இதில் தினேஷ் குமார் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் நீந்தி கரை சேர்ந்தனர். தினேஷ் குமாரின் உடல் பின்னர் மீட்கப்பட்டது.

    இதைப்போல கோவாவுக்கு சுற்றுலா சென்றிருந்த தமிழகத்தை சேர்ந்த 4 பேர் கொண்ட மற்றொரு குழுவினர், அங்குள்ள சிக்குரியம் கடற்கரைக்கு நேற்று முன்தினம் காலையில் சென்றனர். அவர்களும் கடலுக்குள் இருந்த பாறைகளில் ஏறி ‘செல்பி’ எடுத்துக்கொண்டு இருந்தனர்.

    அப்போது கடலில் எழுந்த ராட்சத அலை ஒன்று சசிகுமார் வாசன் (33) என்ற வாலிபரை இழுத்துச்சென்றது. இதில் அவரும் கடலில் மூழ்கி இறந்தார். இதனால் சக நண்பர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

    இரு சம்பவங்களிலும் உயிரிழந்த 2 வாலிபர்களின் உடலும் பனாஜி அருகே உள்ள கோவா மருத்துவக்கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கோவா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவாவுக்கு சுற்றுலா சென்ற தமிழக வாலிபர்கள் 2 பேர் ‘செல்பி’ மோகத்தால் அடுத்தடுத்து கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
    நித்திரவிளையில் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்த மாணவர், செல்பி எடுக்கும்போது கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    நித்திரவிளை:

    நித்திரவிளையை அடுத்த கிடாரக்குழியை சேர்ந்தவர் ஜாண்சன். இவரது மனைவி ஸ்டெல்லா கிரேஸ். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஜாண்சனும், அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் மும்பையில் வசித்து வருகிறார்கள்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜாண்சன் இறந்துவிட்டார். அதன் பிறகு ஸ்டெல்லா கிரேஸ் குழந்தைகளுடன் மும்பையிலேயே வசித்து வந்தார். இவரின் மகன்கள் மும்பையில் படித்து வருகிறார்கள். தற்போது விடுமுறை விடப்பட்டதால் ஸ்டெல்லா கிரேஸ் 2 மகன்களுடன் சொந்த ஊரான கிடாரக்குழிக்கு வந்தார்.

    கடந்த வாரம் ஊருக்கு வந்த ஸ்டெல்லா கிரேசும், அவரது மகன்களும் நேற்று பொழியூர் கடற்கரைக்கு சென்றனர். அங்கு கடல் அலையை ரசித்தபடி இருந்தனர். பின்னர் அவர்கள் 3 பேரும் கடல் அலைகளில் அருகே நின்றபடி செல்போனில் செல்பி எடுத்தனர்.

    அப்போது திடீரென எழுந்த ராட்சத அலை ஸ்டெல்லா கிரேசையும், அவரது 2 மகன்களையும் இழுத்துச் சென்றது. அலையில் சிக்கிய மூவரும் அலறினர்.

    சத்தம் கேட்டு அப்பகுதியில் நின்ற மீனவர்கள் ஓடிச் சென்று அவர்களை காப்பாற்ற முயன்றனர். இதில் ஸ்டெல்லா கிரேசும் அவரது இளைய மகனும் மீட்கப்பட்டனர். மூத்த மகன் ஜோயல் அலையில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி நித்திரவிளை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இறந்து போன ஜோயலுக்கு 12 வயது ஆகிறது. அவர் 7-ம் வகுப்பு படித்து வந்தார். மும்பையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தபோது கடல் அலையில் சிக்கி மாணவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    ஆஸ்திரேலியாவின் வரலாற்று சிறப்புமிக்க கோட்டைப்பகுதியின் ஆபத்தான இடத்தில் செல்பி எடுக்க முயன்ற இந்திய மாணவர் தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியானார். #selfiekills
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவின் பெர்த் பகுதியில் படித்து வரும் இந்திய மாணவர் அங்கித் என்பவர் அவரது நண்பர்களுடன் அல்பானி அருகில் உள்ள புகழ்பெற்ற கோட்டைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு, தனது செல்பி மோகத்தால் கோட்டையின் அருகில் உள்ள ஆபத்தான மலைப் பகுதிக்கு சென்று செல்பி எடுக்க முயன்றுள்ளார்.



    அப்போது கால் தவறி விழுந்த மாணவர், கடலில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு ஹெலிகாப்டர் உதவியுடன் மாணவனின் உடலை மீட்டதாகவும், சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவிக்க இந்தியாவில் உள்ள மாணவரின் பெற்றோரை தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.



    பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 2 வருடங்களாக இந்த பகுதி மூடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. #selfiekills
    ×