search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடுமுறை"

    கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, நீலகிரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். #TNRain #SchoolClose
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் இன்று முதல் வருகிற 8-ந் தேதி வரை கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக 7-ந் தேதி மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதுவைக்கு ‘ரெட் அலர்ட்’ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

    இந்தநிலையில், கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை  அளிக்கப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (6/10/2018) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.

    இதேபோல, நீலகிரி மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
    புதுவை கவர்னர் மாளிகை எதிரே மனைவிக்கு விடுமுறையை நீட்டிக்க கோரி அரசு ஊழியர் குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டார்.
    புதுச்சேரி:

    புதுவை தேத்தாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முருகையன். பொதுப் பணித்துறையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பாலாம்பாள் (45). இவர், புதுவை நீதிமன்றத்தில் பல்நோக்கு ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    பாலாம்பாளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    இதனால் பாலாம்பாளுக்கு விடுப்பை நீட்டிக்க கோரி அவர் பணியாற்றும் நீதிபதி இல்லத்தில் அவரது கணவர் முருகையன் கேட்டு இருந்தார். ஆனால், அவர்கள் விடுமுறையை நீட்டிக்க மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் விடுமுறை அளிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாலாம்பாளின் கணவர் முருகையன் தனது 2 குழந்தைகள் மற்றும் உறவினருடன் புதுவை கவர்னர் மாளிகை எதிரே திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    பாலாம்பாளுக்கு விடுப்பை நீட்டிப்பு செய்ய வேண்டும், அவரை வேறு துறைக்கு பணி மாற்றம் செய்ய வேண்டும் என முருகையன் வலியுறுத்தினார்.

    இதையடுத்து அங்கு வந்த பெரியக்கடை போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட முருகையனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். #tamilnews
    மதுரையில் விடுமுறை என்று சகமாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியதை பள்ளி நிர்வாகம் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டான்.
    மதுரை:

    மதுரை மாவட்டம், அப்பன் திருப்பதி அருகே உள்ள காதக்கிணறு சண்முகவேல் நகரைச் சேர்ந்தவன் நவீன் பாரதி (வயது 14). அங்குள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

    நவீன் பாரதியின் தந்தை இளங்கோவன் ‘கொரியர்’ நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது தாயார் தேவி மாநகராட்சி பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் நவீன் பாரதி கடந்த வெள்ளிக்கிழமை “இன்று பள்ளிக்கு விடுமுறை” என்று சக மாணவர்களுக்கு செல்போன் வாயிலாக குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப்பி உள்ளார். இதனை நம்பிய பலரும் அந்த செய்தியை பார்வேர்டு செய்து உள்ளனர். இதனால் அன்றைய தினம் 50-க்கும் மேற்பட்டோர் பள்ளிக்கு வரவில்லை.

    பள்ளி நிர்வாகம் இது தொடர்பாக விசாரித்த போது நவீன்பாரதி குறுஞ்செய்தி அனுப்பிய விவரம் தெரியவந்தது. இதையடுத்து தலைமை ஆசிரியர் சம்பந்தப்பட்ட மாணவனின் பெற்றோரை அழைத்து கண்டித்தார்.

    இந்த நிலையில் பள்ளிக்கு சென்ற நவீன் பாரதியை ஆசிரியர்கள் மட்டுமின்றி சக மாணவர்களும் திட்டினர். இதனால் மனவேதனை அடைந்த நவீன்பாரதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

    இது குறித்து அவனது தந்தை இளங்கோவன் கொடுத்த புகாரின் பேரில் அப்பன் திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 6 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. #HeavyRain #SchoolCollege #Holiday
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கூடலூர்-ஊட்டி சாலை, கேரள மலைப்பாதைகளில் மண் சரிவு ஏற்பட்டது. தேன் வயலில் உள்ள வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆதிவாசி கிராமத்தில் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    தொடர் மழையால் அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, அப்பர் பவானி, முக்குருத்தி, பைக்காரா, கிளண்மார்கன் அணைகள் நிரம்பி திறக்கப்பட்டன. இதனால் மாயார் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தெங்குமரஹாடா பகுதி மக்கள் ஆற்றை கடந்து பவானிசாகர் வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழையால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

    கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 6 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) கலெக்டர் இன்னசென்ட் திவ்யா விடுமுறை அளித்துள்ளார்.   #HeavyRain #SchoolCollege #Holiday
    நெல்லை, குமரி மாவட்டங்களில் பலத்த மழை காரணமாக தண்டவாளத்தில் மண்சரிந்தது. இதனால் பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. மழை காரணமாக குமரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. #HeavyRain
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய பலத்த மழை பெய்தது. நேற்று காலையிலும் தொடர்ந்து மழை பெய்தது. தொடர் மழையின் காரணமாக பாபநாசம், சேர்வலாறு, ராமநதி, கடனாநதி ஆகிய அணைகளுக்கு தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 124 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 137 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் 13 அடி உயர்ந்தது.



    அணையில் இருந்து 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டதால் தாமிர பரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றங்கரையோர பகுதியில் உள்ள பல மரங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.

    நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் கருப்பந்துறை ஆற்றுப்பாலத்தை தொடும் அளவுக்கு தண்ணீர் ஓடுகிறது. குறுக்குத்துறை தாம்போதி பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.



    தொடர் மழை காரணமாக, குண்டாறு, அடவிநயினார், கொடுமுடியாறு ஆகிய அணைகள் நிரம்பி உள்ளன. கருப்பாநதி, கடனாநதி ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளன.

    குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்க நேற்று 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு அதிகரித்தது.

    இந்த நிலையில் புலியருவியில் குளித்தபோது வெள்ளத்தில் சிக்கி சிவகாசியை சேர்ந்த பிரபு (வயது 39) என்ற சுற்றுலா பயணி இறந்தார்.

    செங்கோட்டை அருகே கேரள மாநிலம் தென்மலையில் பலத்த மழை பெய்தது. நேற்று அதிகாலையில் திடீரென தென்மலை ரெயில் குகை நுழைவுவாயிலில் ராட்சத பாறை விழுந்து குகை பாதையை மூடிவிட்டது. மேலும் அப்பகுதியில் இருபுறமும் மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் விழுந்தது.

    தண்டவாளத்தில் விழுந்து கிடக்கும் பாறை மற்றும் மண்சரிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் நேற்று காலை நெல்லையில் இருந்து செங்கோட்டை வழியாக கொல்லம் செல்லும் ரெயில் ரத்து செய்யப்பட்டது. மேலும் நெல்லையில் இருந்து செங்கோட்டை வழியாக இரவு 12.30 மணிக்கு பாலக்காடு செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலும் ரத்தானது.

    இதேபோல் குமரி மாவட்டத்திலும் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் இரணியல் ரெயில் நிலையம் அருகில் நேற்று அதிகாலையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக குருவாயூரில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தப்பட்டது.

    பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு தண்டவாளத்தில் கிடந்த மண்ணை அப்புறப்படுத்தும் பணி நடந்தது. தொடர்ந்து மழை பெய்து வந்ததாலும், அதிக அளவில் மண் மூடி இருந்ததாலும் சீரமைப்பு பணியில் சிரமம் ஏற்பட்டது. மண் சரிவு காரணமாக பல ரெயில்கள் நடு வழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    நாகர்கோவிலில் இருந்து புறப்படவேண்டிய 9 ரெயில் கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை-கொல்லம் செல்ல வேண்டிய அனந்தபுரி எக்ஸ்பிரஸ், திருச்சி- திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நாகர்கோவில் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன.

    நெடுந்தூர பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கும் பொருட்டு மாற்று ஏற்பாடாக, கொல்லம்- சென்னை இடையேயான அனந்தபுரி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம்- திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஆகியவை நேற்று மாலை நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு சென்றன. கன்னியாகுமரி-மும்பை எக்ஸ்பிரஸ் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது.

    தொடர்மழை காரணமாக குமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் நெல்லை மாவட்டத்தில் தென்காசி வட்டார பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
    ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டு வருகிற 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். #salemcollectorrohini
    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:-

    சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளான தமிழ்மாதம் ஆடி-18ம் நாளை முன்னிட்டும் மற்றும் ஆடி-18 ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டும் வருகிற 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர்  விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. 

    இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவலர்கள் கவனிக்கும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள மாவட்ட மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர் களோடு செயல்படும். இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) அன்று பணி நாளாக செயல்படும். 

    இவ்வாறு மாவட்ட கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார். #salemcollectorrohini
    ரம்ஜான் பண்டிகையையொட்டி, சட்டசபைக்கு நாளை விடுமுறை விடப்படுகிறது. தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது. இதை தொடர்ந்து 10 நாட்கள் சட்டசபை கூட்டத்துக்கு விடுமுறை விடப்படுகிறது.#TNAssembly
    சென்னை:

    தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த மே மாதம் 29-ந்தேதி தொடங்கியது.

    இதுவரை வனம், சுற்றுச்சூழல் துறை தொடர்பான விவாதம் முதல்நாள் நடந்தது. இதையடுத்து பள்ளிக்கல்வி, உயர்கல்வி, மின்சாரம், மதுவிலக்கு, மீன், பால்வளம், கால்நடை, நகராட்சி, உள்ளாட்சி, சட்டம், சிறை, நீதி நிர்வாகம், சத்துணவு, மாற்றுத்திறனாளி, தொழில் துறை, சிறு-குறு தொழில், கைத்தறி, கதர் கிராம தொழில், நெடுஞ்சாலை, பொதுப்பணி, அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு அதற்கான விவாதங்கள் நடந்துள்ளன.

    எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதுதவிர ஸ்டெர்லைட், காவிரி பிரச்சனை, எஸ்.வி.சேகர் விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சனைகளும் சட்டசபையில் எழுப்பப்பட்டு காரசார விவாதங்கள் நடந்தன. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

    இன்று 13-வது நாளாக சட்டசபை கூட்டம் நடந்தது. இதில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைகளுக்கான மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கான விவாதத்தில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


    உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் விஜய பாஸ்கர் பதில் அளித்து பேசினார். புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் காரசார விவாதங்களும் இடம்பெற்றன.

    ரம்ஜான் பண்டிகையையொட்டி, சட்டசபைக்கு நாளை (வெள்ளிக்கிழமை) விடுமுறை விடப்படுகிறது. தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது.

    இதையடுத்து, வருகிற 24-ந்தேதி வரை தமிழக சட்டசபை கூட்டம் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தொடர்ந்து 10 நாட்கள் சட்டசபை கூட்டத்துக்கு விடுமுறை விடப்படுகிறது.

    மீண்டும் சட்டசபை 25-ந்தேதி கூடுகிறது. இதில் தொடர்ந்து செய்தி, சுற்றுலா, காவல்துறை, தீயணைப்பு, வருவாய் துறை, சுற்றுசூழல், வணிகவரி, போக்குவரத்து, ஆதிதிராவிடர், தமிழ் வளர்ச்சி, பொதுத்துறை, சட்டமன்றம் உள்ளிட்ட மற்ற துறைகளுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறுகின்றன.

    இந்த துறைகள் சார்பாக பல்வேறு புதிய அறிவிப்புகளும் வெளியாக உள்ளன. வருகிற ஜூலை 9-ந்தேதி இந்த சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவுபெறுகிறது. #TNAssembly
    ×