என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 94341"
புதுடெல்ல:
மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அவர்களுடன் மத்திய அரசு பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும், தீர்வு ஏற்படாததால் புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அறிவித்தார்.
பிரதமரின் இந்த அறிவிப்பை விவசாய சங்கங்கள் வரவேற்றுள்ள போதிலும், உடனடியாக தங்கள் போராட்டத்தை முடித்து கொள்ள அவர்கள் தயாராக இல்லை. 3 வேளாண் சட்டங்களை வருகிற பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் முறைப்படி வாபஸ் பெறும்வரை தங்களது போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்தனர்.
மேலும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து விவசாயிகளின் போராட்டத்தை ஒருங்கிணைத்து வரும் சம்யுக்த கிஷான் மோர்ச்சா அமைப்பு சார்பில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் விவசாய சங்கங்களை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அந்த அமைப்பின் தலைவர் தர்ஷன்பால் கூறும்போது, பிரதமரின் அறிவிப்பை வரவேற்கிறோம். ஆனால் எங்கள் போராட்டத்தை முடித்துகொள்ள போவது இல்லை. ஏனெனில் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது. இன்றுவரை அது செயல்படுத்தப்படவில்லை. இதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். பாராளுமன்றத்தில் இந்த சட்டங்களை வாபஸ் பெற்ற பின்னரே எங்கள் போராட்டத்தை நிறைவு செய்வோம் என்றார்.
இந்த நிலையில் விவசாய சங்கங்கள் இன்று மீண்டும் ஆலோசனை நடத்துகிறது.
வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும்வரை பாராளுமன்ற குளிர்காலத் கூட்டத் தொடரின்போது தினசரி பாராளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தப்படும் என்று விவசாய அமைப்புகள் சமீபத்தில் அறிவித்து இருந்தன.
இன்றைய கூட்டத்தில் பாராளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
இதையும் படியுங்கள்... 4 கிலோ வரை உணவு உண்ணும் சாப்பாட்டு ராமனுக்கு ஓட்டல் செல்ல தடை
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, தனது தாயார் ராஜாத்தி அம்மாள் மற்றும் கணவர் அரவிந்தனுடன் நேற்று காலை கருணாநிதி நினைவிடத்தில் வெற்றி சான்றிதழை வைத்து ஆசி பெற்றார். அப்போது கனிமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் கருணாநிதியின் நினைவுகளை மனதில் தாங்கி கொண்டு, தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் நான் பெற்றிருக்கும் வெற்றியை அவரது காலடியில் சமர்ப்பிக்க வந்துள்ளேன். எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கும், தி.மு.க. நிர்வாகிகளுக்கும், கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
என் மீது நம்பிக்கை வைத்து என்னை வெற்றிபெற செய்த தூத்துக்குடி வாக்காளர்களுக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன். தொடர்ந்து பாராளுமன்றத்திலும் அவர்களது குரலாக ஒலிப்பேன். அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அத்தனை முயற்சிகளையும் முன்வைப்பேன். தமிழகம் மற்றும் கேரளா மக்கள் மாற்று சிந்தனை உள்ளவர்கள் என நிரூபித்து விட்டார்கள். தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் உழைப்பு இன்னும் உயிரோடு இருக்கிறது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் டி.ஆர்.பாலு, காஞ்சீபுரம் வேட்பாளர் ஜி.செல்வம், மயிலாடுதுறை வேட்பாளர் ராமலிங்கம், தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திருவாரூர் வேட்பாளர் பூண்டி கலைவாணன், திருப்போரூர் வேட்பாளர் இதயவர்மன் உள்ளிட்டோரும் தங்களது சான்றிதழ்களை கருணாநிதி நினைவிடத்தில் வைத்து ஆசி பெற்றனர்.
மேலும் கனிமொழி எம்.பி. அண்ணா அறிவாலயத்தில் தன்னுடைய வெற்றி சான்றிதழை மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
தேனி:
தமிழகத்தில் கடந்த மாதம் 18-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியகுளம் அருகே வடுகபட்டியில் உள்ள வாக்குச்சாவடி எண் 197-ல் மாதிரி வாக்குப்பதிவு முடிந்த பின்னர் யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் விவி பேட் கருவியில் இருந்து ஒப்புகை சீட்டை அகற்றாமல் தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்தது.
இது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த மையத்தில் 1405 வாக்குகள் உள்ளன. இதில் ஆண்கள் 702 பேரும், பெண்கள் 703 பேரும் வாக்காளர்களாக உள்ளனர். இதில் ஆண்கள் 450 பேர், பெண்கள் 454 பேர் என 904 பேர் வாக்களித்திருந்தனர்.
இதே போல ஆண்டிப்பட்டி அருகே பாலசமுத்திரம் வாக்குச்சாவடி எண் 67-ல் மாதிரி வாக்குப்பதிவு அழிக்காமலும், ஒப்புகை சீட்டை அகற்றாமலும் வாக்குப்பதிவு நடந்தது. இந்த மையத்தில் 644 ஆண்கள், 611 பெண்கள் என 1255 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இதில் 523 ஆண்கள், 500 பெண்கள் என மொத்தம் 1023 பேர் வாக்களித்திருந்தனர். இதனால் இந்த இரண்டு வாக்குச்சாவடிகளிலும் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதற்காக 2 வாக்குச்சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளார்கள். தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் இன்று மாலையே வாக்குச்சாவடிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவி பேட் எந்திரம் அனுப்பி வைக்கப்பட்டது. மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான பல்லவி பல்தேவ் வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்திய பாராளுமன்ற தேர்தல், பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது. முதல் 3 கட்ட தேர்தலில் 302 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தள்ள நிலையில் இன்று (திங்கட்கிழமை) 9 மாநிலங்களில் 72 தொகுதிகளில் நான்காம் கட்ட தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தலில் 12 கோடியே 79 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றுள்ளனர். 961 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை இந்த வாக்காளர்கள் 1 லட்சத்து 40 ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குப்பதிவு செய்து தீர்மானிக்கின்றனர்.
இன்று தேர்தலை சந்திக்கிற பீகாரின் 5, ஜார்கண்டின் 3, மத்திய பிரதேசத்தின் 6, மராட்டியத்தின் 17, ஒடிசாவின் 6, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தின் தலா 13, மேற்கு வங்காளத்தின் 8, காஷ்மீரின் 1 (அனந்தநாக் தொகுதியில் குல்காம் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மட்டும்) தொகுதிகளில் மாநில போலீஸ் படையினரும், மத்திய துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பதற்றமான இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாராளுமன்ற தேர்தலுடன் ஒடிசா மாநில சட்டசபை தேர்தலில் 42 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
4-வது கட்ட பாராளுமன்ற தேர்தலில் மராட்டியம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 3 பெரிய மாநிலங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மராட்டிய மாநிலத்தில் மும்பை மாநகரில் உள்ள 6 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடக்கிறது.
மும்பை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களத்தில் உள்ள நடிகை ஊர்மிளாவுக்கும், பா.ஜனதா கட்சி வேட்பாளர் கோபால் ஷெட்டிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. வட மத்தி மும்பையில் மறைந்த முன்னாள் மத்திய மந்திரி பிரமோத் மகாஜனின் மகள் பூனம் மகாஜனுக்கும்(பா.ஜனதா), மற்றொரு மறைந்த முன்னாள் மத்திய மந்திரியான சுனில் தத்தின் மகள் பிரியா தத்துக்கும் (காங்கிரஸ்) இடையே ‘நீயா, நானா?’ என்கிற அளவில் போட்டி அமைந்துள்ளது.
மத்திய பிரதேசத்தைப் பொறுத்தமட்டில், முதல்-மந்திரி கமல்நாத் 9 முறை வென்ற சிந்த்வாரா நாடாளுமன்ற தொகுதியில் அவரது மகன் நகுல் காத் (காங்கிரஸ்) போட்டியிடுகிறார்.
முதல்-மந்திரி பதவியை தக்கவைப்பதற்காக கமல்நாத், சிந்த்வாரா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். தந்தையும், மகனும் ஒரே நாளில் ஒரே தொகுதியில் தேர்தலை சந்திக்கின்றனர் என்பது முக்கிய அம்சம்.
பீகாரில் பெகுசாராய் தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. இங்கு பா.ஜனதா வேட்பாளராக மத்திய மந்திரி கிரிராஜ்சிங்கும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளராக மாணவர் சங்க தலைவர் கன்னையா குமாரும் மோதுகின்றனர். இதே மாநிலத்தின் தர்பங்கா தொகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வென்றவர்.
மேற்கு வங்காளத்தில் மத்திய மந்திரி பாபுல் சுப்ரியோவும் (பாரதீய ஜனதா கட்சி), நடிகை மூன்மூன்சென்னும் (திரிணாமுல் காங்கிரஸ்) அசன்சோல் தொகுதியில் கடும் போட்டியில் உள்ளனர்.
இந்த 4-வது கட்ட தேர்தலுக்காக தலைவர்கள் பிரதமர் நரேந்திரமோடி, அமித்ஷா (பா.ஜனதா), தேவேந்திர பட்னாவிஸ் (பா.ஜனதா), ராகுல் காந்தி (காங்கிரஸ்), பிரியங்கா (காங்கிரஸ்), அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி), மாயாவதி (பகுஜன் சமாஜ்), சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ்), நவீன் பட்நாயக் (பிஜூஜனதாதளம்), உத்தவ் தாக்கரே (சிவசேனா) உள்ளிட்டவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு, ஆதரவு திரட்டினர்.
நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு பிரசாரம் ஓய்ந்தது.
இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு முடிகிறது.
இன்று ஓட்டுப்பதிவு நடக்கிற 72 தொகுதிகளில் 45 தொகுதிகளை பாரதீய ஜனதா கட்சி கடந்த 2014 தேர்தலில் கைப்பற்றி இருந்தது. இதைத் தக்க வைத்தாக வேண்டிய நெருக்கடி, அந்த கட்சிக்கு உள்ளது.
பீகார், ஜார்கண்ட், காஷ்மீர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய ஏழு மாநிலங்களில் 51 தொகுதிகளில் 5-வது கட்ட தேர்தல் மே மாதம் 6-ந் தேதி நடக்கிறது. #LokSabhaElection #4thPhase #BJP #Congress
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில், நிலையான கண்காணிப்பு மற்றும் தேர்தல் பறக்கும் படை குழுக்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி கூறியதாவது:-
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி, ஆணையத்தின் உத்தரவின்படி, திருவள்ளுர் மாவட்டத்தில் 30 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் 30 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் முடியும் வரை பணியிலிருக்க வேண்டும்.
நிலையான கண்காணிப்பு குழுவில் ஒரு மாஜிஸ்திரேட் அந்தஸ்து வழங்கப்பட்ட அலுவலர் தலைமையில் மூன்று காவல் துறையினர் மற்றும் வீடியோ கிராபர் ஒருவர் உள்பட 5 பேர் கொண்ட குழு பணி செய்ய வேண்டும்.
தேர்தல் பறக்கும்படை குழுவில் கூடுதலாக ஒரு காவலரும் கொண்ட 6 பேர் பணி செய்ய வேண்டும். இக்குழுக்களின் முக்கிய பணிகளாக தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறான செயல்பாடுகளை கண்காணித்து கிடைக்கப் பெறும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,
முக்கியமாக வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் நோக்கத்தில் ஆதாரம் இல்லாமல் ரொக்க பணம் ரூ. 50 ஆயிரத்திற்கு மேல், ரூ. 10 ஆயிரத்திற்கு மேல் மதிப்புள்ள, வெளிமாநில மதுவகைகள், எரிசாராயம், கள்ளச்சாராயம் ஆகியவற்றை கொண்டு சென்றால், முறைப்படி பறிமுதல் செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உரிமம் இல்லாத மற்றும் உரிமம் பெற்ற ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கொண்டு செல்வதை கண்காணித்து பிடித்து முறைப்படி பறிமுதல் செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கண்காணித்து, குற்றம் நடைபெறுவதை தடுத்தல், அனைத்து பெரிய ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றை வீடியோ பதிவு செய்து கண்காணித்தல் வேண்டும்.
அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும் பொருட்டு, தேர்தல் பறக்கும் படை குழுவினர் பறிமுதல் செய்த பணம் மற்றும் பொருட்களை படிவம் ஏ-யின் மூலமும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையினை படிவம் பி-யின் மூலமும் தெரிவித்தல் வேண்டும். பெண்களை சோதனை செய்யும்போது ஒரு பெண் அலுவலர் மூலமாக மட்டுமே சோதனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 147 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பிஜூ ஜனதாதளம் கட்சி 118 தொகுதிகளில் வெற்றி பெற்று, அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் முதல்-மந்திரியாக உள்ளார். அதேபோல 21 பாராளுமன்ற தொகுதிகளில் 20 இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றது.
நடைபெற உள்ள தேர்தலிலும் தனது கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என்று கட்சியின் தலைவரும், முதல்-மந்திரியுமான நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
மாநிலத்தில் மொத்தம் உள்ள 147 சட்டமன்ற தொகுதிகளிலும், 21 பாராளுமன்ற தொகுதிகளிலும் பிஜூ ஜனதா தளம் வேட்பாளர்களை நிறுத்தும். நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் எங்கள் கட்சி அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு நவீன் பட்நாயக் கூறினார். #NaveenPatnaik #LokSabha
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்